Tap a kural to view commentary

Chapters

அறத்துப்பால் · Virtue

கடவுள் வாழ்த்து Chapter 1 · The Praise of God

Kurals 1–10 · பாயிரவியல் (Prologue)

Prev Page 2 of 2 Next

பொருள் உரை · Detailed Explanation — Kural 1

திருக்குறள் உரையும் பிறையும் 1. கடவுள் வாழ்த்து குறள் 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. பொருள் எழுத்துக்களெல்லாம் அகர ஓசையை முதலாவதாக்கொண்டே தொடங்குகின்றன. அது போலவே, இந்த உலகத்தில் ஆதி பகலவனான ஒளியை முதலாவதாகக் கொண்டே உயிர்கள் எல்லாம் உண்டானது. நேர் பொருள் அகர : "அ" என்ற அகர ஓசை உடைய எழுத்து முதல் எழுத்தெல்லாம் : எல்லா எழுத்துகளுக்கும் (எல்லா மொழிகளுக்கும்) முதலாவதாக இருக்கிறது. ஆதி பகவன் : ஆதியில் முதல்முதலாக தோன்றிய பகலவனான சூரிய ஓளி முதற்றே உலகு : உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் முதன்மையானது. விளக்கம் : இந்த பூமி, கோள்கள், சூரியக் குடும்பம், நட்சத்திரங்கள், பால்வெளி மண்டலம், அண்டங்கள், பேரண்டம் மற்றும் உயிர்கள் அனைத்தும் “ஒளியிலிருந்தே” தோன்றியுள்ளன. உலகிலுள்ள அனைத்து மதங்களும் “ஒளி” தான் அனைத்திற்கும் மூலாதாரம் என்று உறுதியாக கூறுகின்றன. இதைத்தான் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளும் தெரிவிக்கின்றன. இறைவன் ஒளியானவன் கிருஸ்துவ மதத்தின் புனித நூலான பைபிளில் ஒளியைப் பற்றி வேத வசனங்கள் "தேவன்: 'வெளிச்சம் உண்டாகக்கடவது' என்றார், வெளிச்சம் உண்டாயிற்று." (ஆதியாகமம் அத்தியாயம் 1 வசனம் 3) தேவன் “படைப்பின் முதல் நாளில், முதல் கட்டளையே, ஒளியை உண்டாக்கியது தான்.” என்று சொல்லப்பட்டுள்ளது. அதே போன்று "இயேசு ஜனங்களை நோக்கி: 'நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்' என்றார்." (யோவான் அத்தியாயம் 8 வசனம் 12) அதாவது இறைவன் ஒளியாக இருக்கிறார். இறைவனின் வழிகளைப் பின்பற்றுபவர்கள் ஜீவ ஒளியான இறைவனின் உயிர் ஒளியில் கலந்திடுவார்கள் என்கிறார். முஸ்லீம்களின் புனித நூலான திருக்குர்ஆனில் ஒளியைப் பற்றி வேத வசனங்கள் "அல்லாஹ் வானங்களுக்கும் பூமிக்கும் ஒளியாவான்... “ அன்-நூர் அத்தியாயம் 24 வசனம் 35 அதாவது, இந்த அண்டங்களின் தோற்றமும். இயக்கமும் இறைவனின் ஆதி ஒளியிலிருந்தே தொடங்கின என்பதை இந்த வசனம் அழகாக சொல்கிறது. அதே போன்று குர்ஆன் ஸூரத் அஸ்-ஸுமர், வசனம் 39:69 - ல் "பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்..." என்று சொல்கிறது. அதாவது இறைவன் தான் ஒளி, ஒளி தான் இறைவன் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. இந்து மதத்தின் புனித நூலான பகவத் கீதையில் ஒளியைப் பற்றிய வேத வசனங்கள் "அகில உலகத்தின் இருளைப் போக்கும் சூரியனின் ஒளியும், சந்திரனின் ஒளியும் என்னுடையதே என்று அறிவாயாக." என்று இறைவன் கண்ணபரமாத்மா சொல்கிறார். பகவத் கீதை அத்தியாயம் 15 வசனம் 12 அதாவது உலக இயக்கத்தின் ஆதி சக்தியாக இருப்பது ஒளி தான் என்று பரம்பொருளான கண்ணபரமாத்மா சொல்கிறார். இதே போன்று "வானத்தில் ஒரே சமயத்தில் ஆயிரம் சூரியன்கள் உதித்தால் எப்படிப்பட்ட பேரொளி தோன்றுமோ, அத்தகைய ஒளிப்பிழம்பாக இறைவனின் ஒளி இருந்தது”. பகவத் கீதை அத்தியாயம் 11 வசனம் 12 அதாவது “பரம்பொருளான இறைவனின் தோற்றம் என்பது ஒளி தான்” என்று உறுதியாக சொல்லப்படுகிறது. சீக்கிய மதத்தின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பில் ஒளியைப் பற்றிய வேத வசனம் “முதலில் இறைவன் ஒளியைப் படைத்தான்; அந்த ஒளியிலிருந்து எல்லா உயிர்களும் தோன்றின” என்று படைப்பின் மூலம் ஒளி என்பதை எடுத்துரைக்கிறது. குரு கிரந்த சாஹிப்பின் - 1349 ம் பக்கத்தில் சொல்லப்பட்ட வசனம் புத்த மதத்தின் புனித நூலான தீக நிகாயாவில் ஒளியைப் பற்றிய வேத வசனங்கள் "அந்த ஆதிப் பெருவெளியில் பேரிருளும் பெருவெள்ளமும் மட்டுமே எஞ்சியிருந்த போது, முதலில் தோன்றிய உயிர்கள் சுயம்பிரகாசமான ஒளிரும் உடல்களைக் கொண்டவையாக (Self-luminous / Radiant beings) இருந்தன. இவை ஆகாயத்தில் மிதந்து கொண்டு, பேரொளியோடு மிக நீண்ட காலத்திற்கு வாழ்ந்து வந்தன (அப்போது சூரியனோ சந்திரனோ தோன்றவில்லை), அந்த உயிர்களின் ஒளியே பிரபஞ்சத்தை ஒளிரச் செய்தது. தீக நிகாயாவின் அத்தியாயம் 27 வசனம் 10 அதாவது, சூரியன், சந்திரனுக்கு தோன்றுவதற்கு முன்பே ஒளி உயிருடன் இருந்தது. அந்த உயிரான ஒளியிலிருந்தே அனைத்தும் தோன்றியுள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. இதே போன்று, "பிக்ஷுக்களே! இந்த மனித மனம் அதன் ஆதித் தொடக்கத்தில் (முதலில்) ஒளிரும் தன்மை வாய்ந்தது, பிரகாசமானது (Radiant). ஆனால், அது பூமிக்கும் வரும் போது ஆசைகளாலும் மாசுகளாலும் இருளடைகிறது." தீக நிகாயாவின் அத்தியாயம் 1 வசனம் 49 புத்தர், மனித மனம் ஒளியால் ஆனது என்றும், ஒளியுடைய மனதால் மகிழ்ச்சியாக வாழலாம் என்றும் இதன் மூலம் ஒளி தான் அனைத்திற்கும் மூலம் என்று போதிக்கிறார். தமிழர்களின் சைவ மதத்தின் புனித நூல்களில் ஒன்றான திருவாசகத்தில் ஒளியைப் பற்றிய வேத வசனங்கள் "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன இல்நுழைக் கதிரின் துன்அணுப் புரையச் சிறியோன் பெரியோன் தெரியின்..." திருவாசகத்தின் 3-வது பகுதியான "திருவண்டப்பகுதி"-யில் பாடல் எண் 3 விளக்கம் : "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் என்பது, அண்ட வெளியில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் மண்டலங்கள் யாவும் உருண்டை வடிவாகத் தோன்றிச் சுழல்கின்றன என்றும், அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி என்பது, அவற்றின் தன்மையை நம்மால் அளவிடவே முடியாது; அவ்வளவு பிரம்மாண்டமான, வளம் நிறைந்த பேரழகு காட்சி அது என்றும், ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் என்பது ஒவ்வொரு கோளும், விண்மீன் திரளும் ஒன்றுக்கொன்று இணையான பாதையில் இயங்கி தத்தமது அழகிய அமைப்போடு விண்வெளியில் காலகாலமாக நிலைத்து நிற்கின்றன என்றும், நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன என்பது, அவை வெறும் எண்ணிக்கைக்குள் அடங்குபவை அல்ல; என்றும், நூறு கோடிக்கும் மேலாக, எல்லையற்றுப் பரந்து விரிந்து கொண்டே செல்கின்றன என்றும், இல்நுழைக் கதிரின் துன்அணுப் புரையச் என்பது 'இல்' என்றால் வீடு. ஒரு இருண்ட வீட்டிற்குள், கதவு அல்லது ஓட்டின் ஓட்டை வழியாகச் சூரிய ஒளிக்கதிர் உள்ளே வரும்போது, அந்த வெளிச்சத்தில் கோடிக்கணக்கான மிகச் சிறிய தூசித் துகள்கள் வெடித்து சிதறி மிதப்பதைப் போல் பார்க்கலாம். இது பெரு வெடிக் கொள்கை (The Big Bang Theory) எடுத்துக்காட்டுகிறது. சிறியோன் பெரியோன் தெரியின்... என்பது அந்தப் பிரம்மாண்டமான நூறு கோடி அண்டங்களும், இறைவனுடைய பேராற்றலோடு ஒப்பிடும்போது, அந்தச் சூரிய ஒளியில் மிதக்கும் ஒரு சிறு தூசித் துகளை விட மிக மிகச் சிறியதாகத் தோன்றுமாம்! அத்தகைய அண்ட சராசரங்களையும் விட இறைவன் பெரியோனாக, எல்லையற்றவனாக ஒளியாக விளங்குகிறான் என்கிறது தமிழரின் இறைவனைப் பற்றிய பாடல்கள். இந்த தமிழ் மண்ணில் இறை வழிபாட்டை வளர்த்த ஆயிரக்காண மெய் ஞானிகளில் தலை சிறந்தவர்களுள் ஒருவர் தான் ஞானத் தமிழர் மாணிக்கவாசகர். அவர் வாழ்ந்த காலம் கி.பி 850 ஆண்டு முதல் 882 ஆண்டு வரை ஏறத்தாழ 32 வயது வரை வாழ்ந்தார். அவரின் இந்த பாடலில் மிகச்சிறந்த அறிவியல் மற்றும் ஆன்மீக கருத்துக்கள் கொண்டவை. மாணிக்கவாசகர் அண்டங்களின் பிறப்பே உருண்டை வடிவம் தான் என்பதை "உண்டைப் பிறக்கம்" என்கிறார். மேலும், அண்ட வெளியில் எதுவும் இயக்கம் இல்லாமல் இருக்கவில்லை. ஒன்றை ஒன்று ஈர்த்து, சமநிலை குலையாமல், தனக்கென ஒரு சரியான வட்டப்பாதையில் பேரழகோடு இயங்குவதை "ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்" என்று ஈர்ப்பு விசையையும், அண்ட சமநிலையையும் மிக மிக துல்லியமான அறிவியல் அளவோடு எழுதியுள்ளார். இதனை நவீன அறிவியல் விதிகளோடு ஒப்பிட்டால், 'உண்டை' என்றால் கோள வடிவம் (Sphere). விண்வெளியில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள், கருந்துளைகள் (Black Holes) அனைத்தும் ஏன் உருண்டையாக இருக்கின்றன? இதற்கு இயற்பியலில் ஈர்ப்பு விசை (Cosmic Geometry & Gravity) மற்றும் நீரியல் சமநிலை (Hydrostatic Equilibrium) என்று பெயர். ஒரு பொருளின் நிறை (Mass) அதிகமாகும் போது, அதன் ஈர்ப்பு விசை எல்லா திசைகளிலிருந்தும் மையத்தை நோக்கி இழுப்பதால், அது உருண்டை வடிவத்தை அடைகிறது. மேலும், ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் கோட்பாட்டின்படி (General Relativity theory), இவை விண்வெளிக் கால பின்னலில் (Space-time fabric) ஒன்றுக்கொன்று சமநிலையோடு சுழன்று நிற்கின்றன என்பதை விளக்குகிறது. இந்த பாடல் வரிகளில் பல்வேறு அறிவியல் விதிகளும், கண்டுபிடிப்புகளும் ஏராளமாக உள்ளன. 1687 ஆம் ஆண்டு ஐசக் நியூட்டன் ஈர்ப்பு விசை விதியை (Gravity) கண்டுப்டித்தார். இவர் தனது Philosophiae Naturalis Principia Mathematica என்ற நூலில் 'பேரண்ட ஈர்ப்பு விதியை' (Universal Law of Gravitation) வெளியிட்டார். விண்வெளியில் உள்ள ஒரு பொருளின் நிறை (Mass) அதிகமாகும் போது, அதன் ஈர்ப்பு விசை அனைத்து திசைகளிலிருந்தும் மையத்தை நோக்கிச் சமமாக இழுக்கும் என்பதை கணித ரீதியாக இந்த விதி விளக்குகிறது. இதையே, ஞானத்தமிழர் மாணிக்கவாசகர் தனது பாடலின் அடுத்த வரியில் “நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன” இதில் துல்லியமாக "விரிந்தன" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அதவாது ஒளியானது "நூற்று ஒரு கோடியின் மேற்பட" பில்லியன் கணக்கில் கோள்கள் புதிது புதிதாக உருவாகி எல்லையற்று விரிந்து கொண்டே போகின்றன என்ற அண்ட வெளி அசைவியக்கத்தை (Dynamics) எட்டாம் நூற்றாண்டிலேயே அதாவது கி.பி. 880 ஆண்டுகளில் மாணிக்கவாசகர் இறை சக்தியின் அண்ட தத்துவத்தை கண்டறிந்து எழுதியுள்ளார். இது “பெருவெடிப்புக் கொள்கையும், விரிவடையும் அண்டமும்” என்ற பிக் பாங் (Big Bang & Expanding Universe) கொள்கையை அச்சு அசலான அப்போதே எழுதிவைத்துள்ளார். இதில் "நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன.என்ற தமிழர்களின் அறிவியல் கோட்பாட்டை நவீன அறிவியல் .."1920-ஆம் ஆண்டுகளில் எட்வின் ஹப்பிள் (Edwin Hubble) என்ற விஞ்ஞானி, அண்டங்கள் நிலையாக இல்லை; அது தொடர்ந்து விரிவடைந்து கொண்டே செல்கிறது (Expanding Universe) என்பதைக் கண்டறிந்தார். ஆதியில் ஒரு மிகச்சிறிய புள்ளியில் (Singularity) ஏற்பட்ட பெருவெடிப்பிற்குப் பின், விண்மீன் திரள்கள் (Galaxies) ஒன்றை விட்டு ஒன்று விலகி செல்கின்றன. இன்று நவீன வானியல், அண்டத்தில் 2 லட்சம் கோடிக்கும் (2 Trillion) அதிகமான விண்மீன் மண்டலங்கள் இருப்பதாக தெரிவிக்கின்றன “இல்நுழைக் கதிரின் துன்அணுப் புரையச் சிறியோன் பெரியோன் தெரியின்” இதன் மூலம், ஒளியின் துகள் தன்மையை விளக்க ஒரு உலகத்தரம் வாய்ந்த உவமையைக் கையாள்கிறார். ஒரு இருண்ட வீட்டின் ஜன்னல் துவாரத்தின் வழியே நுழையும் சூரிய ஒளிக்கதிரில் (இல்நுழைக் கதிர்) கண்ணுக்குத் தெரியாத மிதக்கும் நுண்தூசிகளைப் போல (துன்அணுப் புரைய), ஒளியின் கதிர்களுக்குள் பேரண்டத்தில் கோடிக்கணக்கான அண்டங்கள் மிதக்கின்றன என்கிறார். ஒளியையும் அணுவையும் (துன்அணு - Subatomic Particle) ஒரே வரியில் இணைத்ததன் மூலம், ஒளியின் துகள் தன்மையையும் (Photon nature), அண்டத்தின் ஆதிப் பொருள் ஒளிதான் என்பதையும், இந்த உலகத்திற்கு முதன் முதலில் அறிவியல் பூர்வமாக வெளிப்படுத்தியவர் ஞானத்தமிழர் மாணிக்கவாசகர் தான் என்பது தெளிவாகிறது. இதே அறிவியல் தமிழை நவீன அறிவியலோடு ஒப்பிட்டால், குவாண்டம் இயற்பியலின் தந்தை என்று கருதப்படும் மேக்ஸ் பிளாங்க் (Max Planck) மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோர், ஒளி என்பது வெறும் அலை (Wave) மட்டுமல்ல, அது 'ஃபோட்டான்கள்' (Photons) எனப்படும் மிகச்சிறிய ஆற்றல் பொட்டலங்களால் (Energy packets / Particles) ஆனது என்ற அலை-துகள் இருமை (Wave-Particle Duality) கொள்கையை வெளியிட்டனர், இதே கருத்தை துளியும் மாறாமல் ஞானத்தமிழர் மாணிக்கவாசகர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் பாடலின் வரியில் "சிறியோன் பெரியோன் தெரியின்..." என்று சொல்லப்பட்டிருப்பதன் பொருள் என்னவெனில், எல்லையற்ற பிரம்மாண்டமாக இருக்கும் அண்டம் (பெரியோன்), மிகச்சிறிய சப்-அட்டாமிக் குவாண்டம் துகள்களுக்குள் (சிறியோன்) அடங்கியிருக்கிறது என்ற குவாண்டம் முரண்பாட்டை (Quantum Paradox) இந்த வரி பேசுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், போடோல்ஸ்கி மற்றும் ரோசென் ஆகியோரால் (EPR) இந்த தத்துவம் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் ஒளி வேகத்தை வரையறுபது ஈபிஆர் முரண்பாடு மற்றும் குவாண்டம் சிக்கல் (EPR Paradox & Quantum Entanglement). அதாவது, இரண்டு துகள்கள் 'குவாண்டம் சிக்கல்' (Entanglement) நிலையை அடைந்துவிட்டால், அவை பிரபஞ்சத்தின் இரு வேறு முனைகளில் இருந்தாலும், ஒன்றின் நிலையை மாற்றினால் அடுத்த கணமே மற்றொன்றின் நிலை தானாக மாறிவிடும். இதைத் தான் சிறியோன் பெரியோன் ஆனாலும், பெரியோன் சிரியோன் ஆனாலும் அதன் தன்மை ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம் என மாணிக்க வாசகர் தெரிவிக்கிறார். அதோடு “தெரியின்” என்ற சொல்லில், அணுவுக்குள் இருக்கும் வெற்றிடத்தில் நுண்ணிய ஆற்றல் தெரியும் என்று குறிப்பிடுகிறது. அதாவது, கண்ணுக்குத் தெரியாத நுண்துகள் தான் கடவுள் துகள் (God Particle) என்று இப்போது ஆராய்ச்சி முடிவைகள் சொல்கிறது. இந்த கடவுள் துகள் என்பதை அணுவுக்குள் இருக்கும் வெற்றிடம் என கருதக்கூடிய அளவில் உள்ள நுண் துகள் அல்லது வெற்றிடமாக இருக்கும் ஆற்றல் அல்லது ஆற்றல் குவிப்பு (Vaccum Energy) (Higgs Field) (Higgs Boson) என்பது போன்ற மிக அபூர்வ நுண்ணிய ஆற்றலை சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு அணுவுக்குள் இருக்கும் மிக நுண்ணிய ஆற்றல் தான் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான், குவார்க் என அனைத்து துகள்களையும் இயக்குகிறது. இந்த நுண் துகள் ஆற்றல் தான் பூமி மற்றும் கோடிக்கணக்கான கோள்களையும், நட்சத்திரங்களையும், அண்டங்களையும் இயக்குகிறது. இந்த அறிவியல் தத்துவத்தை ஞானத்தமிழ்ச் சித்தர்கள் பலரும் பல பெயர்களில் எழுதிவைத்துள்ளனர். இதைத் தான் நவீன அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆதாரப்பூர்வமாக விளக்கி நோபல் பரிசு பெற்றுள்ளனர். இது போன்ற இன்னும் பல லட்சக்கணக்கான, ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்படாத பல அறிவியல் தத்துவங்களை ஞானத்தமிழர்கள் எழுதிவைத்துள்ளனர். பிரபஞ்சம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆற்றல் களம் பரவியுள்ளது. இதற்கு 'ஹிக்ஸ் களம்' (Higgs Field) என்று பெயர். பிரபஞ்சத்தில் உள்ள மற்ற துகள்கள் (எலக்ட்ரான், குவார்க் போன்றவை) இந்த ஹிக்ஸ் களத்தின் வழியாக பயணிக்கும் போது, அவற்றுக்கு இடையே ஒருவித ஈர்ப்பு அல்லது உராய்வு ஏற்படுகிறது. இந்த உராய்வுதான் அந்த துகள்களுக்கு 'நிறையை' (Mass) வழங்குகிறது. இந்த ஹிக்ஸ் களத்தின் மிகச்சிறிய அலகே (Quantum) ஹிக்ஸ் போஸான் அல்லது கடவுள் துகள் ஆகும். இதை இன்னும் எளிமையாக விளக்க வேண்டும் என்றால், நாம் காற்றில் கையை அசைத்தால் எந்தத் தடையும் இருக்காது (நிறை குறைவு). ஆனால், தண்ணீருக்குள் கையை அசைத்தால் ஒரு வித எதிர்ப்பு இருக்கும். அதுபோல, இந்த பிரபஞ்ச வெளியில் துகள்கள் பயணிக்கும்போது ஹிக்ஸ் களம் அவற்றுக்கு எடையைக் கொடுக்கிறது. இந்தத் துகள் மட்டும் இல்லையென்றால், பிரபஞ்சத்தில் உள்ள எந்தவொரு துகளுக்கும் எடை அல்லது நிறை இருந்திருக்காது. நிறை இல்லை என்றால், அணுக்கள் (Atoms) உருவாகி இருக்காது. அணுக்கள் இல்லை என்றால் நட்சத்திரங்கள், கோள்கள், தண்ணீர் மற்றும் மனிதர்களாகிய நாமும் உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒளியின் வேகத்தில் சிதறி ஓடும் வெறும் ஆற்றலாக மட்டுமே இருந்திருக்கும். பிரபஞ்சத்தை "உருவாக்கிய" முக்கிய காரணி என்பதால் இது 'கடவுள் துகள்' எனப் பொருத்தமாகப் பார்க்கப்படுகிறது. 1964-ஆம் ஆண்டில் பீட்டர் ஹிக்ஸ் (Peter Higgs) என்ற விஞ்ஞானி இப்படி ஒரு துகள் இருந்திருக்க வேண்டும் என்று அறிவியல் கோட்பாடு மூலம் கூறியுள்ளார். (அதனால் தான் இதற்கு ஹிக்ஸ் போஸான் என்று பெயர்). நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் லியோன் லேடர்மன் 1993-ல் எழுதிய The God Particle என்ற நூலின் காரணமாக அந்த துகளுக்கு கடவுள் துகள் என்று பெயர் வந்தது. அதன் பிறகு, 2012-இல், சுவிட்சர்லாந்தில் உள்ள CERN ஆய்வகத்தில், உலகின் மிகப்பெரிய இயந்திரமான 'லார்ஜ் ஹாட்ரான் கொலைடர்' (Large Hadron Collider - LHC) மூலம் இந்தத் துகள் இருப்பது உலகிற்கு ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக 2013-இல் பீட்டர் ஹிக்ஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒளி மற்றும் துகள்கள் தொடர்பாக பலப்பல நுணுக்கங்களை ஞானத்தமிழர்கள் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவைத்துள்ளனர். இந்த நுண் துகள் ஆற்றல் தான் பிரம்மாண்டமான அண்டங்களுக்கு எடையைக் கொடுத்துப் பெரியோனாக மாற்றுகிறது. ஞானத்தமிழர் மாணிக்கவாசக்ர் (தெரியின்), என்ற சொல்லின் அர்த்தத்தை ஆராய்ந்து பார்த்தால், இந்தப் பேரண்டமே இறைவனின் ஆற்றல் புலத்தில் மிதக்கும் ஒரு சிறு அணுவுக்குள் இருக்கும் ஆற்றல் தான். அதாவது ஒரு அணுவுக்குள் இருக்கும் ஆற்றல் தான் அண்டங்கள் அனைத்திலும் இருக்கும், இயக்கும் ஆற்றலாகும். இது தான் ஒளியியல், அலை-துகள் இருமை மற்றும் குவாண்டம் மெக்கானிக்ஸ் (Wave-Particle Duality) ஆகும். இப்படி ஒரு பாடலின் ஆறு வரிகளில் இறைவைன் படைப்பைப் பற்றியும், பூமி, நட்சத்திரம் மற்றும் அண்டங்களின் சுருங்கி, விரிந்து சீரான வட்டப்பாதையில் இயங்குகிறது என்பதைப் பற்றியும் விளக்குகிறது. மேலும், நவீன இயற்பியலின் அதிநவீன கோட்பாடான ஸ்ட்ரிங் தியரி (String Theory) என்ன சொல்கிறது என்றால், அண்டம் என்பது துகள்கள் அல்ல; அவை ஒளிரும் மற்றும் அதிரும் மிகச்சிறிய ஆற்றல் இழைகள் (Vibrating Strings) என்று சொல்கிறது. இந்த இழைகள் வெவ்வேறு அதிர்வெண்களில் (Frequencies) அதிரும் போதுதான், வெவ்வேறு அணுக்களும், ஒளியும், ஒலியும், பருப்பொருட்களும் தோன்றுகின்றன. அதாவது, ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் ஒரு பிரம்மாண்டமான அதிர்வுகளிலிருந்து (Cosmic Vibration) தோன்றியிருக்கும் என்பதாகும். அதே போல், நிகோலா டெஸ்லா "அண்டத்தின் ரகசியத்தைக் கண்டறிய வேண்டுமென்றால், ஆற்றல், அதிர்வெண் மற்றும் அதிர்வு (Energy, Frequency, Vibration) என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டும்." என்று கூறுகிறார். இதையே மாணிக்கவாசகரின் வரிகள் விளக்குகிறது. இதையே தான், உலகப்புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் 1905 ஆம் ஆண்டு தனது E=mc2 என்ற சமன்பாட்டின் மூலம் விளக்குகிறார். அதாவது, E = Energy (ஆற்றல்/சக்தி) ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் முழுமையான ஆற்றலைக் குறிக்கிறது. M = Mass (நிறை / பொருளின் எடை) அந்தப் பொருளின் முழுமையான எடையைக் குறிக்கிறது. c2 = Speed of Light Squared (ஒளியின் வேகத்தின் வர்க்கம்) என்பது ஒளியின் வேகம் (ஒளி ஒரு வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்) அந்த வேகத்தை அதே வேகத்தால் பெருக்குவதாகும் (3 லட்சம் * 3 லட்சம்). இது ஒரு பிரம்மாண்டமான மிகப்பெரிய எண்ணாகும். இதன் விளக்கம் என்பது "அண்டத்தில் உள்ள எந்தவொரு பொருளையும் பிரம்மாண்டமான சக்தியாக மாற்ற முடியும், அதேபோல் சக்தியைப் பொருளாகவும் மாற்ற முடியும்" என்பதை விளக்கும் சூத்திரம் தான் இந்த E=mc2 சமன்பாடு. இந்த விதிப்படி தான், ஒரு அணுவைப்பிளந்து பிரமாண்டமான ஆற்றலை வெளிப்படுத்துகிறார்கள். இந்த முறையில் தான் அணுகுண்டும் தயாரிக்கப்படுகிறது. இதையே தான் ஞானத்தமிழர் மாணிக்கவாசகர் திருவாசகத்தின் 3-வது பகுதியான "திருவண்டப்பகுதி"-யில் பாடல் எண் 3 ல் 55 மற்றும் 56 ஆவது வரிகளில் “ஒன்றாய் நின்ற ஒளியே ஒலியே நாதக் கடலே நல்லமுதே காண்க” என்று சொல்வதன் உட்பொருள் பிரமாண்டமானது. இந்த வரிகளின் ஆழமான விளக்கம் என்பது, “இந்த அண்டங்களின் தோற்றத்தை வெறும் பருப்பொருளாகப் பார்க்காமல், ஒளியின் ஆற்றலாகவும், அதிர்வாகவும், அதிர்வெண்ணாகவும் பார்க்கிறார். அதனால்தான், இந்த அண்டவெளியின் விரிவடைதலைப் பாடிவிட்டு, அடுத்த சில வரிகளில், "ஒலியே (Vibration) , ஒளியே (Energy), நாதமே (Frequency) " என்று ஒலியின் அதிர்வையும் (Sound Frequency), ஒளியின் ஆற்றலையும் (Light Energy) ஒலியின் அதிர்வெண்ணையும் (Vibration) இறைவனின் வடிவமாகப் போற்றுகிறார். ஞானத்தமிழர்கள் ஆன்மீகம் என்பதை மெய்யியல், மெய்யறிவு, மெய்ப்பொருள் என்று தெரிவிக்கின்றனர். அதாவது, எது உண்மையோ அதுவே ஆன்மீகம், நீங்கள் எப்போதெல்லாம் உண்மையைப் பேசுகிறீர்களோ அப்போதெல்லாம் ஆன்மீகத்தோடு இருக்கிறீர்கள் அல்லது ஆண்டவனோடு இருக்கிறீர்கள் என்று விளக்குகிறார்கள். இந்த இறை தத்துவத்தை ஞானத்தமிழ்ச் சித்தர்கள் ஒளியாக வெளிப்படுத்துகின்றனர். இதைத்தான் திருவள்ளுவர் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகலவன் முதற்றே உலகு. என்று எழுதியுள்ளார். ஞானத்தமிழர்கள் இறைவனை ஒளியாகக் கண்டனர். ஒளியில் இறைவனைக்கண்டனர். இந்த ஒளி சக்தி தான் உலகின் ஒப்பற்ற ஒரே சக்தி என்று பாடினார்கள். இதைத்தான் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் எழுதியுள்ளார். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! இதன் பொருள் : ஒளியான இறை சக்தியை தமிழர்களாகிய நாங்கள் எங்கள் நாட்டில் “சிவன்” என்ற பெயரில் அழைக்கிறோம். இந்த ஒளி சக்தியை எந்த நாட்டில் இருப்பவர்களும், எந்த மதத்தில் இருப்பவர்களும் அவர்களுக்கு விரும்பிய பெயரில் இறைவன் என்று அழைக்கலாம். ஆனால் “இறைவன் ஒருவனே” என்று கூறுகிறார். அதோடு இறைவனின் எட்டு குணமாக 1. பிறப்பில்லை 2. இறப்பில்லை 3. பெயரில்லை 4. உருவமில்லை 5. தனிப்பட்ட குணமில்லை 6. எந்த குறையில்லை 7. பாசப்பிடியில் சிக்கிக்கொள்வதில்லை 8. ஒப்புடையவர்கள் யாருமில்லை. என இறைவனின் குணத்தையும் வகுத்து ஞானத்தமிழர்கள் கொடுத்துள்ளனர். @@@@@@@@@@@@@@@ இதன் மெய்ப்பொருள் என்னவென்றால் ? இறை சக்தி அனைத்திலும் நிறைந்துள்ளது. அதற்கு எந்த பெயர் வைத்தாலும், எந்த உருவம் வைத்தாலும், எந்த மதத்தின் சக்தியாக வழிபட்டாலும் அல்லது நீங்களே புதிதாக ஒரு பெயரை வைத்தும் வழிபட்டாலும், அதிலும் சக்தி இருக்கும். ஆனால், ஒருவரின் முந்தைய பிறவிகளின் கர்ம வினைகளின் அளவைப்பொருத்தும், தற்போது உள்ளத்தில் உள்ள அன்பின் அளவைப் பொருத்தும் தான் வாழ்க்கையில் நன்மையும், தீமையும் அமையும். இதில் முக்கியமாக கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தி மக்களை வெறுப்பவர்கள் மன்னிக்கமுடியாத பாவிகள் என்றே கடவுள் ஒதுக்குகிறார். இந்த பாவிகள் அடுத்தடுத்தப் பிறவிகளில் மக்களால், உறவுகளால், பெற்ற பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு ஆதரவற்று தெருவில் ஆனாதையாக பசியோடு அலைவார்கள். இதைத்தான் ஞானத்தமிழர்கள் “உனக்குள் இறைவனைக் காணும் போது, நீயே இறைவனாகிறாய்” என்று சொல்கின்றனர். அதோடு “உன் உள்ளம் முழுதும் அன்பால் நிறையும் போது நீயே ஒளியாவாய்” என்றும் போதிக்கின்றனர். இதனால், ஞானச்சித்தர்கள் பேசிய தமிழ் மொழி வேறு ஆன்மீகம் வேறு அல்ல. தமிழும் ஆன்மீகமும் ஒன்று தான். ஆன்மீகத்தமிழை ஆராய்ந்தால், இதில் இல்லாத அறிவியலும், ஆராய்ச்சி முடிவுகளும் வேறு எதிலும் இல்லை. ஞானத்தமிழர்களின் பார்வையில் ஆன்மீகத்தின் ஒரு துளியே அறிவியல் என்றும், ஆன்மீகம் உண்மையை மட்டுமே பேசவேண்டும் என்றும் மனிதர்கள் உணவு பழக்கத்தாலும், வாழும் இடத்தாலும், பேசும் மொழிகளால் வேறுபடலாமே தவிர, கடவுளின் பெயரால் ஒரு போதும் வேறுபடக்கூடாது என்றும் வேற்றுமைப்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர். ஞானத்தமிழர்கள் இறைவனுக்கும், மனிதர்களுக்கும் இடையில் தமிழ் மொழியால் ஒரு இணைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். உலகில் உள்ள அனைத்து மொழிகளும் இறைவனின் மொழியே. ஆனால் உலக உயிர்களின் முதல் மொழி தமிழ் மொழி தான். தமிழ் மொழியில் ஒலிகளை சரியான உச்சரித்தால் அதுவே உயர்ந்த மந்திர மொழியாகும். தமிழ் மொழியில் இறைவன் பேசிய வரலாறும், இறைவன் சிவபெருமானே பூமிக்கு வந்து கையெழுத்திட்டிருக்கும் வரலாற்றுப்பதிவும் தமிழர்களுக்கு மட்டுமே உரிய சிறப்பாகும். இறைவனார் சிவபெருமானின் கையெழுத்து ஓலைச்சுவடி இன்றும் தமிழ் நாட்டிற்கு அருகிலுள்ள புதுச்சேரியில், செட்டி கோயில் பின்புறம், அம்பலத்தார் மடத்து வீதியில் “ அம்பலத்தாடும் சுவாமிகள் திருமடத்தில்” உள்ளது. இந்த ஓலைச் சுவடியில் "இவை திருவாதவூரன் (ஞானத்தமிழர் மாணிக்கவாசகர்) பாட, அழகிய திருச்சிற்றம்பலம் உடையான் எழுதியவை" என்று எழுதி இறைவன் சிவபெருமான் கையெழுத்திட்டிருக்கும் ஓலைச் சுவடியைக் காணலாம். அதே போன்று, உலகத்தில் முதலில் தோன்றியது ஒளி தான் என்றும், ஒளி என்பது மனித உயிரில் அன்பாக உள்ளது என்றும், மனிதனின் அன்பு அருளாக மாறும் போது மனிதனே ஒளியாகிறான் என்றும், ஒளியாக மாறும் மனிதன் இறைவனின் திருவடிகளில் கலந்திடலாம் என்றும் ஞானத்தமிழர் சுவாமி இராமலிங்க அடிகளார் அவர்கள் “அருட்பெரும் ஜோதி” என்று பாடியுள்ளார். ஞானத்தமிழர் வைணவ நம்மாழ்வார் திருவாய்மொழி நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் 2791 ல் “துயரறு சுடரடி தொழுதென்மனனே…” என்று பாடியுள்ளார். அதாவது இறைவன் சுடரொளியாக இருக்கிறான் என்று போற்றுகிறார். உலக மக்களின் பாவங்களுக்காக ரத்தம் சிந்திய இறைத்தூதர் இயேசு பிரான் பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவுலக ஆசான் திருவள்ளவர் பிறந்தார். அவர் திருக்குறளை எழுதியுள்ளார். அவரின் ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானவர்கள், திருவள்ளுவரின் சம கால புலவர்கள், பெண் புலவர்கள், சைவ, வைணவ, மற்றும் அரசவைப் புலவர்கள் என பல தரப்பட்ட ஞானத்தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் பலரும் பல ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கானோர் இறைவனின் அருள் ஒளியைப்பற்றியும், அண்டங்களின் இரகசியங்களைப் பற்றியும் பல லட்சம் நூல்களை எழுதியுள்ளனர். ஆனால், அந்த புனிதமான அறிவியல் நுணுக்கங்களைக்கொண்ட லட்சக்கணக்கான நூல்கள் ஏறத்தாழ 80 கடல் ஆழியால் அழிக்கப்பட்டது. மீதம் 15 சதவீத நூல்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டும், ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடி கட்டுக்களை எரித்தும், களி மண்ணாலான குறிப்புகளை அழித்தும், பல ஆயிரக்கணக்கான நூல்களை ஆற்று நீரில் வீசி எறிந்தும், பல ஆயிரக்கணக்கான நூல்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டும், தமிழர்களின் உலக அறிவு நூல்கள் சாம்பலாக்கப்பட்டும் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுவிட்டது. தற்போது மீதம் இருப்பது சில் ஆயிரக்கணக்கான நூல்கள் மட்டுமே. ஞானத்தமிழர்களின் நூல்கள் ஒவ்வொன்றும் ஒரு ஞானக்கடல். இது தமிழர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, இந்த மண்ணில் உயிர் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் சொந்தம். உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற கொள்கைக்கு சொந்தக்காரர்கள் தமிழர்கள். உலக மக்கள் அன்பால் ஒன்று கூட தமிழ் ஒளி வழி காட்டும். உலகில் தோன்றிய முதல் மனிதன் இந்த உலகின் முதல் மனித இனம் எங்கு தோன்றியிருக்கும் ? என்பதையும், அந்த ஆதி மனிதனின் நேரடி வாரிசுகள் இப்போது எங்கு இருக்கிறார்கள் ? என்பதையும் கண்டறிய நேஷனல் ஜியோகிராபிக் (National Geographic) அமைப்பினை வழிநடத்திய உலகப் புகழ்பெற்ற மரபணுவியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் (Dr. Spencer Wells) 2005 ஆம் ஆண்டு ஒரு ஆராய்ச்சியைத் தொடங்கினார். அதில் உலகம் முழுவதும் 11 முக்கிய குழுக்களை அமைத்து சுமர் 140 நாடுகளில் இருந்து ஏறத்தாழ 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் DNA மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் குறிப்பாக உலக மக்களின் Y-DNA மற்றும் mtDNA மரபணுக்கல் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) என்ற மனித இனம் தோன்றியது என்றும், பின்னர் அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக பல திசைகளில் சென்றனர் என்றும், அதில் அதிகமான மக்கள் லெமூரியா (தமிழ்நாடு) கண்டத்தில் குடிபெயர்ந்துள்ளனர் என்றும் ஆராய்ச்சி முடிவின் முடிவில் கண்டறிந்தனர். அந்த ஆதி மனித மரபணு இரத்தத்தில் உள்ள ஒய்-குரோமோசோமில் (Y-Chromosome) உள்ள அடையாளக் குறி (Genetic Marker) M130 என முடிவு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் மிகப்பெரிய ஆச்சரியமான செய்தி என்ன வெனில் இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டில் இருக்கும் மதுரைக்கு அருகில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விருமாண்டி என்பவருடைய இரத்தத்தில் (Genetic Marker) M130 இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழ் இனம் உலகில் முதலில் தோன்றிய இனங்களில் ஒன்று என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த மண்ணில் ஆதி மனிதனின் நேரடி வாரிசுகள் இன்றும் வாழ்கிறார்கள். இந்த மண்ணில் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளாக மனித இனம் தொடர்ந்து, இடைவெளியே இல்லாமல் வாழ்ந்து வருகிறது. அதே போன்று உலகில் உருவான முதல் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி இன்றும் மக்களால் பேசப்படுவது உலக அதிசயங்களில் ஒன்றாகும். அதை விட முக்கியமானது உலகில் மனித கண்டுபிடிப்புகளில் முதன்மையானது, சிறந்தது, வலிமையானது, உயர்ந்தது மொழி தான். ஒரு மனிதனின் மகிழ்ச்சியை, வலிகளை, வாழ்க்கையை வார்த்தைகளின் ஒலிகளில் உருவாக்கிய தமிழ் மொழியின் வளமையை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். "உலகில் தோன்றிய முதல் மொழி எதுவாக இருக்கும் ?" என மொழியியல் (Linguistics) மற்றும் தொல்லியல் (Archaeology) அறிஞர்களின் ஆராய்ச்சி செய்தனர். அதன் படி, சுமார் 1,00,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் சைகைகளையும், எளிய ஒலிகளையும் பயன்படுத்திப் பேசத் தொடங்கினர்கள். இதை விளக்கக்கூடிய எழுத்துப்பூர்வமான சான்று மெசொப்பொத்தேமியாவில் (இன்றைய ஈராக்) கிடைத்துள்ளது. அது சுமேரியர்களின் கியூனிஃபார்ம் (Cuneiform) எழுத்து முறையாகும். இது சுமார் கி.மு. 3100 (சுமார் 5100 ஆண்டுகள் பழமையானது) காலத்தைச் சேர்ந்த களிமண் பலகைகளில் கண்டறியப்பட்டுள்ளது. கீழடி மற்றும் கொடுமணல் அகழ்வாராய்ச்சி (கார்பன் கணிப்பு முடிவுகள்): இதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டில் (இந்தியா) சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் ஈரோடு கொடுமணல் ஆகிய இடங்களில் பானை ஓடுகளில் உள்ள தமிழி வகை எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை அமெரிக்காவின் பீட்டா அனலிடிகல் (Beta Analytic) ஆய்வகத்தில் AMS கார்பன் கணிப்பு சோதனைக்கு உட்படுத்தி ஆராய்ச்சி நடத்தினார்கல். அதன் முடிவுகள், அந்த தமிழ் எழுத்துக்கள் கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை (சுமார் 2600 ஆண்டுகள் பழமையானவை) என்பதை உறுதி செய்தன. அதே போன்று, இந்தியாவில் உள்ள தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவக்களை என்ற இடத்தில் கண்டறியப்பட்ட நெல் மாதிரிகளை ஆய்வு செய்தனர். இதன் மூலம் பொருநை ஆற்றங்கரை நாகரிகம் கி.மு. 1155 -முதல் –3000 வரை (அதாவது சுமார் 3,181 ஆண்டுகள் முதல் 5,026 ஆண்டுகள் வரை பழமை உடையது) என்று உறுதி செய்யப்பட்டது. இந்த நெல் மணிகளோடு சுமார் 1 செ.மீ நீளமும், 30 மில்லி கிராம் எடையும் கொண்ட அரிய தங்கப் பொருள், செம்பு மற்றும் வெண்கலத்தாலான பல்வேறு வீட்டு உபயோக மற்றும் ஆபரணப் பொருட்கள் இரும்பு ஈட்டிகள், கத்திகள், அம்புகள் (Arrowheads), கோடாரிகள், உளி (Chisels) மற்றும் இரும்பு வளையங்கள் ஆகிய 85-க்கும் மேற்பட்ட இரும்புப் பொருட்கள் கிடைத்துள்ளன. அதோடு 160-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளும் கிடைத்துள்ளன. இதைவிடவும் தமிழ் நாட்டைச் சுற்றி பல்வேறு இடங்களில் 5000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மண்ணால் சுடப்பட்ட சிவப்புப் பானைகள், கருப்புப் பானைகள், கிண்ணங்கள், நீர்க்குடுவைகள் மற்றும் கூம்பு வடிவ சாடிகள் உள்ளன. அதோடு, தமிழர்கள் நூல் நூற்பதற்குப் பயன்படுத்திய சுடுமண்ணால் ஆன 'தக்களி (Spindle Whorl)' சாதனம் கிடைத்துள்ளது. இது அவர்கள் நெசவுத் தொழிலில் சிறந்து விளங்கியதைக் காட்டுகிறது. சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச் சில்லுகள் மற்றும் சதுரங்கம் போன்ற விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆட்டக்காய்கள் கிடைத்துள்ளன. மேலும், விலங்குகளின் எலும்புகளில் இருந்து கூர்மையாகச் செய்யப்பட்ட நுணுக்கமான கருவிகள் மற்றும் முத்திரைகள், கண்ணாடி மற்றும் சங்கு ஆகியவற்றால் செய்யப்பட்ட ஆபரண வளையல் துண்டுகள் மற்றும் வண்ணமயமான பாசிமணிகள். இறந்தவர்களைப் புதைத்த இடத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட சுமார் 4,800 ஆண்டுகள் பழமையான 'கல்வட்டங்கள்' உலகிலேயே தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் தான் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழ்விடப் பகுதியில் பழங்காலச் செங்கல் சுவர்களின் எச்சங்கள் கிடைத்துள்ளன. இங்குள்ள ஒவ்வொரு செங்கலும் 25 செ.மீ நீளமும், 16 செ.மீ அகலமும், 5 செ.மீ உயரமும் கொண்ட சீரான அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது தமிழர்கள் வாழும் நிலப்பரப்புகளில் 4,800 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் பூர்வமாக வாழ்ந்த மக்களின் தடையங்கள் கிடைத்துள்ளது. அவை சிவகங்கை மாவட்டம் கீழடி, ஈரோடு மாவட்டம் கொடுமணல், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், தூத்துக்குடி மாவட்டம் கொற்கை, புதுச்சேரி அருகில் அரிக்கமேடு போன்ற அனைத்து பகுதிகளும் ஆதி மனிதர்கள் வாழ்ந்த தடயங்களால் நிறைந்திருக்கும். உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் 5 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ஆண்டுகள் முற்பட்ட நாகரீகம் தமிழர் நாகரீகம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை என்னவெனில் இன்னும் ஆராய்ச்சியாளர்களால் தமிழர்களின் வரலாற்றை முழுமையாக கண்டுபிடிக்கவில்லை. பல லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் வரலாறு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு, மறைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருகிறது. இந்த உண்மைகளை உறுதி செய்யும் விதமாக, அரியலூர் கல்லங்குறிச்சியில் 1996 ஆம் ஆண்டு இந்திய மற்றும் ஜெர்மனி நாட்டு நிபுணர்களால் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில், இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகள் மூலம் டைனோசர்கள் உயிர் வாழ்ந்தது உறுதிசெய்யப்படுள்ளது. அதே போல், அரியலூர் மாவட்டம் செந்துறை என்ற பகுதியில் சுமார் 6.5 கோடி (65 மில்லியன்) ஆண்டுகள் பழமையான நூற்றுக்கணக்கான டைனோசர் முட்டைகள் கொத்துக் கொத்தாக (Clusters) புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முட்டைகள் ஒவ்வொன்றும் 13 முதல் 23 சென்டிமீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கிறது. அதாவது, டைனோசர்கள் பூமியில் தோன்றி, வாழ்ந்து, மறைந்த காலம் "மெசோசோயிக் ஊழி" (Mesozoic Era) என்று அழைக்கப்படுகிறது. அவை சுமார் 24 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின. டயனோசர்கள் சுமார் 16.5 கோடி ஆண்டுகள் உயிர் வாழ்ந்தன. அதாவது சுமார் 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமியில் உயிர் வாழ்ந்துள்ளன. அப்படி தோன்றிய முதல் உயிரினங்களிலிருந்து, டயனோசரைக்கடந்து இன்றைய மனிதர்கள் வரை உயிர்கள் தொடர்ந்து வாழும் ஒரு நிலப்பரப்பு தமிழ்நாடு ஆகும். உலகம் தோன்றிய காலத்திலிருந்து இன்றும் உயிரினங்கள் வாழும் இறைவன் ஆசிர்வசித்த ஒரே ஒரு இடமாக தமிழ் நாடு விளங்குகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க உண்மையும், பழமையும், சிறப்பும் வாய்ந்த இடத்தை உலக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்யவேண்டும். அப்படி செய்தால் உலக தோற்றம் பற்றியும், உயிர்கள் பற்றியும், இறை சக்தி பற்றியும், பிறப்பு, இறப்பு பற்றியும் பல்வேறு புதிர்களுக்கு விடைகள் நிச்சயம் கிடைக்கும். உலகில் பேசப்பட்ட முதல் மொழி இந்த உலகில் பேசப்பட்ட முதல் மொழி எந்த மொழியாக இருக்கும் என்பது தொடர்பாக பல நூறூ ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையில், யூத, கிறித்தவ, இசுலாமிய மத நம்பிக்கைகளின்படி, உலகின் முதலில் தோன்றியவர்கள் "ஆதாம்" (Adam) என்ற பெயருடைய ஆணும் ஏவாள் என்ற பெயருடைய பெண்ணும் தான் முதன் முதல் தோன்றிய மனிதர்கள் என்ற உறுதியான முடிவுக்கு வருகின்றனர். இந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும், தமிழறிஞர்கள் மற்றும் மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் “ஆதன்” என்ற பெயர் தமிழ் நாட்டில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளனர். அதில் ஆதன் என்ற பெயரைப் பிரித்தால் ஆதி + அன் என்று பிரிக்கப்படும். இதில் ‘ஆதி' என்பது முதல் அல்லது தொடக்கம் என்று பொருள்படும். உலகில் முதன்முதலில் தோன்றிய ஆண் என்பதால் அவன் 'ஆதன்' எனப்பட்டான் என இதன் பெயர் காரணத்தை தருகின்றனர். அதோடு ‘ஆதன்' என்றால் "உயிர்ப்பையுடையவன்" (முதலில் சுவாசித்தவன்) என்ற பொருளும் உண்டு. தமிழ் நாட்டில் உள்ள “கீழடி” என்ற இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்ட பானை ஓடுகளில் "ஆதன்", "குவிரன் ஆதன்" “சேரலாதன்” போன்ற பெயர்கள் தமிழி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளதை எடுத்து இன்றும் பாதுகாத்து வைத்துள்ளனர். ஆதன் என்றால் தமிழில் குருடன் (பார்வை இல்லாதவன்), முதன்மையானவன், முதல் உயிர்காற்றை உள்ளே இழுத்தவன், முதன்மையான சக்தி கொண்டவன், ஆதியில் பிறந்த ஆண் மகன் என்று இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதே போன்று பைபிளில் சொல்லப்பட்ட ஆதாம் என்றால் இறைவன் படைத்த முதல் மனிதன் என்றும் பார்வை இல்லாதவன், மண்ணிலிருந்து உருவான மனிதன், முதல் சுவாசம் கொண்ட மனிதன் என்றும் பல அர்த்தங்கள் உண்டு. உலகில் முதலில் தோன்றிய மனித இனங்களின் பெயர்கள் ஒலிகளும், தமிழ் மொழியின் பெயர்களின் ஒலிகளும், அதன் அர்த்தங்களும் மிக சரியாகவே பொருந்தி இருக்கின்றன. அதே போன்று, , யூத, கிறித்தவ, இசுலாமிய புனித நூல்களில், உலகத்தின் முதல் பெண்ணின் பெயர் "ஏவாள்" (Eve) என்ற பெயர் இடம் பெற்றிருப்பதை அறியமுடிகிறது. இதன் நேரடி ஒலி வடிவம் கொண்ட பெயர் தமிழ் மொழியில் "ஔவை" (Avvai) என்ற சொல் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதை எண்ணி வரலாற்று ஆய்வாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். உலக மொழிகளின் வேர்ச்சொற்களை ஆராய்ந்த பல மொழியியல் அறிஞர்கள் குறிப்பாக ஞா. தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் ஏவாள், ஔவ என்ற இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே உள்ள ஆழமான மொழியியல் பிணைப்பை விளக்கியுள்ளனர். தமிழில் 'ஔவை' என்ற சொல்லை 'அவ்வை' என்றும் எழுதலாம் (அ+வ்+வை). அவ்வை (Avvai) என்ற தமிழ்ச் சொல், எபிரேய (Hebrew) மொழியில் "அவ்வா" (Chavvah / Havvah) என்று மாறியது. அந்த எபிரேயச் சொல்லே கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகள் வழியாக ஆங்கிலத்திற்கு வந்தபோது "ஈவ்" (Eve) என்றும், ஈவ் என்பதை தமிழில் "ஏவாள்" என்றும் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த ஒலி மாற்றம் (Phonetics) அவ்வை = அவ்வா = ஹவ்வா = ஈவ் (Eve) = ஏவாள் என மருவி இருப்பது தெரியவருகிறது. 'ஔவை' மற்றும் 'ஏவாள்' ஆகிய இந்த இரண்டு சொற்களும் ஒரே அர்த்தத்தைக் (Semantics) குறிக்கின்றன: தமிழில் ஔவை என்றால் பூமி அல்லது "தாய்" அல்லது "அன்னை" அல்லது முதன்மையானவள் அல்லது இந்த பூமியில் தோன்றிய முதல் பெண் அல்லது பூமியில் உள்ள உயிர்களின் தாய் என்று பொருள்படும். எபிரேய மொழியில் ஏவாள் என்றால் "உயிரினங்களின் தாய்" (Mother of all living) அல்லது "உயிர் கொடுப்பவள்" என்று பொருள். புனித பையிளில் ஆதாம் தன் மனைவிக்கு இப்பெயரை இட்டதற்கான காரணமும் அதுவே ஆகும் (உலகில் வாழப்போகும் அத்தனை மனிதர்களுக்கும் அவளே ஆதித்தாய் என்பதால்). மனித குலத்தின் முதல் தாயைக் குறிக்க உலகத் தொன்மங்கள் பயன்படுத்திய சொல் இது தான், தமிழ் மொழியின் 'அவ்வை' என்ற சொல்லின் வேரிலிருந்து கிளைத்தது “ஈவ்” என்பது மொழியியலாளர்களின் பார்வையாகும். உலகின் மிகப்பழமையான நாகரீகங்களான சுமேரிய நாகரீகம், பாபிலோனிய நாகரீகம், எகிப்து நாகரீகம், கிரேக்க நாகரீகம், அரபு நாகரீகம், மெசபட்டோமிய நாகரீகம், சீன நாகரீகம் என அத்தனை பழமையான நாகரீகத்தின் மொழிகளிலும் தமிழ் மொழியின் வேர் சொற்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சிந்து சமவெளி நாகரீகம் என்பது முழுமையாக தமிழர்களின் நாகரீகமாகும். மொழியின் வலிமை திருவள்ளுவர் தனது முதல் குறலில் “அகர முதல எழுத்தெல்லாம்” என்பது என்னவென்றால், ஒரு உயிர் உருவாகி வெளிவரும் போது முதலில் வாயைத்திருந்தால் காற்றோடு வெளிவரும் ஒலி “அ” என்பதாகும். ஒரு உயிரின் முதன் ஒலியையும், உயிரின் துல்லியமான அளவையும் தமிழர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு உயிரின் அளவு என்ன என்பதை தமிழ் சித்தர் திருமூலர் தனது பாடலில் சுட்டிக்காட்டியுள்ளார். "மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய தார் அதில் ஒன்றாய்ப் பகுத்தபின் ஓவியம் ஓராயிரம் ஒன்றாம் அதுவே." திருமந்திரம் : 2011 இதன் பொருள், ஒரு பசுவின் மயிரின் நுனியை நூறு பங்காகப் பிரித்து 1/100, அதில் ஒரு பங்கை மீண்டும் ஆயிரமாகப் பிரித்தால் 1/1000 வரும் அளவு 1/1,00,000 இதுவே, இது தான் உயிரின் (சீவனின்) வடிவம் மற்றும் அளவு. ஆண் விந்து விதையாகவும், அதனை வளர்க்கும் நிலமாக கருவாகவும் பெண் இருக்கிறாள். இதில் விந்து என்பது ஒளி அல்லது ஆற்றல், நாதம் என்பது ஒலி அல்லது அதிர்வுகள். இரண்டும் இணைந்தால் தான் உயிர் உண்டாகும். சித்த மருத்துவத்தில், குழந்தை பிறந்தவுடன் அழும் போது எழுப்பப்படும் முதல் ஒலிகள் மூலம் அந்த குழந்தையின் உடலில் உள்ள பஞ்சபூதங்கள் மற்றும் நாடித் துடிப்புகள் அண்ட சக்தியோடு இணைக்கப்படுகிறது. இந்த முதல் ஒலிகள் 16 வகையாக அதிரும் என தமிழ் சித்தர்கள் நுணுக்கமாக அளந்து கூறியுள்ளனர். ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதை இந்த 16 வகை ஒலிகளும் மிகச் சரியாக வெளிப்படுத்துகிறது. இந்த 16 வகையான ஒலிகளின் அதிர்வுகளைப் பொருத்தே 16 ஆதார நிலைகள் வலுப்பெருகிறது: 1. அ - உயிரின் தொடக்கம். 2. ஆ - உயிர்க்காற்று உள்ளே செல்லுதல். 3. இ - உடலின் இயக்கம். 4. ஈ – வெளி இறை சக்தியோடு இணைதல். 5. உ - உதிர ஓட்டம் சீராவதல். 6. ஊ - ஊன் (உடல்) உயிர் நிலைபெறுதல். 7. எ - அறிவுத் தூண்டல். 8. ஏ – உணர்வு, உணர்ச்சிகளின் ஆரம்பம். 9. ஐ - ஐம்புலன்கள் விழிப்படைதல். 10. ஒ – மனம் வெளி உலக தொடர்பு. 11. ஓ - உலக வாழ்வை ஏற்க தொடங்குதல். 12. ஔ - ஔடதம் (உடலே மருந்து : மனமே விருந்து) 13. ரு - ஆழ் மன தொடர்பு 14. ரூ - மன ஒரு நிலை 15. லூ (அம்) - மன அமைதி 16. லௌ (அஹ) - மன நிம்மதி குழந்தை கருப்பையில் இருக்கும்போது அதன் தலை, கீழாக இருக்கும். அப்போது அது "ஸோஹம்" (நான் அவனாக இருக்கிறேன்) என்ற நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. பிறந்தவுடன் தலை கீழிறங்கி, பூமிக்கு வந்ததும் மாயையினால் "கோஹம்" (நான் யார்?) என்று அழுகிறது. இந்த பூமியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் தனது முதல் வெளி உலக தொடர்பில் ஒரு முழுமையான அழுகையின் போது 16 ஒலிகளை எழுப்பும். இந்த 16 எழுத்துக்களின் ஓசையும் ஒரு உயிரின் தொடக்கமாக இருப்பதால் இது உயிர் எழுத்து என்று தமிழில் வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இந்த 16 ஒலிகளுடன் அழுவது அதன் 72,000 நாடிகளையும் ஒருமுறை அதிரச் செய்து, நுரையீரலைச் சுத்தப்படுத்தி சுவாசத்தை தொடங்குகிறது. இந்த 16 ஒலிகளும் இணைந்து ஒட்டுமொத்தமாக "ஓம்" எனும் உயிர் ஓசையை உருவாக்குவதாக தமிழ் பெரும் அகத்திய சித்தர் தனது “அகத்தியர் பரிபூரணம் 1200” நூலில் உள்ள பாடல்களில் குறிப்பிடுகிறார். "பத்துமாதம் கருவிருந்து பூமிதன்னில் பரிவாக வந்துவிழும் வேளை தன்னில் சத்தமுடன் அகாரமுதல் ஒளகார மீறாய் சாற்றுகின்ற பதினாறு ஒலியும் தோன்றி முத்தியுள்ள பிரணவமாம் ஓங்காரத் துள்ளே முளைத்தெழுந்து நாதமாய் ஒலிக்கும் பாரே!" “இந்த 16 ஒலிகளும் தான் இந்த பூமியில் ஒரு மனித உயிர் சிறப்பாக வாழ இறைவன் வழங்க்கிய மந்திர ஒலிகள்" என்று உறுதியாக தமிழ் சித்தர்கள் கூறியுள்ளனர். குழந்தை பிறக்கும் வரை அதன் உணவும் சுவாசமும் தொப்புள் கொடி வழியாகவே நடக்கிறது. பிறந்தவுடன் அந்தத் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இப்போது குழந்தை சுயமாக சுவாசிக்க வேண்டும்.முதல் அழுகையின் போது எழும் 16 ஒலிகளும், அதிர்வுகளாக மாறி உடலில் உள்ள 16 ஆதார நிலைகளிலும் மோதுகின்றன. இது ஒரு மின்னோட்டம் பாய்வதைப் போல குழந்தையின் உடலை "சுய இயக்கத்திற்கு" (Automatic Mode) மாற்றுகிறது. இதன் மூலம் குழந்தையின் 16 உடல் ஆதார நிலைகளும் இயக்கம் பெறுகின்றன. 1. பாதம், 2. கணுக்கால், 3. முழங்கால், 4. தொடை, 5. மூலாதாரம் (முதுகெலும்பு நுனி), 6. சுவாதிட்டானம், 7. மணிபூரகம், 8. அனாகதம், 9. விசுத்தி, 10. ஆக்ஞை, 11. புருவ நடு, 12. நெற்றி, 13. உச்சி, 14. பிரம்மரந்திரம், 15. துவாதசாந்தம், 16. அறிவு நிலை. குழந்தை அழும்போது தொடக்கத்தில் எழும் 6 ஒலிகள் உடலின் பஞ்சபூத இயக்கத்தைச் சீர் செய்கின்றன: முதல் ஒலிகள் : அ (அகாரம்): இது நுரையீரலை விரிவடையச் செய்து, காற்றை (வாயு) உள்ளிழுக்கச் செய்கிறது. ஆ: வயிற்றுப் பகுதியை (மணிபூரகம்) அதிரச் செய்து, செரிமான மண்டலத்தைத் தூண்டுகிறது. இ, ஈ: இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைச் (ஆகாயம்) சுறுசுறுப்பாக்குகின்றன. உ, ஊ: இவை ரத்த ஓட்டம் மற்றும் உடல் வெப்பத்தைச் (அக்னி) சமன்படுத்துகின்றன. இதனைத் தொடர்ந்து எழும் அடுத்த 5 ஒலிகள் குழந்தையின் புலன்களை உலகத்தோடு தொடர்புபடுத்தத் தொடங்குகின்றன: இரண்டாம் ஒலிகள் : எ, ஏ: காதுகளின் கேட்கும் திறனைத் தூண்டுகின்றன. ஐ: இது கண்களின் பார்வைத்திறன் மற்றும் மூளையின் ஒருங்கிணைப்பை (Coordination) மேம்படுத்துகிறது. ஒ, ஓ: சுவை மற்றும் நுகர்தல் திறனை (Sense of smell and taste) உசுப்புகின்றன. இதனைத் தொடர்ந்து எழும் 5 ஒலிகளும் உயிரை முழுமைப்பெறச் செய்கின்றன. மூன்றாம் ஒலிகள் : ஔ, ரு, ரூ, லூ (அம்), லௌ (அஹ): இவை குழந்தையின் ஒட்டுமொத்த நரம்பு மண்டலத்தையும் ஒருமுறை அதிர்வுக்குள்ளாக்கி, உடலை ஒரு முழுமையான இயக்கத்திற்கு (Symphony) கொண்டு வருகின்றன. இந்த ஒலிகளின் அதிர்வுகள் இன்றி உடல் உறுப்புகள் எதுவும் இயங்க முடியாது. இதனால்தான், சித்தர்கள் இந்த 16 ஒலிகளையும் "உயிர் மந்திரங்கள்" என்று அழைக்கிறார்கள். அந்த அழுகை நின்ற பிறகுதான், குழந்தை இந்த உலகத்தை உணரத் தொடங்குகிறது. குழந்தையின் முதல் முழுமையான இந்த 16 ஒலிகள், அந்த குழந்தை இந்த பூமியில் வாழ தேவையான 16 செல்வங்களையும் ஈர்க்கின்றன. இந்த 16 வகையான செல்வங்களையும் 16 வகையான கலைகள் ஈர்த்துகொடுக்கின்றன. சித்தர் தத்துவத்தின்படி, நிலவின் 16 கலைகள் எப்படி வளர்ந்து முழுமையை (பௌர்ணமியை) அடைகிறதோ, அதேபோல குழந்தையின் உடலில் உள்ள 16 கலைகளும் விழிப்படைய வேண்டும். குழந்தை பிறந்தவுடன் அழுதால் மட்டுமே இந்த 16 கலைகளும் உடலில் தங்கும். இதையே சித்தர்கள் "அமிர்த நிலை" என்கிறார்கள். 'அ' முதல் 'ஔ' வரையிலான 16 உயிர் எழுத்துக்களும் "மந்திர மாத்ருகா" என்று அழைக்கப்படுகின்றன. இந்த எழுத்துக்களின் ஒலிகள் ஒவ்வொன்றும் உடலின் ஒரு குறிப்பிட்ட நரம்பு முடிச்சைத் தூண்டி, 16 செல்வங்களையும் (பண்புகளையும்) ஒரு மனிதனுக்குள் ஈர்த்துக்கொடுக்கும் மாபெரும் இறை சக்தியை கொண்டவை. 16 செல்வங்களும், அதனை ஈர்க்கும் ஒலிகளும் : 1. (அ) : அறிவு 2. (ஆ) : ஆரோக்கியம் 3. (இ) : நீண்ட ஆயுள் 4. (ஈ) : செல்வம் 5. (உ) : தானம் / உதவி மனம் 6. (ஊ) : புகழ் 7. (எ) : வலிமை 8. (ஏ) : தைரியம் 9. (ஐ) : நல்ல நண்பர்கள் (அனைத்து செல்வங்கள்) 10. (ஒ) : நல்ல வாழ்க்கை துணை 11. (ஓ) : நல்ல பிள்ளைகள் 12. (ஔ) : ஒழுக்கம் 13. (ரு) : மன அமைதி 14. (ரூ) : இன்பம் 15. (லூ) : பக்தி 16. (லௌ) : விடுதலை ஒரு குழந்தை அழும் போது தொண்டையில் உள்ள விசுக்தி சக்கரத்தின் 16 இதழ்கள் இந்த 16 ஒலிகளைத் தூண்டி 16 செல்வங்களை ஈர்த்துக்கொடுக்கிறது. ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தின் அடிப்படையில், அதன் கர்ம வினை பலன்களுக்கு ஏற்ப அறிவாற்றல், செல்வ செழிப்பு, வீரம், ஆயுள் அனைத்தும் தீர்மானிக்கப்படுகிறது. மந்திரங்களின் தாய் "நாதம்", "ஓங்காரம்", "உயிரொலி", "அனைத்து மந்திரங்களுக்கும் மூலமந்திரம்" என்று சொல்லப்படும் பிரணவ மந்திரம் “ஓம்” “ஓம்” என்ற உயிரொலியிலிருந்து தான் திருக்குறள் தொடங்குகிறது. உணர்வில் கலந்த ஒலிகள் நரம்பை சீரான அதிர்வுகளில் இயக்குகிறது. அப்போது இந்த அதிர்வலைகள் பிரபஞ்ச ஆற்றோடு மோதி பேராற்றலாக திரும்புகிறது. இது மந்திர சக்தி அல்லது பேராற்றல் நிலை என்கிறோம். உணர்வுப்பூர்வமான அன்பு உள்ளத்தில் இருந்தால், எந்த மொழியின் ஒலிகளும் மந்திரமாகும். அகர : முதல் சொல் (அ) (A) முதல : இரண்டாம் சொல் உ (ம+உ) (U) எழுத்தெல்லா-ம் : மூன்றாம் சொல் (ம்) (M) "ஓம்" (AUM) அ : படைத்தல் – பிறப்பு உ : காத்தல் – வாழ்தல் ம் : அழித்தல் – முடிதல் அ உ ம் இதன் சுருக்கமே ஓம். இந்த ஒலி தான் அனைத்திற்குமான ஆதார ஒலி. "ஓம்" என்ற உயிரொலி ஒலித்த பின் வரும் மௌனம் “துரிய நிலை” “பரம்பொருள்” “முக்தி நிலை”. இந்து மதத்தில் "ஓம்" யூத மற்றும் கிருஸ்த்துவ மதத்தில் "ஆமென்" முஸ்லீம் மதத்தில் "ஆமின்" என ஒரு வார்த்தையே மந்திரமாக மாறுகிறது. யூத, கிருஸ்துவ மதத்தின் “ஆமென்” (AMEN) என்பது "அப்படியே ஆகுக", "உண்மையாகவே" "இறைவன் அருளால் நிறைவேறுக" என்ற பொருளில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. A – Acceptance (ஏற்றுக்கொள்ளுதல்) இறைவனின் சித்தத்தை ஏற்றுக்கொள்ளுதல். M – Manifestation (நிறைவேறுதல்) பிரார்த்தனை அல்லது வேண்டுதல் வெளிப்பட்டு நிறைவேறுதல். E – Endorsement (உறுதிப்படுத்துதல்) சொல்லப்பட்ட உண்மையை உறுதிப்படுத்துதல். N – Now and Forever (இப்போதும் என்றென்றும்) காலமெல்லாம் நிலைத்திருக்கும் இறை அருள் என்ற புனித விளக்கம் இதில் உள்ளது. அதோ போன்று, இஸ்லாம் மதத்தில் "ஆமின்" (AMEEN) என்பது "இறைவா, எங்கள் வேண்டுதலை ஏற்றுக்கொள்" என்ற பொருளில் வணங்கப்படுகிறது. A = Acceptance (ஏற்றுக்கொள்ளுதல்) M = Mercy (கருணை) E = Endorsement (உறுதிப்படுத்துதல்) E = Eternity (நித்தியம்) N = Nearness to God (இறைவனின் நெருக்கம்) இப்படி அனைத்து மதங்களிலும் உச்சரிக்கப்படும் மந்திரச்சொற்கள் “அ” என்ற எழுத்திலிருந்து தான் தொடங்குகிறது. உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளும், அனைத்து மதங்களின் தோற்றமும் ஒரே மாதிரியாகத்தான் தொடங்குகின்றன. இதில் உயர்வு தாழ்வு என்பது இல்லை. உதாரணமாக தமிழ் மொழியில் உள்ள அரிச்சுவடி என்பது மனித உயிர் மற்றும் உடலை இயக்கும் ஒலியிலிருந்து எழுத்துக்கள் படைக்கப்பட்டிருக்கிறது. உயிர் வாழ அடிப்படை ஓசையான “அகரம் தொடங்கி 12 எழுத்துக்கள்” உயிர் எழுத்துக்கள் எனப்படுகிறது. உடலை இயக்கும் “அடிப்படை புள்ளிகளான 18 எழுத்துக்கள்” மெய் எழுத்துக்கள் எனப்படுகிறது. மனித உடலின் 7 சக்கரங்களே உயிரை இயக்குகிறது. அந்த ஏழு சக்கரங்களையும் 12 எழுத்துக்களின் ஓசைகளே இயக்குகின்றன: அ, ஆ என்ற எழுத்துக்களின் ஓசை உயிராதாரச் சக்கரம் (மூலாதாரதம்) இயக்குகிறது. இ, ஈ என்ற எழுத்துக்களின் ஓசை இன்பச்சக்கரம் (சுவாதிஷ்டானம்) இயக்குகிறது. உ, ஊ என்ற எழுத்துக்களின் ஓசை நாபிச்சக்கரம் (மணிபூரகம்) இயக்குகிறது. எ, ஏ என்ற எழுத்துக்களின் ஓசை இதயச்சக்கரம் (அனாகதம்) இயக்குகிறது. ஐ என்ற எழுத்தின் ஓசை தொண்டைச்சக்கரம் (விசுத்தி) இயக்குகிறது. ஒ, ஓ என்ற எழுத்துக்களின் ஓசை நெற்றிச்சக்கரம் / மூன்றாம் கண் (ஆக்ஞை) இயக்குகிறது. ஔ என்ற எழுத்துக்களின் ஓசை ஆயிரம் இதழ் சக்கரம் /உச்சிச்சக்கரம் (சஹஸ்ராரம்) இயக்குகிறது. இதே போன்று, தமி`ழ் மொழியின் அரிச்சுவட்டில் 18 மெய்யெழுத்துக்கள் உள்ளன. இதில் வல்லினம் (6): மார்பிலிருந்து பிறக்கும் வன்மையான ஒலிகள் (க், ச், ட், த், ப், ற்). மெல்லினம் (6): மூக்கிலிருந்து பிறக்கும் மென்மையான ஒலிகள் (ங், ஞ், ண், ந், ம், ன்). இடையினம் (6): கழுத்திலிருந்து பிறக்கும் இடைப்பட்ட ஒலிகள் (ய், ர், ல், வ், ழ், ள்). இப்படி ஒவ்வொரு மொழிக்கும் ஒரு வகையில் சிறப்புண்டு. உலகில் படைக்கப்பட்ட எந்த மொழியும் தாழ்ந்த மொழி அல்ல. இதில் சில மொழிகள் இயற்கையின் ஒசைகளிலிருந்தும், உயிரின் ஒலிகளிலிருந்து உருவாகியிருக்கிறது. அதில் தமிழ் மொழி உலகம் தோன்றிய காலத்திலிருந்து தோன்றிய மொழி என்பதால் அதில் பல்வேறு சிறப்புகள் உள்ளன. இறைவன் தான் அனைத்து மொழிகளையும் படைத்தார் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தன் தாய்மொழியை மதிக்க வேண்டும், காக்க வேண்டும். இதில் சிலர் “தான் விரும்பிய மொழி வளர வேண்டும் என்பதற்காக, பிற மொழிகளை அழித்துக்கொண்டிருக்கின்றனர்”. இது இறைவனின் உணர்வுகளை அழிப்பதற்கு சமம். இப்படி ஒரு உயிரும், உயிரும் உணர்வுகளைப் பரிமாறிக்கொண்டிருக்கும் ஒரு மொழியை அழிப்பவர்களுக்கு கர்மவினையில் கடுமையான தண்டனை உண்டு. அந்த தண்டனை என்பது “யார் ஒருவர், ஒரு மொழியை அழிக்க துணிகிறார்களோ அல்லது கேவலமாக நினைக்கிறார்களோ அல்லது இழிவாக பேசுகிறார்களோ, அவர்கள் அடுத்தடுத்த பிறவிகளில் ஊமையாகப் பிறப்பார்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் ஊமையாகப் பிறப்பார்கள் அல்லது அவர்கள் வெளியில் சொல்லமுடியாத மன வேதனையால் அழுது துடிப்பார்கள்”. ஒளியான இறைவன் ஒலியாக மாறும் கலையே வள்ளுவர் தியானம். மொழியை இறைவன் படைத்தான் என்பதை விடவும், மனிதன் தன் உணர்வுகளை ஒலிகள் மூலம் வெளிப்படுத்த உருவாக்கிக்கொண்ட ஒரு கருவியே மொழி. இதனை ஞானப்புலவர் கந்தசாமியார் பாடல் மூலம் விளக்குகிறார். வையம் ஈன்ற தொன்மக்கள் உளத்தினைக் கையினாலுரை காலம் இரிந்திடப் பைய நாவை அசைத்த பழந்தமிழ் ஐயை தாள்தலை கொண்டு பணிகுவாம்!” இந்த உலகத்தில் பிறந்த பழங்கால மனிதர்கள், தங்கள் மனதிலுள்ள கருத்துகளைக் கைகளின் சைகைகளால் மட்டுமே பரிமாறிக்கொண்டிருந்த காலம் ஒழிந்து போகும்படி, மெதுவாகத் தங்கள் நாவை அசைத்து முதன்முதலாகப் பேசிய பழமையான மொழி தமிழ், அந்தத் தமிழ்த்தாயின் பாதங்களில் தலைவைத்து வணங்குவோம் என்று பாடுகிறார். இந்த உலகத்திற்கு ஒளியான இறைவன் கொடுத்த முதல் தியான மந்திர ஒலி “ஓம்” என்ற மந்திர ஒலி தான். அந்த மந்திர ஒலியையும் முதன் முதலில் உலகத்திற்கு இறைவன் தமிழ் மொழியிலேயே படைத்தான் என அருள் திரு அருணகிரிநாதர் பாடுகிறார். இதில் பேரண்டத்தையும், உயிர்களையும் உருவாக்கும் ஆதார ஒலி, ஆதி ஒலியான (பிரணவ மந்திரம்) “ஓம்” என்னும் சொல் முதன் முதலில் ஒலிக்கத்தொடங்கியது தமிழில் தான் என்பதை அருணகிரி நாதர் தனது பாடலில் தெளிவாக விளக்குகிறார். “தமிழ்க் காரமுற்றுப் பிரணவ மெய்ப்பொருளை அன்று தந்தைச் சடையார்க்கு ஒன்றைத் தெரியக் கொஞ்சித் ... தமிழ்ப் பகர்வானே! திருப்புகழ் பாடல் எண்: 242 இந்த பாடலின் விளக்கம்: இனிமையும், செறிவும், நிறைந்த தமிழில், "ஓம்" என்னும் பிரணவம் மந்திரத்தின் உண்மைப் பொருளை சடையுடைய தந்தையான சிவபெருமானுக்கு ஒரு மறைபொருளை அறியும்படி அன்போடு, குருவாக இருந்து தமிழில் உபதேசித்தவனே! என்று பொருள் கொள்ளப்படுகிறது. இந்த பாடலின் மூலம் இறையனார் சிவபெருமானும், பார்வதியும், தமிழ் வளர்த்த முருக பெருமானும் மற்றுமுள்ள இறை சக்திகளின் மொழி, மூல மொழி, முதல் மொழி தமிழ் மொழி என்பது உறுதியாகிறது. அதே போன்று உலகத்தில் ஒரு மொழிக்கு சங்கம் வைத்து 10 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்த பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. உலகம் முழுவதும் பரவிய “வள்ளுவர் தியானம்” முதல் தமிழ்ச்சங்கம் அனைத்துலக கலைகளின் தாய் மடி ஆதி தமிழ்க் குடி என்ற உண்மையை உலகிற்கு உணர்த்த பல கோடான கோடி ஆதாரங்கள் இந்த பூமி முழுவதும் பரவி கிடக்கின்றன. முதல் தமிழ்ச்சங்கம் 4,440 ஆண்டுகள் (கடல் கொண்ட தென்மதுரை) தமிழ் மன்னர்களான காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை 89 தமிழ் மன்னர்கள் தமிழ்ச்சங்கத்தை வளர்த்தனர். இம்மன்னர்கள் தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியத்தையும், விவசாயம், வேட்டையாடுதல், வானியல், வணிகம், ஜோதிடம், அறிவியல், ஆன்மீகம், தியானம், யோகா, பூகோளவியல், வரலாறு, கணிதம், கடல் அறிவு, சித்த மருத்துவம், இரசவாதம் உள்ளிட்ட அனைத்து அறிவு சார் கலைகளையும் உலக நாடுகள் அனைத்திற்கும் எடுத்துச்சென்றுள்ளனர். இரண்டாம் தமிழ்ச்சங்கம் இரண்டாம் தமிழ்ச்சங்கம் 3,700 ஆண்டுகள் (கபாடபுரம், இதுவும் கடல் கோளால் மூழ்கடிப்பட்டது) தமிழ் மன்னர்களான வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை 59 மன்னர்கள் தமிழை உயிரினும் மேலாகக் கட்டிக்காத்தனர். இம்மன்னர்கள் கட்டடக்கலை, நாட்டுப்புறவியல், தத்துவவியல், அரசியல், தியானம், யோகா, மருத்துவம், வானிலை ஆராய்ச்சி, ஓவியம், நாடகம், சித்த மருத்துவத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட அறிவு சார் கலை நுணுக்கங்களை உலக நாடுகளுக்கு சொல்லிக்கொடுத்து தமிழ் வளர்த்தனர். மூன்றாம் தமிழ்ச்சங்கம் மூன்றாம் தமிழ்ச்சங்கம் 1850 ஆண்டுகள் (தற்கால மதுரையில் - உத்தர மதுரை) தமிழ் மன்னர்களான முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை 49 தமிழ் மன்னர்கள் ஆன்மீகம், போர்க்கலை, மல்யுத்தம், வர்மக்கலை, வணிகம், வியாபாரம், இசை, இலக்கியம், ஆன்மீகம், தியானம், யோகா உள்ளிட்ட அனைத்து அறிவு சார் கலைகளையும் உலக நாடுகளுக்கு சொல்லிக்கொடுத்து தமிழ் வளர்த்தனர். அதோடு உலகத்தின் பல நாடுகளில் ஞானத்தமிழர்கள் அந்த நாட்டு மக்களோடு இணைந்து புதிதாக ஏறத்தாழ 6,800 மொழிகளை உருவாக்கியிருக்கலாம் என மொழியியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது இன்று வரை உலகில் உள்ள 7,000 த்திலிருந்து 7,170 மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. இதில் 99 சதவீத மொழிகளில் தமிழ் மொழியின் வேர்ச்சொற்க்கள் இருப்பதை உறுதி செய்துள்ளனர். “வள்ளுவர் தியானம்” 3,700 தியான முறைகளில் முதன்மையானது முதல் தமிழ்ச்சங்கம் 4,440 ஆண்டுகள் நடைபெற்றது. அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் பெரும்பாலான நூல்கள் கடல் நீரால் அழிந்துவிட்டன. முதல் தமிழ்ச்சங்கத்தில் சித்தர்கள் சித்த மருத்துவ னூல் நூலகளை இயற்றியுள்ளனர். இதில் இந்த உலகம் தோன்றியதிலிருந்து மறையும் வரை மனிதர்களுக்கு வரும் மொத்த நோய்களின் எண்ணிக்கை 4,448 என்றும், அத்தனை நோய்களையும் முழுமையாக குணப்படுத்த மருத்துவ மூலிகை மருந்துகளையும், அதன் முறைகளையும் எழுதியுள்ளனர். மனிதன் இனம் தோன்றிய காலத்திலிருந்து உருவான முதல் மருத்துவம் ஞானத்தமிழர்களின் சித்த மருத்துவம் மட்டும் தான். இந்த மருத்துவத்தை அந்தந்த நாடுகளில் வாழ்ந்த மக்களுக்கு ஏற்ப ஞானத்தமிழர்கள் உலகத்திற்கு கொடையாக அளித்துள்ளனர். இந்த முதல் தமிழ்ச்சங்கத்தில் இறையனார் சிவபெருமான், தமிழ்க்கடவுள் முருக பெருமான், அகத்தியர், முரிஞ்சியூர் முடிநாகராயர், நிதி கிழவன் (குபேரன்) உள்ளிட்ட 4,449 தலைமைப் புலவர்கள் சங்கத்தை வழி நடத்தியதாக தமிழ்ப்புலவர்கள் தெரிவிக்கின்றனர். ++++++++++++++++++++++++++++++ இரண்டாம் தமிழ்ச்சங்கம் 3,700 ஆண்டுகள் நடத்தப்பட்டது. இந்த உலகத்தில் 84 லட்சம் உயிர்கள் வாழுகின்றன. எனவே அந்ததந்த உயிர்களுக்கு ஏற்ப 84 லட்சம் ஓகக்கலைகளை “முதல் தமிழ் சித்தர் சிவபெருமான்” பார்வதி தேவிக்கு கற்றுத்தந்தாக தமிழ்ச்சித்தர்கள் கூறுகின்றார்கள். “ஓகம்” என்றால் உடலையும் உள்ளத்தையும் ஒன்றிணைக்கும் கலையே ஓகக்கலை ஆகும். இந்த ஓகக் கலை தான் தற்போது யோகா என்று நாம் அழைக்கிறோம். இதில் தற்போது 84 யோகா ஆசனங்கள் தான் பெறும்பாலும் பயிற்சி செய்யப்படுகிறது. அதே போன்று இது மனித உடலில் 72,000 நாடிகளை, 114 சக்தி மையங்களை, ஒரு நாளைக்கு சராசரி 21,600 மூச்சுக்காற்றால் எப்படி இயக்குகிறார்கள் என்பதைப் பொருத்தே ஒருவரின் வாழ்க்கை அமைகிறது. இந்த சுவாச ஓட்டத்தின் அடிப்படையில் ஞானத்தமிழர்களின் தியானக் கலைகள் மொத்தம் 3,700 எனவே தான் இரண்டாம் தமிழ்ச்சங்கத்திற்கு 3,700 ஆண்டுகள் என தீர்மானித்ததாக தமிழ் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும்ம் தற்போது நமக்கு கிடைத்துள்ள தியானக்கலைகள் ஏறத்தாழ 37 என தியான பயிற்சிகளையும், அனுபவமும் பெற்ற தற்போதைய ஆசிரியர்கள் கூறுகின்றனர். இந்த 37 தியான முறைகள் திருமந்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. திருமந்திர தியானப் பாதை 20 : 1. அகர தியானம், 2. மூல ஒலி (ஓம்) தியானம் (பிரணவ) 3.மூச்சு தியானம் 4. வாசி யோகம் 5. நாத தியானம் 6.ஒளி தியானம் 7. சக்ர தியானம் 8.குண்டலினி தியானம் 9.அகக்கண் தியானம் 10. புருவமத்திய தியானம் 11.சஹஸ்ரார தியானம் 12. குரு தியானம் 13.லிங்க தியானம் 14. ஆன்ம தியானம் 15. சும்மா இருப்பு தியானம் 16. மன ஒருமைப்பாட்டு தியானம் 17. புலனடக்க தியானம் 18. அருள் தியானம் 19. அன்பு தியானம் 20. சிவசக்தி தியானம் திருமந்திர யோக தியானம் 8 : 1. இயமம் 2. நியமம் 3. ஆசனம் 4.பிராணாயாமம் 5. பிரத்யாகாரம் 2. தாரணை 7. தியானம் 8. சமாதி திருமந்திர உயர் தியானம் 9 : 1. தாரணை 2. தியானம் 3. சவிகல்ப சமாதி 4. நிர்விகல்ப சமாதி 2. துரியம் 6. துரியாதீதம் 7. சிவானுபூதி 8. சிவசாயுஜ்யம் 9. பரஞ்ஞான நிலை ஆகியவை அனைத்தும் சேர்ந்து மொத்தம் 37 தியான வகைகளை நாம் தற்போது பயின்று வருகிறோம். தியான கலைகளில் 3,700 வகைகளும் தற்போது இல்லை. ஆனாலும் இதன் தியான முறைகளின் தொடர்ச்சியையும், பெயர்களின் தொடர்பையும் உலகின் பல நாடுகளிலும், இந்தியாவிலும் இருப்பதை அறிகிறோம். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தில், “அனைத்துலக இலக்கணத்தின் தந்தை” தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழி, மோசி மற்றும் 59 தலைமைப்புலவர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் (5,000 ) மேற்பட்ட புலவர்கள் சங்கத்தை வழி நடத்தியுள்ளனர். உலகத்தில் ஈடு இணையற்ற ஒரே நூல் “தொல்காப்பியம்” முதல் தமிழ்ச்சங்கம் ஆழிப்பேரலையால் அழிந்த பிறகு, அதில் கிடைத்த நூல்களை வைத்து எழுதப்பட்ட நூல் தான் தொல்காப்பியம் ஆகும். ஒரு மனிதனுக்கு இருக்கும் பசி, தாகம், தூக்கம், மகிழ்ச்சி, சோகம், காதல், உடலுறவு போன்ற உணர்வுகள் உள்ளன. இதே உணர்வுகள், ஆடு, மாடு, மான், மீன், மரம், செடி, கொடி உள்ளிட்ட அனைத்து உயிர்களுக்கும் உண்டு என்றும் அதற்கும் வாழ்வியல் இலக்கணத்தை 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே வகுத்த ஒரே நூல் உலகத்தில் தொல்காப்பியம் மட்டுமே. உலகில் ஞானத்தமிழர் தொல்காப்பியர் தான் முதன் முதலில் அறிவை வைத்து உயிர்களை வகைப்படுத்தியுள்ளார். ஓரறிவு (உற்றறிதல் - தொடுதல் உணர்வு மட்டும்): புல், மரம், செடி, கொடிகள். ஈரறிவு (தொடுதல் + சுவைத்தல்): சிப்பி, நத்தை. மூன்றறிவு (தொடுதல் + சுவைத்தல் + மூக்குதல்/மோப்பம்): கறையான், எறும்பு. நான்கறிவு (தொடுதல் + சுவைத்தல் + மோப்பம் + காணல்/கண்): நண்டு, தும்பி (பூச்சிகள்). ஐந்தறிவு (தொடுதல் + சுவைத்தல் + மோப்பம் + கண் + கேட்டல்/செவி): நாற்கால் விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள். ஆறறிவு (மேற்கண்ட ஐந்துடன் + மன அறிவு/பகுத்தறிவு): மனிதர்கள். அதே போன்று எழுத்துகளின் எந்த ஒலிகளுடன், எந்த அதிர்வுகளோடு, எப்படி உருவாகிறது என்பது பற்றியும் விளக்குகிறார். மூன்றாம் தமிழ்ச்சங்கம் 1850 ஆண்டுகள் நடத்தப்பட்டதில் நக்கீரர், கபிலர், பரணர், ஓதலாந்தையார் போன்ற 49 தலைமைப் புலவர்கள் உள்ளிட்ட முக்கியப்புலவர்கள் 1850 பேர்கள் வழி நடத்தினார்கள் என சில தமிழ் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்களும், திருவள்ளுவரின் திருக்குறள், ஔவையாரின் ஆத்திச்சூடி, ஞானக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மூன்றாம் தமிழ்ச்சங்கத்தில் தான் அரங்கேறியுள்ளன. ஞானத்தமிழர்கள் “புலவர்கள்” என குறிப்பிட்டது அறிவியல், கணிதம், ஜோதிடம், வானவியல், ஓகம் எனப்படும் யோகா உள்ளிட்ட கலைகளில் புலமைப் பெற்றவர்களை “புலவர்கள்” என்றே அழைத்தனர். மூன்று தமிழ்ச்சங்கத்தின் தலைமைப்புலவர்கள் குறைந்தபட்சம் 10,000 (பத்தாயிரம்) பேர்கள் இருந்தனர், இடை நிலைப்புலவர்கள் ஏறத்தாழ 50,000 (ஐம்பதாயிரம்) பேர்கள் இருந்தனர், இளம்புலவர்கள், பெண் புலவர்கள் என சுமார் 1,00,000 (ஓரு லட்சம் புலவர்கள்) பேர்கள் தமிழில் அனைத்து அறிவுக்களஞ்சியத்தையும் எழுதி வைத்திருந்தனர். இவர்கள் எழுதி தமிழ்ச்சங்கத்தால் அங்கீகரிப்பட்ட நூல்கள் பல கோடி நூல்கள். ஆனால் இதில் 70 சதவீதம் நூல்கள் கடலில் மூழ்கி அழிந்துவிட்டது. மேலும், 25 சதவீத நூல்கள் தமிழ் மொழியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கொளுத்தப்பட்டும், சாம்பலாக்கபட்டும், புதைக்கப்பட்டும், தண்ணீரில் வீசி எறியப்பட்டும் அழிக்கப்பட்டது. இன்னும் பல ஆயிரக்கணக்கான நூல்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு மூலத் தமிழ் நூல்கள் அழிக்கபட்டது. இன்னும் பல நூல்கள் இடைச்செறுகலாக மொழி மாற்றம் செய்யப்பட்டு, அது தமிழ் நூல்களே இல்லை என புறக்கணிப்பட்டுள்ளது. இதில் மிக மிக அரிதாக காப்பாற்றப்பட்ட 5 சதவீத ஞானத்தமிழ் நூல்கள் மட்டும் தான் தற்போது நமக்கு கிடைத்துள்ளது. உலக சிறப்பு வாய்ந்த இந்த தியான கலைக்கு “வள்ளுவர் தியானம்” என பெயர் பெறக் காரணம். தமிழ் மொழியில் உள்ள எல்லா சிறப்புகளும், சாதி, மத, இன, மொழி என எந்த வித வேறுபாடும் இல்லாமல் தற்போது உலக மக்கள் அனைவரும் அறிந்த, ஏற்றுக்கொண்ட நூல் என்பதால் அதை எழுதிய திருவள்ளுவரின் பெயரே அந்த தியானத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. அனைத்துலக உயிர்களின் மூல ஒலித் தத்துவமே வள்ளுவர் தியானம் ஞானத்தமிழர்களான சித்தர்கள் சித்த மருத்துவம் மற்றும் யோக மரபுகளில், நெடில் உயிர் எழுத்துக்களான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய அனைத்துலக உயிர் மூல ஒலித் தத்துவங்களின் சிறப்பை விளக்கியுள்ளனர். இந்த உயிர் மூல ஒலிகள் அனைத்து அண்டங்களிலும் உள்ள உயிர் இயக்க மூல ஒலிகள் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பூமியில் இந்த ஏழு ஒலிகளுக்கும் இணையான ஒலிகள் எதுவுமில்லை எனவும், அனைத்து மந்திரங்களின் மூல ஒலிகளாகவும் (பீஜாக்ஷரங்கள்), குண்டலினி சக்தியை எழுப்பும் ஆதார ஒலிகளாகவும், இந்த “இறை ஒலித் தத்துவத்தை” சித்தர்கள் போற்றுகின்றனர். ஞானத்தமிழர்களான சித்தர்களின் பாடல்களில் இந்த எழுத்துக்கள் "சப்த மாதாக்கள்" (ஏழு அன்னை வடிவங்கள்), உடலின் ஏழு சக்கரங்கள் மற்றும் பஞ்சபூத சக்திகளோடும் தொடர்புடையதை விளக்கியுள்ளனர். 1.வள்ளுவர் தியானத்தில் இறைவனைக் காணலாம் ஞானத்தமிழர் திருமூலர் அகர ஒலிகள் மூலம் இறைவனைக் கண்ட அனுபவத்தின் அழகாக எடுத்துரைக்கிறார். "ஆவோடு ஈஊ ஏஐ ஓஔ எனும் பாவோடு பாசம் அறுப்பவர் ஆர் இல்லை ஆவோடு ஈஊ ஏஐ ஓஔ என்று பாவோடு அணைந்தவர் பால்அணைந் தாரே." திருமந்திரம் பாடல் : 986 விளக்கம் :ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்ற உயிரொலிகளின் உள்ளார்ந்த சக்தியையும் தத்துவப் பொருளையும் உணராமல் வெறும் உலகப் பற்றுகளை அறுத்துவிட யாராலும் முடியாது. ஆனால், இந்த உயிரொலிகளைத் தியானித்து, அவற்றின் மெய்ப்பொருளை உணர்ந்து, மனதை அதில் ஒன்றச் செய்தவர்கள் இறைநிலையை அடைந்து பரம்பொருளோடு கலந்துவிடுகின்றனர். 3. வள்ளுவரின் ஒளி தியானம் ஞானத்தமிழர் திருமூலர் அகர ஒலிகள் மூலம் தன் உடலை ஒளி உடலாக மாற்றியதன் எளிய வழிகளை மக்களுக்கு விவரிக்கிறார். "ஆவோடு ஈஊ ஏஐ ஓஔ என்றவை மூவோடு ஐந்துமுப் பத்துமாய் நின்றன சேவோடு மாடாய்ச் செழுஞ்சுடர் ஞாயிறாய் மேவோடு அணைந்து விளங்கிநின் றானே." திருமந்திரம் பாடல் : 1012 விளக்கம் : ஞானத்தமிழர்களான சித்தர் யோக மரபில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்ற ஏழு நெடில் உயிரொலிகள் என்பது உலக உயிர்களின் மூல அதிர்வொலிகள், முதல் பிராண சக்தி ஒலிகள், உலக தியான மந்திர ஆதார ஒலிகள். “மூவோடு ஐந்துமுப் பத்துமாய் நின்றன” என்பது, : மூன்று ( இறை சக்திகள் படைப்பு, காப்பு, அழிவு) (மனித சக்திகள் இடகலை, பிங்கலை, சுட்சுமம்) ஐந்து (பஞ்சபூதங்கள் =நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்) முப்பது என்பது சைவ சித்தாந்தத்தின் படி அண்டமும், மனித உடலும் 36 தத்துவங்களால் ஆனது. (ஆன்ம தத்துவங்கள் 24, வித்தியா தத்துவங்கள் 7, சிவ தத்துவங்கள் 5 ). இதில் சிவ தத்துவம் 5, ஆன்ம தத்துவத்தில் 1 நீங்களாக 30 முக்கிய தத்துவம் என்பதாகும். இந்த அகர உயிரொலிகள் பிரபஞ்சத்தின் அனைத்து தத்துவங்களிலும் பரவி நிற்கின்றன. “சேவோடு மாடாய்ச் செழுஞ்சுடர் ஞாயிறாய்” சேடு (சேவு - எருது/காளை): காளை என்பது வேகத்திற்கும் ஆண்மைத் தன்மைக்கும் குறியீடு. இது நம் வலது நாசி வழியே ஓடும் வெப்பமான "சூரிய கலை" (பிங்கலை) மூச்சைக் குறிக்கும். (சேவோடு = சிவந்த ஒளி / சிவசக்தி) மாடு (பசு): பசு என்பது குளிர்ச்சிக்கும் பெண்மைத் தன்மைக்கும் குறியீடு. இது நம் இடது நாசி வழியே ஓடும் குளிர்ச்சியான "சந்திர கலை" (இடகலை) மூச்சைக் குறிக்கும். செழுஞ்சுடர் ஞாயிறு (சூரியன்): இடது, வலது ஆகிய இரு நாசி மூச்சுகளையும் சமநிலைப்படுத்தி, நடு நரம்பான "சுழுமுனை" (Sushumna Nadi) வழியாக மூச்சை மேலே செலுத்தும் போது, அங்கே அறிவு என்னும் பேரொளி (சூரியன்) பிரகாசிக்கும். 3.நோய்களை நீக்கி ஞானமடைய வைக்கும் வள்ளுவர் தியானம் (உடலே மருந்து) ஞானத்தமிழர் திருமூலரின் திருமந்திரத்தில் “ஒலி உச்சரிப்பை மந்திர அதிர்வு சக்திகளாக” மாற்றுவது பற்றியும், நாடிச் சுத்தி, பிராணாயாமம் மற்றும் குண்டலினி யோகம் பற்றியும், தமிழ் உயிர் எழுத்துக்களின் உயிர் பதத்தை பற்றியும் விவரிக்கிறார். திருமந்திரம் - பாடல் 980 (நான்காம் தந்திரம் - மாத்ருகா பேதம்) "ஆவோடு ஈயும் ஊவோடு ஏயும் ஓவோடு ஐயும் ஒளவோடு ஆம் ஏழும் மேவோடு உடம்பும் உயிரும் உலகமும் சாவோடு நீங்கிச் சதாசிவம் ஆமே." விளக்கம் : ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழு நெடில் எழுத்துக்களின் ஒலிகளையும் முறையாக உடலுக்குள் ஓதி (தியானித்து) பழகினால், அவை உடலையும் உயிரையும் உலகியல் மாயைகளில் இருந்தும், சாவோடு தொடர்புடைய பிணிகளில் இருந்தும் நீக்கி, சதாசிவ நிலையை (பேரின்ப நிலையை) அடையச் செய்யும் என்பதை பாடலின் விளக்கம். 4.சாகா வரம் தரும் வள்ளுவர் தியானம் மனிதர்கள் பிறப்பதற்கு காரணமே மீண்டும் பிறவாமல் இருக்க பாவங்களை கழித்து புண்ணியம் சேர்க்கத்தான். அப்படி மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலைக்குச் செல்ல “சாகா வரம் அளிக்கும் மந்திர ஒலி தான் அகரம்” என ஞானத்தமிழர் திருமூலர் தனது அனுபவத்தை அறிவிக்கிறார். "ஆஈ ஊஏ ஐஓ ஔவென்று ஓவாமல் ஓதும் உயர்நெறி உன்னுமின்கள் சாவா வரம் தரும் சத்தி எழுத்திவை தேவாதி தேவன் திகழும் எழுத்தே." திருமந்திரம் - பாடல் 1256 விளக்கம் : ஆ முதல் ஔ வரையிலான எழுத்துக்களை இடைவிடாது உள்ளுக்குள் ஓதி, அந்த உயர் நெறியை தியானியுங்கள். இவை மனிதனுக்குச் சாவா வரத்தைத் தரக்கூடிய ஆற்றல் மிகுந்த "சக்தி எழுத்துக்கள்" ஆகும். 5. வள்ளுவர் தியானம் “உயிரை இயக்கும் ஒலி மந்திரம்” ஞானத்தமிழ்த் சித்தர் காகபுசுண்டர் உடலின் ஆதாரச் சக்கரங்களையும் இயக்கும் மந்திர ஒலிகள் ஏழு என தனது பாடலில் பாடியுள்ளார். "ஆவோடு ஈயும் ஊவோடு ஏயும் நின்ற நாத நடுவிலே நாட்டியே நின்றதோர் ஓவோடு ஐயும் ஒளவோடு எழுத்துமே சீவன் இயங்கும் சிவாய நமவே." காகபுசுண்டர் உபநிடதம் - பாடல் 24 விளக்கம் : நம் உடலில் ஜீவன் (உயிர்) இயங்குவதற்குக் காரணமான நாத தத்துவத்தின் நடுவே, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஔ ஆகிய ஏழு ஒலிகளும் ஜீவகாந்த அலைகளாக நின்று உடலை இயக்குகின்றன. 6. வள்ளுவரின் ஞான தியானம் ஞானத்தமிழர் அகத்திய பெருமான் வாசி யோகத்தைப் பற்றிக் கூறும்போது, இந்த உலகில் மூச்சுக் காற்றை உடலுக்குள் நிலைநிறுத்தி உயிரை வளர்க்க இந்த ஏழு நெடில் ஒலிகள் மட்டும் தான் உதவுகின்றன என்பதை விளக்குகிறார். "நெட்டெழுத்து ஏழும் நிலவரமாய் நின்றிடில் கட்டிய காயம் கழலாது இருந்திடும் அத்தி நடுவே அமர்ந்திடும் சோதியை முத்தி தரும் ஒளியாய் முடித்திடலாமே." சௌமிய சாகரம் (1200) - பாடல் 84 விளக்கம் : உடலின் ஆதாரங்களில் இந்த ஏழு நெட்டெழுத்துக்களின் ஒலிகளும் நிலைபெற்று ஒலிக்கும் போது தான் பஞ்சபூதங்களால் ஆன இந்த உடலானது (காயம்) அழியாமல் நிலைபெறும். இதுவே உயிரை வளர்க்கும் கலை. 7. உயிரையும் உடலையும் காக்கும் காயகற்ப தியானம் போகர் தனது சாகாக்கலை மற்றும் பிராணாயாம விளக்கங்களில், நெடில் உயிர் எழுத்துக்களின் அதிர்வுகள் மட்டும் தான் மூளையின் ஆற்றலையும், உடலின் மின் காந்த ஓட்டத்தையும் தூண்டுகின்றன என்று குறிப்பிடுகிறார். "ஐயும் ஓவும் ஒளவும் உயிரெழுத்தாய் மெய்யில் அமர்ந்து விளங்கியே நின்றவிடம் ஆதி ஈயும் ஊவோடு ஏயும் கூடிக் காயம் வளர்க்கும் கரணமது ஆமே." போகர் சப்த காண்டம் (ஏழாயிரம்) - பாடல் 412 விளக்கம் : இந்த ஏழு ஒலிகளும் மெய்யில் (உடலில்) குறிப்பிட்ட நரம்பு மையங்களில் அமர்ந்து ஒளிர்கின்றன. இவை வெறும் எழுத்துக்கள் அல்ல, காயகற்பம் போல உடலையும் உயிரையும் சிதையாமல் காக்கும் கருவிகள் (கரணங்கள்) ஆகும். +++++++++++++++++++++++++++++ வள்ளுவர் தியானத்தின் ஒலிகளை உச்சரிக்கும் முறை “இலக்கண உலகின் தந்தை” தொல்காப்பியர் அனைத்துலக உயிர்களின் மூல மொழி தமிழ் என்று பிரகடனப்படுத்தியுள்ளார். அதோடு அந்த ஒலிகளின் எழுத்துக்கள் தான் 'உயிரெழுத்துக்கள்' (Vowels) என்றும், அந்த ஒலிகளுக்கான இலக்கணத்தை வரையறுத்துள்ளார். மெய்யெழுத்துக்கள் (Consonants) என்பவை உடலைப் போன்றவை. மெய் எழுத்துக்களோடு உயிர்க் காற்று ஒலிகளும் இணையும் போது தான் உயிர் இயங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். அதே போன்று, உலக மொழிகள் அனைத்திற்கும், எல்லா ஒலிகளுக்கும் மூல ஒலியாக இருப்பது அகரம் (அ) ஆகும். இதனைத் தொல்காப்பியர் மிக எழுத்திலக்கண விதிகளுடன் விவரிக்கிறார். இதனை உறுதி செய்யும் பாடல். "புள்ளி இல்லா எல்லா மெய்யும் உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும்..." தொல்காப்பியம், நூல் மரபு (பாடல் எண்: 17) விளக்கம்: புள்ளியில்லாத மெய்யெழுத்துக்கள் அனைத்தும் இயல்பாகவே 'அகரம்' என்ற மூல ஒலியோடு இணைந்துதான் பிறக்கின்றன (புள்ளி இல்லாத எழுத்துக்கள் எல்லாம் அகரம்). அகரமே எல்லா ஒலிகளையும் இயக்கும் பிரபஞ்ச மூல ஒலி என்பதை ஞானத்தமிழர் வள்ளுவப் பெருந்தகையும் தனது முதல் குறளிலேயே "அகர முதல எழுத்தெல்லாம்" என்று உறுதிப்படுத்தியுள்ளார். அகர ஒலிகளின் மந்திர ஆற்றலும் அதிர்வும் “உயிர் இயக்க ஒலிகளான” ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழு எழுத்துக்களையும் தொல்காப்பியர் "நெட்டெழுத்துக்கள்" என்று பெயரிட்டு, அவற்றிற்கு இரண்டு மாத்திரை கால அளவு என்று இலக்கணம் வகுக்கிறார். இந்த நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரை ஒலி அளவில் நாம் உச்சரிக்கும் போது 7 சக்கரங்களும் தூண்டப்படும். இதனால் ஒரு மனிதன் நோய்களற்ற ஆரோக்கியமான உடலை பெற்று, அன்பில் வளரும் உயிரை உணர்ந்து ஞான நிலையை அடைய முடியும். "ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் அப் பால் ஏழும் ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப." தொல்காப்பியம், நூல் மரபு (பாடல் எண்: 4) விளக்கம்: இந்த ஏழு எழுத்துக்களும் இரண்டு மாத்திரை (இரண்டு முறை கண் இமைக்கும் அல்லது கை நொடிக்கும் நேரம்) நீண்டு ஒலிக்கும் சிறப்பைப் பெற்றவை. உயிர் இயக்க ஒலிகள் பிறக்கும் ரகசியம் (உடற்கூறியல் சிறப்பு) உயிர் இயக்க ஒலிகள் மனித உடலில் இருந்து எப்படி வெளிவருகின்றன என்பதைத் தொல்காப்பியர் 'பிறப்பியல்' பகுதியில் விளக்குகிறார். உலகிலேயே ஒலிகள் பிறக்கும் உடற்கூறியல் முறையை (Phonetics) முதன்முதலில் அறிவியல் பூர்வமாகப் பகுத்த நூல் தொல்காப்பியம் மட்டும் தான். இந்த ஏழு நெடில்களும் உடலுக்குள் இருந்து வரும் காற்று தொண்டையில் (மிடறு) தடையின்றி இசைத்து, வாயின் வெவ்வேறு இயக்கங்களால் பிறக்கின்றன: ஆ-வின் பிறப்பு "அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும்." தொல்காப்பியம், பிறப்பியல் (பாடல் எண்: 84) சிறப்பு: வாயை சும்மா திறந்தாலே (அங்காத்தல்) பிறக்கும் பிரபஞ்சத்தின் ஆகச்சிறந்த இயற்கை ஒலி 'ஆ' ஆகும். ஈ, ஏ, ஐ ஆகியவற்றின் பிறப்பு "இ ஈ எ ஏ ஐ எனும் இவ் வைந்தும் அண்பல் முதல்நா விளிம்புஉறல் உடைய." தொல்காப்பியம், பிறப்பியல் (பாடல் எண்: 85) சிறப்பு: வாயைத் திறப்பதோடு, மேல்வாய்ப் பல்லின் உட்பகுதியை நாக்கின் ஓரங்கள் தொடுவதன் மூலம் 'ஈ, ஏ, ஐ' பிறக்கின்றன. ஊ, ஓ, ஔ ஆகியவற்றின் பிறப்பு "உ ஊ ஒ ஓ ஔ எனும் இவ் வைந்தும் இதழ் குவிந்து இயலும் எல்லையான." தொல்காப்பியம், பிறப்பியல் (பாடல் எண்: 86) சிறப்பு: உதடுகள் குவியும்போது (Lip rounding) மட்டுமே 'ஊ, ஓ, ஔ' ஆகிய ஒலிகள் மிகத் தூய்மையாகப் பிறக்கின்றன. உலக ஒலிகளின் பிறப்பிடமாகத் தொல்காப்பியர் உயிரெழுத்துக்களைக் காண்கிறார். வாய் திறத்தல், நாக்கு பல்லில் பொருந்துதல், இதழ் குவிதல் ஆகிய மூன்று இயற்கை அசைவுகளுக்குள் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய பிரபஞ்ச ஒலிகளை அடக்கி, அவற்றுக்கான மாத்திரை அளவையும் (பாடல் 4), பிறப்பு விதிகளையும் (பாடல் 84-86) தொல்காப்பியர் வகுத்துள்ளார். குறில் உயிரெழுத்துக்களின் பெருமை தமிழ் இலக்கணத்திலும், சித்தர் மரபின் மெய்ஞ்ஞானத்திலும் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்து குறில் உயிரெழுத்துகளும் பிரபஞ்சத்தின் மிக உன்னதமான ஆதி மூலங்கள் (The Primordial Elements) எனக் கருதப்படுகின்றன. குறில் எழுத்துக்களிலிருந்து தான் நெடில் பிறக்கின்றன. குறில் எழுத்துக்கள் ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அல்லது ஒரு வினாடி கால அளவு எடுத்துக்கொள்ளும். இந்த ஒரு வினாடியில் உயிர்க்காற்று உடலின் மையத்தில் (Potential Energy) ஒலிக்கும். நெடில் எழுத்துக்கள் ஒலிப்பதற்கு இரண்டு மாத்திரை அல்லது இரண்டு வினாடி கால அளவு எடுத்துக்கொள்ளும். இந்த இரண்டு வினாடியில் உயிர்க்காற்று சுவாச நாடிகளின் வழியே பிரபஞ்ச வெளியில் விரிவடைகிறது (Kinetic Energy). குறில் எழுத்துக்கள் ஆதி வித்துவின் உள் ஒளிப்பயணம், நெடில் எழுத்துக்கள் ஆதி மூலத்தை நோக்கிய வெளி ஒளிப்பயணம். இதனை ஞானத்தமிழ் அகப்பேய் சித்தர் விளக்குகிறார். "அகாரம் அதுவே ஆதி எழுத்தாம் ஆகாரம் அதுவே அந்தமதாம்..." – அகப்பேய்ச் சித்தர் பாடல் – 90 (அகாரம் உடலுக்குள் ஒடுங்க, ஆகாரம் ஆன்மாவை வெளியே விரித்து இறைவனுடன் சேர்க்கிறது). விளக்கம் : உயிரின் பயணம் 'அ' என்ற ஆதியிலிருந்து தொடங்கி, 'ஆ' என்ற பேரொளி விரிந்து இறைவனோடு ஒன்றுபடுவதில் நிறைவடைகிறது. 'அ': என்பதுபடைப்பின் தொடக்கம் (ஒடுங்கிய நிலை) ஒலி. 'ஆ': என்பது பிரபஞ்சப் பெருவெளியில் கலக்கும் ஒலி (விரிவடைந்த நிலை). 'இ' : என்பது சக்தியை உடலுக்குள் ஈர்க்கும் காந்த ஒலி. 'ஈ' : என்பது காந்த சக்தியை ஒளியாக மாற்றும் ஒலி. ‘உ’ : என்பது உடலையும், உயிரையும் வாழவைக்கும் சக்தி ஒலி. ‘ஊ’ : என்பது உடலையும், உயிரையும் வளர வைக்கும் சக்தி ஒலி. ‘எ’ : என்பது எ' ஏக்கமும், கேள்வியும் நிறைந்த அறிவு ஒலி. ‘ஏ’ : என்பது உண்மையும், உறுதியும் கொண்ட ஞான ஒலி. (அ+இ=ஐ) : என்பது (அ=சிவம்/ஆண்/Energy) (இ=சக்தி/பெண்/Force) ‘ஐ’ : என்பது உடலையும், உயிரையும் இணைக்கும் ஜீவ ஒலி. 'ஒ' என்பது பிரபஞ்சப் பெருவெடிப்புக்கு (Big Bang) முந்தைய, பேராற்றலின் ஒடுங்கிய நிலை. ‘ஓ’ : என்பது ஒளியும், ஒலியும் இணைந்து உயிர்தெழும் உயர்ந்த நிலை. 'ஔ' : என்பது பிரபஞ்சத்தில் கலக்கும் முத்தி நிலை. இறைவனின் இதய ஒலியில் எழுந்த எழுத்துக்களே, தமிழின் உயிரெழுத்துக்களாகும். இதில் குறில் என்பது உடல் சார்ந்தது. நெடில் என்பது பெரு வெளியான இறைவனைச் சார்ந்தது. குறில்: 'விந்து' என்ற ஆற்றல் சுருங்கிய ஒலியின் துகள் வடிவம் (Seed particle). நெடில்: 'நாதம்' என்ற பிரபஞ்ச ஒலியின் அலை வடிவம் (Cosmic wave). குறில்: மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம் ஆகிய கீழ்நிலைச் சக்கரங்களை தட்டி எழுப்பும் ஒலி சக்தி. நெடில்: அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ராரம் ஆகிய மேல்நிலைச் சக்கரங்களில் ஆற்றலை நிலைநிறுத்தும் ஒலி சக்தி. குறில்: மனித உடலைச் சுற்றியுள்ள காந்தப்புலத்தை (Aura) உருவாக்குவது. நெடில்: மனித உடலைச் சுற்றிய காந்தப்புலத்தை விரிவடையச்செய்வது. குறில்: ஒலி அழுத்தம் (Pressure) உயிர்களோடு தொடர்பை உண்டாக்கும். நெடில்: ஒத்ததிர்வு (Resonance) பிரபஞ்ச வெளியில் இறை தொடர்பை உண்டாக்கும். குறில்: உடலின் அணுக்களை (Cells) சிதையாமல் காக்கும் காய கல்ப சக்தியின் ஆரம்ப நிலை. நெடில்: பிரபஞ்சக் காந்த ஆற்றலை உடலுக்குள் இழுத்து, நரை ந, திரை (தோல் சுருக்கம்), மூப்பைப் போக்கிச் செல்களைப் புதுப்பிக்கும் காய கல்ப சக்தியின் (அழிவற்ற நிலை) உயர்ந்த நிலை. குறில்: பாசக் கட்டுகளுக்குள் ஆன்மா (பசு) சுருங்கி வாழும் மனித நிலையின் ஒலி. நெடில்: பாசம் நீங்கி, உயிர் (பசு-ஆன்மா) எல்லையற்ற இறைவனுடன் (பதி) இரண்டறக் கலக்கும் முக்தி நிலையின் ஒலி. ++++++++++++++++++ ஞானத்தமிழர்களான சித்தர்களின் நெறியின்படி, குறில் எழுத்துக்கள் (அ, இ, உ, எ, ஒ) உடலின் புற இயக்கத்திற்கும், நெடில் எழுத்துக்கள் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) உடலின் அக இயக்கத்திற்கும் (உயிர்ச் சக்தி, நாடிகள், மூளை அலைகள்) உரியவை. இந்த ஒலிகளை உள்ளுக்குள் உச்சரிக்கும் போது ஏற்படும் அதிர்வுகள், உடலின் நாளமில்லாச் சுரப்பிகளையும் (Endocrine glands) மூளையின் ஆல்ஃபா, தீட்டா (Alpha, Theta) போன்ற நுட்பமான அலைகளையும் தூண்டி, ஆன்மீக மற்றும் உடல் ரீதியான விழிப்புணர்வைத் தருகின்றன என்பது ஞானத்தமிழ் சித்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை. வள்ளுவரின் “வானவில் தியானம்” (நிறங்களுக்கும் ஓசை உண்டு) வள்ளுவரின் வானவில் தியானம் என்பது வானவில் போல் குளிர்ச்சியாகவும், அழகாகவும், ஏழு நிறங்களாகவும் கண்களைக் கவர்ந்து மனதை மகிழ்ச்சியாக்கும். இந்த நிறங்களுக்கும் ஓசை உண்டு. ஒளியும் (Light) ஒலியும் (Sound) வெவ்வேறு வடிவங்களில் பயணிக்கும் அலைகள் (Waves) ஆகும். ஆனால், இரண்டுமே தனித்தனியான அதிர்வெண்களைக் (Frequencies) கொண்டவை. நாம் பார்க்கும் ஒவ்வொரு நிறமும் ஒரு குறிப்பிட்ட மின்காந்த அலைநீளம் (Wavelength) கொண்டவை. இதில் சிவப்பு நிறம், குறைந்த அதிர்வெண்ணையும், ஊதா (Violet) நிறம், மிக அதிவேக அதிர்வெண்ணையும் கொண்டது. நாம் கேட்கும் ஒலிகளும் அனைத்தும் காற்றில் ஏற்படும் அதிர்வுகள் ஆகும். அறிவியல் பூர்வமாக ஒளியின் அதிர்வெண்களைப் பல மடங்கு குறைத்து (ஒலி அலைகளின் வரம்பிற்குள் கொண்டுவந்து), அதை ஒரு ஸ்பீக்கரில் ஒலிக்கச் செய்தால், ஒவ்வொரு நிறத்திலிருந்தும் ஒரு தனித்துவமான ஓசை உண்டாகும். இதில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஒலிகளை இரண்டு மாத்திரை அளவில் உச்சரித்து தியானிக்கும் போது உண்டாகும் நிறம், தூண்டப்படும் சக்ரா, ஆற்றல், அதிர்வெண், அலை நீளம் ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம். 1.ஆ : சிவப்பு : மூலாதாரம் (முதுதண்டின் கீழ் பகுதி) : ஆற்றல் E = 1.68 - 1.98 (eV) : (ஆதார அடித்தளம்):அதிர்வெண் (396 Hz) : அலைநீளம் = (625 - 740 nm) : தூரத்து இடி முழக்கம் அல்லது பூகம்பத்தின் போது பூமிக்கு அடியில் ஏற்படும் ஆழமான அதிர்வு சத்தம். 2.ஈ : ஆரஞ்சு : சுவாதிட்டானம் (அடிவயிறு) : ஆற்றல் E = 1.98 - 2.10 (eV) : (படைப்பாற்றல்) அதிர்வெண் (417 Hz) : அலைநீளம் = (590 - 625 nm) : பெரிய மிருகங்கள் (சிங்கம், யானை) தூரத்தில் எழுப்பும் கரகரப்பான முழக்கம் அல்லது தவில் போன்ற தோல் வாத்தியங்களின் கனமான ஓசை 3.ஊ : மஞ்சள் : மணிபூரகம் (தொப்புள்) : ஆற்றல் E = 2.10 - 2.19 (eV) : (மின்/வெப்ப ஆற்றல்) அதிர்வெண் (528 Hz) : அலைநீளம் = (565 - 590 nm) : மனிதர்களின் இயல்பான பேசும் குரல் அல்லது கிதாரின் தடிமனான கம்பியை மீட்டும் போது வரும் தெளிவான ஓசை. 4. ஏ : பச்சை : அனாகதம் (நெஞ்சு) : ஆற்றல் E = 2.19 - 2.48 (eV) : (அன்பு/சமநிலை) அதிர்வெண் (639 Hz) : அலைநீளம் = (500 - 565 nm) : புல்லாங்குழலின் இயல்பான இசை அல்லது மர இலைகள் காற்றில் அசையும் போது வரும் சமநிலையான ஓசை. 5. ஐ : நீலம் : விசுத்தி (தொண்டை) : ஆற்றல் E = 2.48 - 2.56 (eV) : (பாடல்/பேச்சு) அதிர்வெண் (741 Hz) : அலைநீளம் = (485 - 500 nm) : தெளிவான உயர் சுருதிகொண்ட பாடல் மற்றும் இசை. காற்றில் மிக வேகமாகப் பாய்ந்து வரும் அம்பின் ஓசை அல்லது சிறிய சிட்டுக் குருவிகளின் கீச்சுக்குரல் போன்ற தெளிவான ஓசை. 6. ஓ : கருநீலம் : ஆக்ஞா (புருவமத்தி) : ஆற்றல் E = 2.56 - 2.75 (eV) : (உள்ளுணர்வு) அதிர்வெண் (852 Hz) : அலைநீளம் = (450 - 485 nm) : மிக மெல்லிய, காற்றில் தூரத்தில் கேட்கும் விசில் சத்தம் (High-pitched Whistle) போன்ற ஓசை 7. ஔ : ஊதா : சகஸ்ராரம் (உச்சந்தலை) : ஆற்றல் E = 2.75 - 3.26 (eV) : (இறை அருள்) அதிர்வெண் (963 Hz) : அலைநீளம் = (380 - 450 nm) : மனித காதுகளால் கேட்கக்கூடிய எல்லையின் உச்சத்தில் இருக்கும் மிக மிகக் கூர்மையான ஒலி (Highest Pitch / Treble) அல்லது வௌவால்களின் மீயொலி (Ultrasonic) போன்ற ஒரு 'கீச்' ஒலி அல்லது இறை சக்தியின் ஒலி. ஆற்றலை ஆக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது; ஆனால், ஒரு வகை ஆற்றலை இன்னொரு வகை ஆற்றலாக மாற்றமுடியும் என்ற ஆற்றல் மாறா கோட்பாட்டின் படி நிறங்களும் ஒலிகளாக மாறி மனிதனுக்கு தேவையாக ஆற்றலாக வடிவம் பெறுகின்றன. வள்ளுவர் தியானம் (அ) ஆற்றல் (Energy) அதிர்வு (Vibration) தியானம் (Meditation) EV MEDITATION ஒளியும், ஓசையும் இணைந்தே உயிர் இயக்கமும், உலக இயக்கமும் நடைபெறுகிறது. தினமும் அதிகாலையில் சூரியனின் முதல் ஒளி விழும் நேரத்திலும், மாலையில் சூரிய ஒளி மறையும் நேரத்திலும் நமது உயிரை, உலக அதிர்வுகளையும் ஒன்றிணைக்கும் “ஏழு இறை ஒலிகளை” உச்சரிக்கும் போது ஒருவரின் தேவைகளும், எண்ணங்களும், விருப்பங்களும் நிச்சயம் படிப்படியாக நிறைவேறும். தமிழ் மொழியின் தனிச்சிறப்பே அதன் எழுத்துக்கள் வெறும் ஒலிகள் மட்டுமல்லாமல், உடலின் ஆற்றல் மையங்களை (சக்கரங்களை) இயக்கும் வல்லமை பெற்றவை என்பது தான் தனிச்சிறப்பு. அதில் உயிரெழுத்துக்களான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழு நெடில் எழுத்துக்கள் முதன்மையானது. ஞானத்தமிழ்ச் சித்தர்கள் தங்கள் பாடல்களில் பரிபாஷையாக (மறைமுகக் குறியீடாக) இந்த உயிர் நெட்டெழுத்துக்களை "உயிர் நிலைகள்" என்றும், "நெட்டிதழ் ஓசைகள்" என்றும் குறிப்பிட்டுள்ளனர். அகத்தியர் மற்றும் திருமூலர் உள்ளிட பல ஞானத்தமிழ் சித்தர்கள் தங்கள் பாடல்களில் குறியுள்ளனர். 1.மூலாதார சக்கரத்தை இயக்கும் ஒலி 'ஆ' "ஆதியந்தம் ‘ஆ’காரமாய் நின்ற மூலத்தே சோதிதனை நாடியே சுழுமுனை வழியேறி..." அகத்தியர் வாசி யோகம் பாடல் எண்: 21 விளக்கம் : 'ஆ' என்ற எழுத்து ஒலியை மனமுருகி அடி வயிற்றிலிருந்து உச்சரிக்கும் போது, நமது மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி எனும் ஒளி சக்தியை எழும்பும். 2.சுவாதிஷ்டான சக்கரத்தை இயக்கும் ஒலி 'ஈ' ஓமப்பா சுவாதிட் டானந் தன்னில் உயிரெழுத்தாம் 'ஈ'காரமாய் நின்ற சோதி அகத்தியர் சௌமிய சாகரம். பாடல் எண்: 42 விளக்கம் : இரண்டாவது சக்கரமான சுவாதிஷ்டானத்தில் (Sacral Chakra) உயிர் எழுத்தின் அதிர்வான 'ஈ' என்ற நெடில் ஒலி பேரொளியாக (சோதியாக) நின்று இயங்குகிறது. இந்த ஒலியை மனதிற்குள் உச்சரித்து தியானிக்கும் போது சுவாதிஷ்டான சக்கரம் தூண்டப்படுகிறது. 3. மணிபூரக சக்கரத்தை இயக்கும் ஒலி 'ஊ' நாமப்பா நாபியென்ற மணிபூ ரகத்தில் நலமான 'ஊ'காரமாய் நின்ற கூத்தே அகத்தியர் சௌமிய சாகரம். பாடல் எண்: 42 விளக்கம் : மணிபூரகமாகிய 'ஊகாரத்' தலத்தில் நாம் காற்றையும் ஒலியையும் ஒடுக்கும்போது, அங்கு ஜடாரக்கினி (உடல் வெப்பம் மற்றும் செரிமான ஆற்றல்) தூண்டப்பட்டு, அது சோதியாக (Kundalini Energy) மேல்நோக்கி எழுகிறது. 4. அனாகத சக்கரத்தை இயக்கும் ஒலி 'ஏ' கூத்தப்பா அனாகதமே யென்று சொல்லுங் குணமான சக்கரத்தின் நடுவே நின்று ஏத்தப்பா உயிரெழுத்தாம் 'ஏ'கா ரந்தான் எழிலாக நின்றவிடம் இருதய மாகும். அகத்தியர் சௌமிய சாகரம். பாடல் எண்: 43 விளக்கம் : மனித உடலின் மிகக் குண நலன்களுக்கு ஆதாரமான, இதயத் தலத்தில் விளங்கும் அனாகதச் சக்கரத்தின் மையப் புள்ளியில், நாம் போற்றித் தியானிக்க வேண்டிய உயிர் எழுத்தான 'ஏ' (ஏகாரம்) என்னும் நெடில் ஒலி, மிக அழகிய அதிர்வாக நம் இருதயத் தலத்தில் (நெஞ்சுப் பகுதியில்) நின்று இயங்குகிறது. 5. விசுத்தி சக்கரத்தை இயக்கும் 'ஐ' பார்த்தப்பா இதற்குமேல் விசுத்தி தன்னில் பண்பான 'ஐ'காரமாய் நின்ற நிலையே அகத்தியர் சௌமிய சாகரம். பாடல் எண்: 43 விளக்கம் : அனாகதச் சக்கரமான இதயத் தலத்திற்குச் சற்று மேலே, தொண்டைக் குழியின் பின்புறம் முதுகெலும்பில் அமைந்திருக்கும் ஆற்றல் மையமே விசுத்தி சக்கரம் ஆகும். இந்த விசுத்தித் தலத்தில், தமிழ் உயிர் எழுத்துகளில் தனித்துவமான மற்றும் பண்பான 'ஐ' (ஐகாரம்) என்னும் நெடில் ஒலி பேராற்றலாக நின்று இயங்குகிறது. 6. ஆக்ஞா சக்கரத்தை இயக்கும் ஒலி 'ஓ' "நிலையான விசுத்திக்கு மேலாய் நின்று நேர்மையுள்ள ஆஞ்ஞையென்ற தலமு மாகும் மலையாதே அத்தலத்தின் நடுவே மைந்தா வளமாக நின்றதொரு 'ஓ'கா ரந்தான் தொலையாத சோதிமய மாகி நின்று சொரூபமதாய் நின்றவிடம் புருவ மையமே!" அகத்தியர் சௌமிய சாகரம். பாடல் எண்: 44 விளக்கம் : தொண்டைப் பகுதியான விசுத்திச் சக்கரத்திற்கு நேர் மேலே, நம் புருவ மத்தியில் (நெற்றிக்கண்ணில்) அமைந்துள்ள மிக நேர்மையான, கூர்மையான அறிவுத் தலமே ஆக்ஞா (ஆஞ்ஞை) சக்கரம் ஆகும். எதற்கும் கலங்காதே (மலையாதே). அந்த ஆக்ஞா சக்கரத்தின் மையப் புள்ளியில் தமிழ் உயிர் எழுத்துகளில் ஒன்றான 'ஓ' (ஓகாரம்) என்னும் நெடில் ஒலி பிரபஞ்ச அதிர்வாக வளம் பெற்று நின்று இயங்குகிறது. என்றும் அழியாத, தொலையாத பேரொளி வடிவமாக (சோதிமயமாக), மனிதன் தன் சுய சொரூபத்தை (இறைத் தன்மையை) உணரும் இடமே இந்த இரண்டு புருவங்களுக்கும் இடைப்பட்ட மையப் பகுதியாகும். 7. சகஸ்ரார சக்கரத்தை இயக்கும் ஒலி 'ஔ' உருவமிலா அத்தலத்தின் நடுவே மைந்தா உயர்வாக நின்றதொரு 'ஔ'கா ரந்தான் அருவமதாய் அண்டரண்டங் கடந்த சோதி ஆனந்தப் பெருவெளியாய் அமர்ந்த வாறே அகத்தியர் சௌமிய சாகரம். பாடல் எண்: 44 விளக்கம் : எந்த ஒரு குறிப்பிட்ட வடிவமும் இல்லாத (உருவமிலா) அந்த உன்னதத் தலத்தின் மையத்தில், தமிழ் உயிர் எழுத்துகளின் சிகரமான 'ஔ' (ஔகாரம்) என்னும் பேராற்றல் ஒலி எல்லாவற்றிற்கும் உயர்வாக நின்று இயங்குகிறது. அது உருவமற்ற அருவ நிலையாய், அண்ட சராசரங்களையும் கடந்து நிற்கும் பேரொளியாய், எல்லையற்ற ஆனந்தப் பெருவெளியாக (Supreme Bliss) யோகியின் தலை உச்சியில் வந்து அமர்கிறது. ஏழு ஒலிகளும் ஏழு உலகோடு இணைக்கும் வள்ளுவர் தியானம் இறை ஒலிகளாகிய ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஒலிகளை சரியாக உச்சரிக்கும் போது உடலின் ஏழு சக்கரங்கள் அதிரும், இந்த ஏழு சக்கரங்களும் பிரபஞ்சத்தின் ஏழு உறைகளோடும் ஒத்திர்வில் அதிரும். எனவே, “நீங்கள் ஆழமான மனதால் கேட்பதை பிரபஞ்சம் அழகாக ஈர்த்து கொடுக்கும்”. ஆ : மூலாதாரம் : பூலோகம் (Earth) : (Troposphere : All weather happens here ) : (Frequency : 7.83 Hz = Schumann Resonance Fundamental / Theta-Alpha border) : (Surviving & Grounding : Solid matter awareness, physical stability). ஈ : சுவாதிஷ்டானம் : புவலோகம் (Atmosphere) : (Stratosphere : Calm, stable air; ideal for commercial jets ) : (14.3 Hz = Schumann 2nd Harmonic / Low Beta) : (Creativity & Emotion Subconscious patterns, fluid pranic flow). ஊ : மணிபூரகம் : சுவலோகம் (Mental/Solar system) : (Ozone Layer : Absorbs deadly solar UV radiation, Protective Shield ) : (20.8 Hz = Schumann 3rd Harmonic / Mid Beta) : (Willpower & Protection : Dynamic energy, filtering out toxic/negative forces). ஏ : அனாகதம் : மகர்லோகம் (Higher realm) : (Mesosphere: Coldest layer, incinerates incoming meteors) : (27.3 Hz = Schumann 4th Harmonic / High Beta) : (Love & Integration Neutralizing external debris (ego/desires), absolute balance.) ஐ : விசுத்தி : ஜனலோகம் (Realm of Gods) : (Ionosphere :Energetic, charged layer; hosts the Auroras) : (33.8 Hz to 40 Hz = Schumann 5th Harmonic / Gamma Waves): (Expression & Super-Learning Highly energized, high-vibrational communication, cosmic connection). ஓ : ஆக்ஞை : தபோலோகம் (Realm of ascetics) : (Thermosphere : Absorbs X-rays; home to the Space Station) : (40 Hz to 100 Hz = High Gamma / Cosmic Ray absorption) : (Intuition & Transcendence High thermal/spiritual energy, deep insight, cosmic sight). ஔ : துரியம் / சகஸ்ராரம் : சத்யலோகம் (Pure consciousness) : (Exosphere : The final threshold merging into deep space : (Infinite Frequency = Beyond measurable spectrum / Zero-Point Energy) : Pure Consciousness / Samadhi, Dissolution of individual identity into the cosmic void. வள்ளுவர் தியான ஒலியே ஆகாயம் தமிழின் ஏழு இறைஇசை ஒலிகள் மூலம் பிரபஞ்சத்தின் ஏழு மண்டலங்களின் சக்திகளையும் ஈர்த்து மக்களின் தேவைகளை எல்லாம் தீர்த்து வைத்தவர்கள் சித்தர்கள். திருமூலர் திருமந்திரத்தில் இந்த அட்சரங்கள் எவ்வாறு பிரபஞ்ச வெளியிலும், நம் உடலின் ஆதாரங்களிலும் உலகங்களாக விரிந்து நிற்கின்றன என்பதைப் பாடியுள்ளார்: ஆகாசம் ஏழும் அண்டங்கள் ஏழினில் ஆகாசம் ஏழும் கலந்த அண்டத்து உதித்திட்டு ஆகாசம் ஏழும் அட்சரமாய் நின்ற ஆகாசம் ஏழும் அமர்ந்திருந்தானே." திருமந்திரம் : பாடல்: 902 விளக்கம்: ஏழு அண்டங்களிலும் உள்ள ஆகாசமாக இறைவன் விளங்குகிறான். அந்த ஏழு அண்டங்களின் வெளிகளும் ஒன்றோடொன்று கலந்து விரிந்து பரந்து கிடக்கும் அந்தப் பேரண்டப் பெருவெளியில், ஆதியும் அந்தமும் இல்லாதவனாக இறைவன் உதித்து நிற்கிறான். அண்டங்கள் எங்கும் பரவியிருக்கும் அந்த ஆகாச வடிவமே, ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ஆகிய ஏழு அழியாத அட்சரங்களாக (எழுத்துக்களாக/ஒலிகளாக) ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஏழு ஆகாசங்களையும் தன்னுள் அடக்கி, அவற்றிற்கு ஆதாரமாக விளங்கும் இறைவன், அந்த ஏழு வெளிகளிலும் அமைதியாக, நிலையாக அமர்ந்து ஆட்சி செய்கிறான். +++++++++++++ வள்ளுவர் தியானத்தின் ஒலி அதிர்வுத் தொடர்புகள் ஆவோடு ஈவூஏ ஐஓ ஒளவென்னும் மேவொன்று நெடில்ஏழும் விந்துடன் நாதமாய் பூவொன்று சக்கரத் துள்ளே புகப்பெய்து காவொன்று சக்கரம் கண்டுகொ ளீரே. திருமந்திரம் : பாடல் 1308 விளக்கம் : ஆவோடு, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்னும் நெடில் எழுத்துக்கள் ஏழும் விந்து (ஆற்றல்/சிவம்), நாதம் (அதிர்வு/சக்தி) ஆகியவற்றுடன் இணைந்துள்ளது. அவைகள் மலரைப் போன்ற வடிவமுடைய ஏழுச் சக்கரத்தின் இதழ்களுக்குள்ளே இந்த அட்சரங்கள் (எழுத்துக்கள்) முறைப்படி அமைத்துள்ளது. இந்த உயிரைக் காக்கின்ற, தற்காப்பு அரணாக விளங்கும் சக்கரத்தை அறிந்து கொண்டு, தியானித்து உணர வேண்டும். அதாவது இறை ஒலி எழுத்துக்கள் ஏழும் தான் உயிரையும் உடலையும் அதிர்வுகளால் இயக்குகிறது. உயிர்களை உருவாக்கும் எழுத்து “உயிரெழுத்து” வள்ளுவர் தியானம் "அ" முதல் "ஔ" வரையிலான உயிர் எழுத்துக்களுக்கு "உயிர்" என்று பெயர் வரக் காரணமே, அவை வான்மண்டலத்தில் உள்ள பிராண சக்திகளையும் (Oxygen/Cosmic energy), விண்வெளி அடுக்குகளையும் உயிர்ப்புடன் தன் ஒலிகளில் வைத்திருப்பதால் தான் ஞானத்தமிழில் அதற்கு உயிரெழுத்துகள் என்று பெயர். சித்தர்கள் காற்றில் உள்ள ஆக்சிஜனை மட்டும் சுவாசிக்கவில்லை. வளிமண்டலத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் பரவியுள்ள நுட்பமான பிரபஞ்சக் கதிர்வீச்சுகளையும், காந்த அலைகளையும் (Cosmic Rays and Magnetic Waves) தங்களின் மூச்சுக் காற்றுடன் உடலின் உள்ளே இழுத்து உடலிலும் உயிரிலும் சேர்த்திடுவார்கள். இதனால் உடலின் நரம்பு, தசை, இரத்த ஓட்டம், எலும்பு உறுதியாதல், உடல் உறுப்புகளுக்கு தேவையான உயிர் இயக்க சக்திகள் அனைத்தும் கிடைத்துவிடும். இதற்கு ஞானத்தமிழர்கள் 'வாசி யோகம்' (Cosmic Breath) என்று பெயரிட்டனர். வாசி யோக தியானத்தின் ஆதார தியானம் வள்ளுவர் தியானம் அல்லது ஆற்றல் அதிர்வு தியானம் ஆகும். வள்ளுவர் தியனத்தில் முதலில் உடலின் நாடிகளை சுத்தப்படுத்த வேண்டும். இந்த பயிற்சி முறையை நாடி சுத்தி என்று அழைக்கிறோம். அதோடு உடலையும் மனதையும் அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். வள்ளுவர் தியானப் பயிற்சிக்குத் தயாராகுதல் நேரம்: அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையும், மாலை வேளை 5.00 மணி முதல் 6.30 மணி வரையும் தியானம் செய்ய ஏற்ற நேரமாகும். அதிகாலையில் முதலில் சூரிய ஒளியும், மாலையில் விழும் சூரிய ஒளியும் சக்தி நிறைந்தது. முக்கியமாக தியானம் செய்வதற்கு முன்பாக வயிறு காலியாக இருக்க வேண்டும். அதாவது, உணவு உட்கொண்டு குறைந்தது 3 முதல் 4 மணி நேரத்திற்கு பிறகு தான் தியானம் செய்ய தொடங்கவேண்டும். இடம்: நன்கு காற்றோட்டமுள்ள, அமைதியான ஒரு இடத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள். தினமும் அதே இடத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமர்ந்து தொடர்ச்சியாக தியானம் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வெண்டும். அமர்வு நிலை: தரையில் ஒரு பாய் அல்லது போர்வை விரித்து சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்துகொள்ளவும் (முதுகு வலி உள்ளவர்கள், வயதானவர்கள் சுவரில் சாய்ந்துகொள்ளலாம்). தியானத்தில் அமரும் போது, முதுகுத்தண்டு மற்றும் கழுத்து நேராக இருக்க வேண்டும். கண்கள் மூடியிருக்கட்டும், தரையில் அமர முடியாதவர்கள் நாற்காலியிலும் அமரலாம். யாருக்கு எது எளிமையாக இருக்கிறதோ அதை செய்யலாம். (இந்த தியானத்தை பழகிய பின் பேருந்து, ரயில் மற்றும் விமான பயணத்தின் போதும், அலுவலகத்தில் வேலை செய்யும் போதும் செய்யலாம். வள்ளுவர் தியானம் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிட மன தியானம் செய்ய வேண்டும். அன்பே இறைவன் !! அன்பே ஒளி !! ஒளியால் ஆன இறைவா ! (நீங்கள் விரும்பும் கடவுளின் பெயர்களை சொல்லலாம் ) உலக மக்கள் அனைவரும் அன்பால் இணையவேண்டும் ! எனக்கும், என் குடும்பத்தார்க்கும், என் உறவுகளுக்கும், என் முன்னோர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் செல்வ செழிப்பும் ! ஆரோக்கியமும் !அன்பான உறவுகளும் அனைத்தும் கிடைத்து, மகிழ்ச்சியாக வாழ இறைவா ஆசிர்வதியுங்கள் !!! இறைவா ! என் தேவைகளையும், உலக மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி !! இறைவா ! என் பாவங்களையும், உலக மக்களின் பாவங்களை மன்னித்ததற்கு நன்றி நன்றி நன்றி ! தியானத்திற்கு முன் ஏன் உலக மக்களுக்காக வேண்டிக்கொள்ள வேண்டும் ? இறைவனிடம் உன் தாகத்திற்கு ஒரு டம்ளர் தண்ணீர் கேட்டால், இறைவன் உன் பாவ, புண்ணியங்களைப் பார்த்து தான் தண்ணீர் கொடுப்பார். ஆனால் உலக மக்களுக்கு தண்ணீர் கேட்டால், அவர் மக்களின் தாகத்தை தீர்க்க மழையை கொடுப்பார். அந்த மழை நீரில் உனக்கு ஒரு டம்ளர் நீர் கிடைக்காதா ? நிச்சயம் கிடைக்கும். வேண்டுதலில் “தேவைகளை பூர்த்தி செய்தமைக்கு நன்றி” என சொல்ல வேண்டும். ஏனென்றால், நன்றி உணர்வு என்பது “ஒரு மனதின் மகா காந்த சக்தி”. “நீங்கள் நினைத்ததை ஈர்க்கும் சக்தி நிச்சயம் நன்றி உணர்வுக்கு உண்டு”. உங்களுக்கு உதவி செய்தவர்களுக்கும், உதவி செய்யாதவர்களுக்கும் நன்றி சொல்லுங்கள். இந்த எண்ணமே உங்களின் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு வழிகாட்டும். உங்களுக்கு உதவி செய்தவர்கள், உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறார்கள். உங்களுக்கு உதவி செய்யாதவர்கள், உங்களுக்கு அனுபவத்தைக் கொடுக்கிறார்கள். மகிழ்ச்சி வாழ்க்கையின் அர்த்தத்தைக் கொடுக்கிறது. அனுபவம் வாழ்க்கையில் அறிவைக் கொடுக்கிறது. அர்த்தமுள்ள அறிவே ஞானமாகிறது. ஞானத்தின் வழியே இறைவனை அடைகிறோம். எனவே, அனைத்திலும் நன்மையை காணும் அறிவே மெய்யறிவு (ஆன்மீகம்). அனைத்திலும் நன்மையை காண்பது அன்பால் மட்டுமே முடியும். நீங்கள் எப்போது உண்மையான அன்பை உணரத் தொடங்குகிறீர்களோ, அப்போதே நன்றி உணர்வு வளர ஆரம்பித்துவிடும். நாம் ஏன் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனில், நமக்கு கிடைக்க வேண்டியது, கிடைக்காமல் இருப்பதற்கும், நமக்கு வரும் நோய்களுக்கும், தேவையான வருமானம் கிடைக்காமல் இருப்பதற்கும், உறவுகள் மன வேதனையை தருவதற்கும் ஒரே காரணம் நாம் முந்தைய பிறவிகளில் செய்த பாவங்கள் மட்டும் தான். நம் பாவங்களை தீர்க்க ஒரே வழி மன்னிப்பது கேட்பதும், மன்னிப்பு கொடுப்பதும் மட்டும் தான். உங்களால் யாரை மன்னிக்க முடியவில்லையோ, அவர்களின் எதிர்மறை எண்ணங்களிலிருந்து உங்களால் ஒரு போதும் தப்பிக்கவே முடியாது. அது உங்களின் காரணம் தெரியாத பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். அதே போன்று, உங்களால் ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பை நீங்களே சரி செய்வது தான் உலகத்தில் உண்மையான ஒரே பரிகாரம். நாம் யாருக்கு என்ன பாவம் எப்போது செய்தோம் என்று தெரியாத போதும் அல்லது எந்த பாவத்தை எப்படி சரி செய்வது என்று தெரியாத போதும், அதை சரி செய்ய முதலில் செய்ய வேண்டியது தான, தர்மம் செய்வது தான். யார் ஒருவர் உண்மையான அன்பை உணர்கிறார்களோ அவர்களால் மட்டுமே மன்னிக்கமுடியும். எனவே அன்பை உணருங்கள், நீங்கள் உணர்ந்த அன்பை மக்களுக்கு உணர்த்துங்கள். அன்பை உணரும் நேரமெல்லாம் அழகான நேரமாகும். “அன்பான எண்ணத்தில் ஆண்டவன் வாழ்கிறான்”. எண்ணம் என்பது விதை ! சொல் என்பது விளைச்சல் !! செயல் என்பது அறுவடை !!! உலக மக்களின் நன்மையை எண்ணி நீங்கள் வேண்டுவது “விதை நெல்”. அதை தியானத்தின் முதலில் வார்த்தைகளால் வைத்தால் அது “விளைச்சல்”. அதன் பின் உனக்கான தேவைக்காக உழைத்தால் அது “செயல்”. அந்த செயல் நிச்சயம் வெற்றியை உறுதியாக தந்தே தீரும். “நீ எதை விதைக்கிறாயோ, அதை அறுவடை செய்வாய்” என்பது மட்டும் தான் இறைவன் மனிதர்களுக்கு விதித்த ஒரே சட்டமாகும். நீங்கள் ஒரு நாளைக்கு ஒருவருக்காவது எதையும் எதிர்பார்க்காமல், ஏதோ ஒரு வகையில் உதவி செய்வதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் ஆரோக்கியத்தோடும், செல்வ செழிப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ்வீர்கள். இப்படி செய்தும் ஒருவேளை நோயோ, தோல்வியோ, வறுமையோ வந்தால் அது உங்களுக்கு வர இருந்த 100 மடங்கில் ஒரு பங்கு தான் வந்திருக்கும். ஆனால் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் மீண்டு வந்துவிடலாம். இப்போது உங்கள் உள்ளத்தையும் உடலையும் வள்ளுவர் தியானத்தில் இணையுங்கள். வள்ளுவர் தியானம் தொடங்கும் நிலை வள்ளுவர் தொடங்கும் நிலையில் உங்களுக்கு எது தேவையோ ? அதை தீவிரமாக நினைத்து அது எங்கு இருக்கிறது ? அதை எப்படி பெறுவது ? அதற்கு என்ன வேண்டும் ? என்ற கேள்விகளோடு மூக்கின் நுனியையும், சுவாசக்காற்றையும் கூர்ந்து ஒரு நிமிடம் அல்லது ஏழு நிமிடங்கள் கவனிக்க வேண்டும். அதன் பின் கண்களை மென்மையாக மூடி சுவாசம் உள்ளே செல்வதையும், வெளியே வருவதையும் ஆழமாக ஒரு நிமிடம் கவனிக்கவும். இந்த சுவாசம் என்பது உடலின் வெளியே இருக்கும் போது காற்று, அது மூக்கின் வழியே உள்ளே வரும் போது அது தான் உயிர். உயிர் என்பது இறைவனின் ஒளியும் ஒலியும் கலந்த நிலை. சுவாசம் என்பது இறைவனின் பயணம். இறைவனின் பயணத்தை உன்னுள் காண்பதே தியானம். உங்களின் உள் சுவாசம் என்பது உங்களின் கேள்விகளாகும். வெளிசுவாசம் என்பது அதற்கான பதில்களாகும். உள் சுவாசத்திற்கும், வெளி சுவாசத்திற்கும் நடுவில் உணரமுடியாத ஒரு நுட்பமான, அமையான வெற்றிடம் உருவாகும். அந்த வெற்றிடமே இறைவன். நீங்கள் எந்த அளவிற்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு இறைத்தன்மையை உணரமுடியும். எந்த அளவிற்கு அன்பைக் கொடுக்கிறீர்களோ, அந்த அளவிற்கே உங்களைச் சுற்றி காந்தப் புலம் (ஆரா) உருவாகும். உங்களின் “ஆரா” வில் உங்களின் முந்தைய அனைத்து பிறவிகளின் பாவ, புண்ணிய பதிவுகள் உறைந்திருக்கும். உங்களின் சுவாசம் உங்களின் உடல் “ஆராவைக் கடந்து மூக்கின் வழியே செல்கிறது”. அப்போது உங்களின் பாவ, புண்ணியங்களின் காந்த பதிவுகளை சுவாசம் ஈர்த்து உடலுக்குள் செல்கிறது. உள்ளே சென்ற சுவாசக்காற்று நீங்கள் தீவிரமாக நினைத்த “உங்களுக்கு எது தேவையோ ?” அந்த எண்ண அதிர்வுகளோடு கலக்கிறது. இதன் பிறகு உங்களின் தகுதியும், உங்களுக்கு தீர்மானிக்கப்பட்ட வழிகளையும், உங்களின் தீவிர முயற்சிகளுக்கும் ஏற்ப, உங்களின் தேவைகளுக்கான தீர்வும், கேள்விகளுக்கான பதிலும் சுவாசத்தில் அதிர்வுகளாக வெளிவரும். உங்களின் கவனிக்கும் ஆற்றலைப் பொருத்து, நிச்சயமாக அதிர்வுகளாக வெளிவரும் பதிலை உணர முடியும். இதனால், நீங்கள் நினைத்ததை உங்களால் அடையமுடியும் !!! இது சத்தியம் ! வள்ளுவரின் நாடி சுத்தி முறை செய்முறை 1 : இடது கையை சின் முத்திரையிலும் (அறிவு முத்திரை) ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரல் நுனிகள் தொட்டிருக்க வேண்டும், வலது கையை நாசிகா முத்திரையிலும் (மூக்கு முத்திரை) வைக்கவும். அதாவது, வலது கைவிரல்களில் உள்ள ஆள்காட்டி விரலையும் (Index finger) மற்றும் நடுவிரலையும் (Middle finger) அப்படியே உள்ளங்கையை நோக்கி மடக்கி, உள்ளங்கையின் அடிப்பகுதியில் தொடுமாறு வைக்க வேண்டும். இப்போது உங்கள் வலது கையின் பெருவிரல் (Thumb), மோதிர விரல் (Ring finger), மற்றும் சுண்டு விரல் (Little finger) ஆகிய மூன்று விரல்களும் நேராக மேல்நோக்கி நீட்டியிருக்க வேண்டும். செய்முறை 2 : 1.இடது நாடி வழியாக கவனித்து மூச்சை இழுத்தல்: முதல் நிலை (விகிதாச்சாரம் 1:1) வலது கை பெருவிரலால் வலது மூக்குத்துவாரத்தை மென்மையாக மூடிக் கொள்ளவும். இப்போது, இடது மூக்குத்துவாரம் வழியாக கவனித்து மெதுவாகவும் காற்றை 4 வினாடிகள் உள்ளே இழுக்கவும் (பூரகம்). 2.வலது நாடி வழியாக கவனித்து மூச்சை விடுதல்:இரண்டாம் நிலை இப்போது, மோதிர விரலால் இடது மூக்குத்துவாரத்தை மூடிக்கொண்டு, வலது பக்க பெருவிரலை எடுத்து, வலது மூக்குத்துவாரம் வழியாக கவனித்து காற்றை 4 வினாடிகள் மிக மெதுவாகவும் முழுமையாகவும் வெளியே விடவும் (ரேசகம்). 3.வலது நாடி வழியாக கவனித்து மூச்சை இழுத்தல்:மூன்றாம் நிலை (விகிதாச்சாரம் 1:1) கை விரல்களை மாற்றாமல், கைதிடமாக அப்படியே வைத்துக்கொண்டு, இப்போது வலது மூக்குத்துவாரம் வழியாகவே கவனித்து ஆழமாக மூச்சுக்காற்றை 4 வினாடிகள் உள்ளே இழுக்கவும். 4.இடது நாடி வழியாக கவனித்து மூச்சை விடுதல்:நிறைவு நிலை. மீண்டும் வலது மூக்குத்துவாரத்தை பெருவிரலால் மூடிக் கொண்டு, இடது மூக்குத்துவாரம் வழியாக கவனித்து காற்றை 4 வினாடிகள் மெதுவாக வெளியே விடவும். இடது நாசியில் இழுத்து வலது நாசியில் விடுவது, பின் வலது நாசியில் இழுத்து இடது நாசியில் விடுவது — இதுவே ஒரு சுற்று ஆகும். ஆரம்பத்தில் இதுபோன்று 7 அல்லது 14 என ஏழின் அடிப்படையாகக் கொண்டு நேரம் கிடைப்பதற்கு தகுந்து தினமும் செய்யலாம். நீங்கள் ஆழமாக கவனிக்கும் போது ஒவ்வொரு சுவாசமும் உங்களின் வெற்றிப்பாதையாகும். வள்ளுவர் தியானத்தில் மந்திர ஒலிகளை ஆழ் மனதால் உச்சரிக்க வேண்டும் இந்த நிலையில் உங்களின் முழு கவனத்தையும் ஏழு மந்திர ஒலிகளின் மீது செலுத்துங்கள். இந்த ஒலிகள் உங்களின் ஏழு சக்ராக்களை தூண்டி சீரான அதிர்வலைகளை ஏற்படுத்தும். இந்த அதிர்வலைகள் உடல் முழுவதும் பரவி உங்களுக்குள் ஒரு புதிய காந்த ஆற்றலை உருவாக்கும். இந்த காந்த ஆற்றல் நீங்கள் ஆழமான நினைப்பதை ஈர்த்து உங்களுக்கு கொடுக்கும். சுவாசத்தை ஆழமாக உள் இழுத்து, மூச்சை வெளியிடும் போது “ஆ” என்ற மந்திர ஒலியை உரக்க உச்சரிக்க வேண்டும் (அல்லது மனதிற்குள்ளும் உச்சரிக்கலாம்). அதே போன்று ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய மந்திர ஒலிகளையும் அடுத்து அடுத்து இதே முறையில் உச்சரிக்க வேண்டும். இந்த சக்தி (Energy) வாய்ந்த மந்திர ஒலிகளை உச்சரிக்கும் போது ஆழமாக கவனித்தால் தொண்டையிலிருந்து அதிர்வுகள் (Vibrations) மூளை வரை செல்வதை உணரலாம். இந்த அதிர்வுகள் மூச்சை சீராக்குகிறது, மனதை அமைதியாக்குகிறது. மூளையிலிருந்து அதிர்வுகள், அதிர்வலைகளாக (Vibrational Waves) உடல் முழுவதும் பரவுகிறது. இந்த அதிர்வலைகள் நரம்பு மண்டங்களைத் தூண்டி மின் காந்த அலைகளாக (Electromagnetic Waves) மாறுகிறது. இந்த மின் காந்த அலைகள் அதிர்வெண்களாக (Frequencies) மாறி நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தூண்டுகிறது. இந்த ஏழு சக்கரங்களும் ஒத்ததிர்வுகள் (Resonance) மூலம் பிரபஞ்ச சக்தியை ஈர்த்து நமக்குக் கொடுக்கிறது. ஒருவர் பிரபஞ்ச சக்தி எந்த அளவிற்கு ஈர்க்க முடிகிறதோ அந்த அளவிற்கு மட்டுமே வாழ்க்கையை சிறப்பாக வாழ முடியும். வள்ளுவர் தியானத்தில் செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் (Do's and Don'ts Do’s) செய்யவேண்டியது : மனதை அன்பு மயக மூச்சை இழுக்கும்போதும் விடும்போதும் எவ்வித அவசரமும், பலவந்தமும் (Forced breathing) இருக்கக் கூடாது. சத்தமில்லாமல், மென்மையாகச் செய்ய வேண்டும். பதற்றத்துடனோ அல்லது அவசர அவசரமாகவோ இல்லாமல் இயல்பாக செய்யவேண்டும். கவனக் குவிப்பு (அ) சுவாச குரு : பயிற்சி செய்யும் போது முழுக் கவனமும் சுவாசக் காற்றின் மீதும், புருவ மத்தியிலும் (ஆக்ஞா சக்கரம்) அல்லது மூக்கின் நுனியிலும் இருக்க வேண்டும். (ஒருவரின் முந்தைய பிறவிகளின் கர்ம வினைகள் அனைத்தும் அவரின் உடலைச் சுற்றி இருக்கும். சுவாசிக்கும் போது உள்ளிழுக்கும் காற்று அந்த கர்ம வினைகளுக்கு தகுந்தாற் போல் செயல்படும். ஒருவரின் தேவைகள் அல்லது கேள்விகள் அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு தியானத்தில் அமர்ந்து சுவாசத்தை கவனித்தால் போதும், அந்த கேள்விகளுக்கான சரியான விடை உறுதியாக கிடைக்கும். இந்த முறையை வள்ளுவர் தியானத்தில் “சுவாச குரு” என்கிறோம்). கும்பகம் (மூச்சை அடக்குதல்): ஆரம்பக் கட்டத்தில் மூச்சை உள்ளேயோ வெளியேயோ அடக்கக் கூடாது (No breath retention). வெறும் "பூரகம்" (மூச்சை இழுத்தல்), "ரேசகம்" (மூச்சை விடுதல்) மட்டுமே செய்ய வேண்டும். மூச்சை அடக்கும் கும்பகப் பயிற்சியை ஒரு குருவின் முன்னிலையில் மட்டுமே பழக வேண்டும். +++++++++++++++++++++++++++ கால அளவு: இதை ஒரு நாளைக்கு 2 முறைகள் (காலை சூரிய உதயம் மற்றும் மாலை சூரியன் மறையும் நேரம்) தலா 5 முதல் 7 நிமிடங்கள் வரை தொடர்ந்து செய்து வரலாம். மூச்சை உள்ளே (கும்பகம்) நிறுத்தக் கூடாது. இது போன்று மூச்சை நாடி சுத்தி செய்யும் போது சுவாசப்பாதையை தூய்மையாகி சுவாசம் உள்ளே செல்வதையும் வெளியே வருவதையும் நன்றாக உணரமுடியும். இதை உணர்ந்துவிட்டால் நீங்கள் ஒருபோதும் வள்ளுவர் தியானத்தை கைவிட மாட்டீர்கள். நாளடைவில் வள்ளுவர் தியானம் உங்களின் இரண்டாவது சுவாசமாகிவிடும். பிரபஞ்சக் கதிர்வீச்சுகளையும், காந்த அலைகளையும் (Cosmic Rays and Magnetic Waves) வள்ளுவர் தியானத்தின் சிறப்பம்சம் : மூச்சை இழுக்கும்போது "அண்டத்தில் உள்ள தூய்மையான காற்று, பிரபஞ்சக் கதிர்வீச்சு, காந்த அலைகள் மற்றும் இறை ஆற்றல் உடலுக்குள் சென்று 72,000 நாடிகளையும் நிரப்புகிறது" என்றும், மூச்சை விடும்போது "நாடிகளில் உள்ள அனைத்துக் கழிவுகளும், தடைகளும், தேக்கங்களும் உடலை விட்டு வெளியேறுகிறது" என்றும் மனதால் உறுதியாக (Visualization) நம்ப வேண்டும் (உண்மையும் அது தான்). இந்த மனக் குவியலே நாடிகளை மிக விரைவாகச் சுத்தப்படுத்தும். +++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++ தத்துவத்தின்படியும், ஓகக் யோகக் கலை மரபின்படியும் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று முதன்மை நாடிகளும் நம் உடலின் இயக்கம், மனதின் போக்கு, அறிவுத் திறன், உணர்வு மற்றும் உணர்ச்சிகளை சரியாக இயக்கி முழுமையாக கட்டுப்படுத்துகின்றன. நமது மூளையின் இடது மற்றும் வலது பாகங்களின் செயல்பாடுகளை (Brain Hemispheres) இந்த நாடிகள் தான் இயக்குகின்றன. 1. இடகலை (சந்திர நாடி / பெண் தன்மை) இது இடது மூக்குத்துவாரத்தின் வழி இயங்கி, மூளையின் வலது பக்க அரைக்கோளத்தை (Right Brain) இயக்குகிறது. இது குளிர்ச்சி மற்றும் அமைதிக்கான ஆற்றல் வடிவமாகும். மனநிலை & உணர்ச்சிகள் (Emotions): மனதை அமைதிப்படுத்துவது இதன் வேலை. கருணை, அன்பு, ஈவு, இரக்கம், பொறுமை, மற்றும் சகிப்புத்தன்மை போன்ற மென்மையான உணர்வுகளை இது உருவாக்குகிறது. அறிவு & சிந்தனை (Cognition): இது படைப்பாற்றல் (Creativity) மற்றும் கற்பனைத் திறனைக் கட்டுப்படுத்துகிறது. கலை, இசை, கவிதை, மற்றும் ஆன்மீக உள்ளுணர்வு (Intuition) ஆகியவை இடகலை மேலோங்கியிருக்கும் போது சிறந்து விளங்கும். உடல் இயக்கம்: உடலைக் குளிர்ச்சியாக வைப்பது, திசுக்களைப் புதுப்பிப்பது, தூக்கம் மற்றும் ஓய்வைத் தருவது. சமநிலை தவறினால் உடலிலும் மனதிலும் மாற்றம் வரும். இந்த மாற்றம் நோயாகவோ அல்லது மன பாதிப்பையோ அல்லது சரியாக முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் நிலைக்கு ஆளாகும். அ. இடகலை சுவாசம் அளவுக்கு அதிகமாக இயங்கினால் (Excessive Ida Energy) இடகலை அதிகமாக இயங்கும்போது உடலில் குளிர்ச்சியும், மனதில் மந்தத்தன்மையும் அளவுக்கு அதிகமாகிவிடும். மூளையின் வலது பகுதி மற்றும் உணர்ச்சிப் பக்கங்கள் கட்டுப்பாடின்றி இயங்கும். 1. நாள்பட்ட மனச்சோர்வு (Clinical Depression) மனம் எப்போதும் கடந்த கால கவலைகளிலேயே மூழ்கியிருக்கும். சுறுசுறுப்பு முற்றிலும் குறைந்து, படுக்கையை விட்டு எழத் தோன்றாது. "என்னால் எதையும் செய்ய முடியாது" என்ற எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக அடிக்கடி தோன்றும். 2. அதிகப்படியான தூக்கமும் சோம்பலும் (Hypersomnia & Lethargy) இரவு முழுவதும் தூங்கினாலும் பகலிலும் தூக்கம் சொக்கிக்கொண்டே இருக்கும். உடலில் ஆற்றல் (Energy) இல்லாதது போலவும், எப்போதும் உடல் கனமாக இருப்பது போலவும் ஒரு மந்தநிலை நீடிக்கும். உடல் அதீத எடையுடன் இருக்கும். உணவைக் கட்டுப்படுத்தினாலும் உடல் பருமனைக் கட்டுப்படுத்த முடியாது. 3. அளவுக்கு அதிகமான உணர்ச்சிவசப்படுதல் (Emotional Hyper-sensitivity) சின்னச் சின்ன விஷயங்களுக்கும் கண்கள் கலங்குவது, மற்றவர்கள் சாதாரணமாகச் சொன்ன வார்த்தைகளை மனதிற்குள் போட்டு உழற்றிக் கொள்வது, மற்றும் சுய இரக்கம் (Self-pity) அதிகமாகும். மனம் இயல்பான நிலையிலோ அல்லது நிகழ் காலத்திலோ இருக்காது. எப்போதும் எதையோ யோசித்துக்கொண்டே இருக்கும். எதிர்காலத்தை நினைத்து பய உணர்ச்சி ஏற்படும். சரியான முடிவெடுக்கமுடியாமல் திணரும் நிலை ஏற்படும். 4. கப நோய்கள் மற்றும் சளித் தொந்தரவுகள் (Chronic Respiratory Issues) உடலில் குளிர்ச்சித் தன்மை அதிகரிப்பதால் சைனஸ், ஆஸ்துமா, நாள்பட்ட சளி, மூக்கடைப்பு, மற்றும் அடிக்கடி காய்ச்சல், தலைவலி போன்ற நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். 5. செரிமானக் குறைபாடு (Low Metabolism / Mandhagni) உடலின் வெப்பம் (பிங்கலை ஆற்றல்) குறைந்துவிடுவதால், சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானம் ஆகாது. இதனால் பசியின்மை, வயிறு உப்பசம், மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றத்தால் உடல் எடை அதிகரித்தல் (Weight gain) போன்ற பாதிப்புகள் வரும். முக்கியமாக மலப் பிரச்சனைகள் இருக்கும். ஒருவரை மரணத்திற்கு அழைத்துச்செல்லும் இரண்டு சக்கரங்கள் என்பது ஒன்று சளி மற்றொன்று மலம். இது இரண்டு பிரச்சனைகளையும் வள்ளுவர் தியானம் சரிசெய்யும். அதோடு இந்த மலச்சிக்கல் என்பது அனைத்து நோய்களின் தாய் என சித்த மருத்துவம் எச்சரிக்கிறது. ஆ. இடகலை சுவாசம் அளவுக்கு குறைவாக இயங்கினால் (Deficient Ida Energy) இடகலை குறையும்போது உடலில் குளிர்ச்சியும் அமைதியும் மறைந்துவிடும். அதாவது, பிங்கலையின் வெப்பமும் வேகமும் ஒட்டுமொத்த உடலையும் மனதையும் ஆக்கிரமித்துக் கொள்ளும். 1. தூக்கமின்மை (Insomnia) உடலையும் மூளையையும் குளிர்வித்து ஓய்வு நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றல் (இடகலை) குறைவதால், இரவு எவ்வளவு முயன்றாலும் தூக்கம் வராது. படுக்கையில் படுத்திருந்தாலும் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். இரவு நேர வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் தூங்கும் நேரம் மாறுவதால் இந்த பிரச்சனைக்கு ஆளாவார்கள். தினமும் சரியான நேரத்திற்கு தூங்காதவர்கள் மனதளவில் சோர்வுடன் இருப்பார்கள். தூக்கம் இல்லையென்றால் மனமும் உடலும் கட்டாயம் பாதிக்கப்படும். இதன் பாதிப்பு வெவ்வேறு வகையில் வெளிப்படும். 2. கட்டுக்கடங்காத கோபமும் ஆக்ரோஷமும் (Anger & Hyper-aggression) மனதில் அமைதித்தன்மை குறைவதால் சகிப்புத்தன்மை முற்றிலும் இல்லாமல் போகும். மிகச் சிறிய விஷயங்களுக்கும் எரிச்சலடைவது, கத்துவது, மற்றும் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது போன்ற பித்த குணங்கள் மேலோங்கும். 3. நாள்பட்ட பதற்றமும் மன அழுத்தமும் (Chronic Anxiety & Stress) மனம் எப்போதுமே ஒருவித அச்சத்துடனும், பதற்றத்துடனும் (High Alert) இருக்கும். இதயம் வேகமாகத் துடிப்பது போன்ற உணர்வும், எதிர்காலத்தைப் பற்றிய தேவையற்ற பயமும் மனதை வாட்டும். 4. உடல் வெப்பம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் (Body Heat & Hypertension) உடலின் குளிர்ச்சி நிலை (Cooling mechanism) செயலிழப்பதால், உடல் சூடு அதிகரிக்கும். கண் எரிச்சல், உள்ளங்கால்-உள்ளங்கை எரிச்சல், வாய்வுப் பிடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் (Blood Pressure) சீரற்று உயரும் நிலை ஏற்படும். 10. வறட்சி மற்றும் அழற்சி நோய்கள் (Dryness & Inflammatory Diseases) உடலின் திரவத் தன்மையும் ஈரப்பதமும் குறைந்து, தோல் வறட்சி (Dry skin), நா வறட்சி, மலச்சிக்கல் மற்றும் குடல் புண் (Ulcer) போன்ற வெப்பம் சார்ந்த அழற்சி நோய்கள் உடலைத் தாக்கும். +++++++++++++++++++++++++++++++ 2. பிங்கலை (சூரிய நாடி / ஆண் தன்மை) இது வலது மூக்குத்துவாரத்தின் வழி இயங்கி, மூளையின் இடது பக்க அரைக்கோளத்தை (Left Brain) இயக்குகிறது. இது வெப்பம் மற்றும் செயல்பாட்டிற்கான ஆற்றல் வடிவமாகும். மனநிலை & உணர்ச்சிகள் (Emotions): வீரம், தைரியம், உற்சாகம், மற்றும் தன்னம்பிக்கை போன்ற உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. அறிவு & சிந்தனை (Cognition): இது சரியாக ஆராய்ந்து மட்டும் முடிவெடுப்பது (Logical thinking), கணித அறிவு, பகுப்பாய்வுத் திறன் (Analytical skills) மற்றும் திட்டமிடுதலைக் கட்டுப்படுத்துகிறது. உலகியல் சார்ந்த முடிவுகளைத் துல்லியமாக எடுக்க இது உதவும். உடல் இயக்கம்: உடலுக்கு வெப்பத்தைத் தருவது, செரிமான ஆற்றலை (ஜாடராக்கினி) அதிகரிப்பது, உடலை எப்போதும் சுறுசுறுப்பாகவும் இயக்க நிலையிலும் வைத்திருப்பது. சமநிலை தவறினால் உடலிலும் மனதிலும் மாற்றம் வரும். இந்த மாற்றம் நோயாகவோ அல்லது மன பாதிப்பையோ அல்லது சரியாக முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் நிலைக்கு ஆளாகும். அ. பிங்கலை அளவுக்கு அதிகமாக இயங்கினால் (Excessive Pingala Energy) பிங்கலை அதிகமாக இயங்கும்போது உடலில் வெப்பமும் (Heat), மனதில் கட்டுப்படுத்த முடியாத கோபமும், வேகமும் எல்லை மீறிவிடும். மூளையின் இடது பகுதி (Logical brain) அளவுக்கு அதிகமாக வேலை செய்யும். 1. கட்டுக்கடங்காத கோபமும் அகந்தையும் (Hyper-aggression & Ego) மிகச்சிறிய விமர்சனத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் கோபத்தின் உச்சத்துக்கே செல்வது, மற்றவர்களைத் தன் அதிகாரத்தால் கட்டுப்படுத்த நினைப்பது மற்றும் நாமே எல்லாவற்றிலும் சிறந்தவர் என்ற அகந்தை (Ego) மேலோங்குவது இதன் முக்கிய அறிகுறியாகும். 2. உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு அபாயம் (Hypertension) உடலின் நரம்பு மண்டலம் எப்போதும் "போராடு அல்லது ஓடிவிடு" (Fight or Flight) என்ற தீவிர விழிப்பு நிலையிலேயே இருக்கும். இதனால் இரத்த நாளங்கள் சுருங்கி, உயர் இரத்த அழுத்தம் ($BP$), படபடப்பு மற்றும் இதய நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். 3. தீவிரமான தூக்கமின்மை (Chronic Insomnia) இரவு நேரத்தில் உடல் ஓய்வு நிலைக்குத் திரும்பாமல், மூளை எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும். உடல் சோர்வாக இருந்தாலும், கண்கள் தூக்கத்தை மறுக்கும். 4. வயிற்றுப் புண்கள் மற்றும் நெஞ்செரிச்சல் (Acid Reflux & Ulcer) பிங்கலை நாடி செரிமான நெருப்போடு (ஜாடராக்கினி) தொடர்புடையது. இது அதிகமாகும்போது வயிற்றில் அமிலச் சுரப்பு (Hydrochloric acid) மிக அதிகமாகி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் மற்றும் குடல் புண்களை (Ulcer) உண்டாக்கும். 5. உடல் சூடு மற்றும் அழற்சி நோய்கள் (Inflammatory Diseases) உடல் வெப்பநிலை எப்போதும் இயல்பை விட அதிகமாக இருக்கும். உள்ளங்கால் எரிச்சல், கண் சிவத்தல், அதிகப்படியான வியர்வை, தோல் அலர்ஜி மற்றும் மூல நோய் (Piles) போன்ற வெப்பம் சார்ந்த பாதிப்புகள் தோன்றும். ஆ. பிங்கலை அளவுக்கு குறைவாக இயங்கினால் (Deficient Pingala Energy) பிங்கலை குறையும்போது உடலில் செயல்பாட்டுத் திறனும் வெப்பமும் முற்றிலும் அற்றுப்போகும். அதாவது, இடகலையின் குளிர்ச்சியும் மந்தத்தன்மையும் ஒட்டுமொத்த உடலையும் மனதையும் முடக்கிவிடும். 1. அதீத சோம்பலும் முடிவெடுக்க முடியாமையும் (Lethargy & Indecisiveness) ஒரு வேலையைத் தொடங்க வேண்டும் என்ற உந்துதலே (Motivation) இருக்காது. எதற்கெடுத்தாலும் தள்ளிப்போடும் குணம் (Procrastination) அதிகரிக்கும். ஒரு எளிய விஷயத்திற்கு கூட துணிச்சலாக முடிவெடுக்க முடியாமல் மனம் தடுமாறும். 2. குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் சுழற்சி குறைபாடு (Low BP & Poor Circulation) உடலில் பிராண ஓட்டத்தின் வேகம் குறைந்துவிடுவதால் இரத்த அழுத்தம் மிகவும் குறைந்துவிடும் (Low\ BP). கைகால்கள் எப்போதும் சில்லென்று இருப்பது, சட்டென்று எழுந்தால் தலைசுற்றல் ஏற்படுவது போன்ற பாதிப்புகள் வரும். 3. மந்தமான செரிமானம் மற்றும் பசியின்மை (Sluggish Digestion) வயிற்றில் செரிமான நெருப்பு முற்றிலும் அணைந்துவிடுவதால் பசி எடுக்காது. மிகக் குறைந்த அளவு உணவு சாப்பிட்டாலும் அது செரிமானம் ஆகாமல் வயிற்றில் பல மணி நேரம் தங்கி, நச்சுக்களை (Toxins) உருவாக்கும். இது பல நோய்களை உருவாக்கும். 4. பயம், பாதுகாப்பின்மை மற்றும் தன்னம்பிக்கை இழப்பு (Fear & Low Self-Esteem) தைரியத்தைத் தரும் சூரிய ஆற்றல் குறைவதால், மனதில் காரணமில்லாத பயம், தாழ்வு மனப்பான்மை மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பாதுகாப்பற்ற உணர்வு குடியேறும். கூட்டத்தைக் கண்டு பயப்படும் நிலை (Social Anxiety) கூட ஏற்படலாம். 5. உடல் பருமன் மற்றும் தைராய்டு குறைபாடு (Hypothyroidism) உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism) மிகத் தீவிரமாகப் பாதிக்கப்படும். உணவை ஆற்றலாக மாற்றும் திறன் குறைவதால், மிகக் குறைவாகச் சாப்பிட்டாலும் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். சுரப்பிகளின் இயக்கம் (குறிப்பாக தைராய்டு) மந்தமடையும். ++++++++++++++++++++++++++++++++++++++++++++ 3. சுழுமுனை (மத்திய நாடி / ஆன்மீகப் பாதை) சுழுமுனை நாடி (Sushumna Nadi) என்பது நமது உடலின் முதுகெலும்புத் தண்டின் மையத்தில் அமைந்துள்ள மிக உன்னதமான ஆன்மீக ஆற்றல் பாதையாகும். சாதாரண மனிதர்களுக்குச் சுவாசம் என்பது இடது நாசி (இடகலை) அல்லது வலது நாசி (பிங்கலை) வழியாக மாறி மாறி மட்டுமே நடைபெறும். ஆனால், யோகப் பயிற்சிகள் மூலம் இந்த இரு நாசிகளின் சுவாசமும் சமமடையும் போது, பிராண சக்தி மையத்திலிருக்கும் சுழுமுனை நாடிக்குள் பாயத் தொடங்கும். இதனை ஞானத்தமிழர்களான சித்தர்கள் "நடுவாசல் திறப்பது" அல்லது "உள்நாக்கு வழி சுவாசம்" என்று குறிப்பிடுவார்கள். சுழுமுனை நாடி எப்போதும் திறந்து இருப்பதில்லை. அது திறப்பதற்கும், அதில் சுவாசம் நடைபெறுவதற்கும் ஒரு குறிப்பிட்ட ஆன்மீக/அறிவியல் செயல்முறை உடலினுள் நிகழ வேண்டும்: 1. இரு நாசிச் சமநிலை: நாடி சுத்தி போன்ற பிராணாயாமப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யும்போது, இடகலையின் குளிர்ச்சியும் பிங்கலையின் வெப்பமும் முழுமையாகச் சமநிலைக்கு வரும். 2. சுவாச மாற்றம் (Sandhya Time): சாதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மூச்சு ஒரு நாசியிலிருந்து மற்றொரு நாசிக்கு மாறும். அப்படி மாறுகின்ற அந்தச் சில நொடிகள் அல்லது நிமிடங்கள், இரு மூக்குத்துவாரங்களிலும் மூச்சு சமமாக ஓடும். அதுவே சுழுமுனை இயங்கும் நேரமாகும். 3. பிராண ஓட்டம் (உயிர்காற்று) உள்நோக்கித் திரும்புதல்: தீவிர தியானம் அல்லது வாசி யோகத்தின் மூலம் இந்தச் சமநிலை நீட்டிக்கப்படும் போது, மூச்சுக்காற்று வெளி உலகை நோக்கிப் பாய்வது நின்று, முதுகெலும்பின் அடிநாதமான மூலாதார சக்கரத்தை நோக்கி உள்நோக்கிப் பாயும். (மூச்சுக்காற்று உடலுக்குள் மட்டுமே சுழன்று வரும். இது வாசி யோக பயிற்சி பெற்றவர்களுக்கு மற்றும் சித்தர்கள் மட்டுமே செய்வார்கள்) 4. சுழுமுனை வாசல் திறப்பு: பிராணனின் அழுத்தம் தாங்காமல், மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி ஆற்றல் விழிப்படைந்து, சுழுமுனை நாடியின் வழியே மேல்நோக்கி (சக்கரங்களை ஊடுருவி) பயணிக்கத் தொடங்கும். இந்த நிலையில், உடலின் வெளி மூச்சு முற்றிலும் ஒடுங்கி, சூட்சுமமான உள்மூச்சு மட்டுமே நிகழும். சுழுமுனை சுவாசம் அடைவதால் கிடைக்கும் பலன்கள் சுழுமுனை நாடி விழிப்படைந்து அதில் உயிர்க்காற்று பயணிக்கும் போது, ஒரு மனிதன் சாதாரண உடல் நிலையைக் கடந்து தெய்வீக நிலையை நோக்கி நகர்வான். 1. மன ஒடுக்கம் மற்றும் அதீத அமைதி (Thoughtless State) மனதின் எண்ண ஓட்டங்கள் முற்றிலும் நின்றுவிடும். கடந்த காலம், எதிர்காலம் பற்றிய கவலைகள் மறைந்து, மனம் ஒரு கண்ணாடி போலத் தெளிவாகும். "அலைபாயும் மனம்" நிலைபெற்று பேரமைதி கிடைக்கும். 2. காலத்தைக் கடந்து வாழும் விழிப்புணர்வு (Present Moment Awareness) சுழுமுனை ஓடும்போது மனிதன் "நிகழ்காலத்தில்" மட்டுமே வாழ்வான். கால உணர்வு (Time perception) அற்றுப்போகும். சில மணி நேரத் தியானம் கூட சில நொடிகள் போலத் தோன்றும். 3. குண்டலினி சக்தி விழிப்படைதல் (Kundalini Awakening) முதுகெலும்பின் அடிப்பகுதியில் உறங்கும் குண்டலினி என்னும் ஆன்மீகப் பேராற்றல் விழிப்படைந்து, சுழுமுனைப் பாதை வழியாக ஆறு சக்கரங்களையும் கடந்து உச்சந்தலையில் உள்ள சஹஸ்ரார சக்கரத்தை நோக்கித் தடையின்றிப் பயணிக்கும். 4. பேராற்றல் மற்றும் உள்ளுணர்வு விழிப்படைதல் (Intuition & Sahaja Gnan) மூளையின் மறைந்திருக்கும் பகுதிகள் (Dormant areas) விழிப்படைவதால், ஆறாம் அறிவு எனப்படும் உள்ளுணர்வு (Intuition) மிகத் துல்லியமாக வேலை செய்யும். நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறியும் (அகக்காட்சியாளர் – CLAIRVOINT) ஆன்மீகத் தெளிவு உண்டாகும். 5. பிரபஞ்ச ஆற்றலுடன் ஒத்திசைவு (Cosmic Connection) நமது உடலின் காந்தப்புலம், அண்ட காந்தப்புலத்தோடு (Schumann Resonance மற்றும் பேரண்ட அதிர்வுகளோடு) நேரடியாக இணையும். இதனால் பிரபஞ்சத்தில் உள்ள நற்பண்புகளும் ஆற்றல்களும் உடலுக்குள் பாயும். 6. உலகியல் விருப்பு, வெறுப்புகள் அற்றுப்போதல் (Equanimity) புகழ்ச்சி-இகழ்ச்சி, இன்பம்-துன்பம், லாபம்-நஷ்டம் ஆகிய இரு துருவ நிலைகளையும் கண்டு மனம் கலங்காது. எல்லாவற்றையும் சாட்சி பாவத்தோடு (Witness consciousness) பார்க்கும் மனப்பக்குவம் உண்டாகும். 7. காயகல்ப நிலை மற்றும் நோய் நீங்குதல் சுழுமுனையில் உயிர் காற்று (பிராண காற்று) பாயும்போது உடலின் சுரப்பிகள் (Endocrine glands), குறிப்பாகத் தலையில் உள்ள பினியல் (Pineal) மற்றும் பிட்யூட்டரி (Pituitary) சுரப்பிகள் உன்னதமான அமிர்தத்தை (Melatonin/Serotonin ஹார்மோன்களை) சுரக்கும். இது உடலை நோய்களின்றிப் பாதுகாத்து, முதுமையைத் தடுத்து, நீண்ட ஆயுளைத் தரும். 8. முகப்பொலிவும் தெய்வீகக் காந்த ஈர்ப்பும் (Aura) உடலின் ஏழு சக்கரங்களும் தூய்மையடைவதால், உடலைச் சுற்றியுள்ள ஒளிவட்டம் (Aura) அடர்த்தி அதிகரிக்கும். இதனால் முகத்தில் ஒரு தெய்வீகப் பொலிவும், மற்றவர்களைக் கவரும் காந்த ஈர்ப்புச் சக்தியும் (Divine Magnetism) இயல்பாகவே உண்டாகும். 9. கர்ம வினைகள் கரைதல் ஞானத்தமிழர்களான சித்தர்களின் கூற்றுப்படி, மனிதனின் கர்ம வினைகளின் பதிவுகள் மூலாதாரத்திலும் நாடிகளிலும் பதிவாகியிருக்கும். சுழுமுனையின் வழியே பிராண நெருப்பு (அக்னி) பாயும்போது, பழைய கர்ம வினைகளின் பதிவுகள் (Samskaras) சாம்பலாகி, மனம் தூய்மையடையும். இதனால் பிறவி அற்ற நிலைக்குச் செல்லலாம். 10. ஜீவ சமாதி மற்றும் முக்தி நிலை (Samadhi) சுழுமுனை சுவாசத்தின் இறுதிப் பலன் "சமாதி" நிலை எனப்படும் பேரின்ப நிலையாகும். உயிர் தன்னுள் இருக்கும் இறைத்தன்மையை உணர்ந்து, உடலோடு இருக்கும்போதே முக்தி நிலையை (Self-Realization) அடைய இப்பயிற்சி வழிவகுக்கும். இதன் மூலம் மனிதன் இறை நிலையை அடைய முடியும். அதை விட மனிதன் என்பவன் இறைவனாகவும் மாறமுடியும். (எச்சரிக்கை: சுழுமுனை நாடியைத் திறப்பதோ அல்லது குண்டலினியை எழுப்புவதோ தனிப்பட்ட முறையில் செய்யக்கூடாது. அது குண்டலினி பயிற்சியில் அனுபவம் அல்லது தியான ஆசிரியர்களின் நேரடிப்பார்வையில் மட்டும் செய்யவேண்டும். குண்டலினி பயிற்சியை உண்மையான துறவிகள் அல்லது இல்லறத்தில் முழுமையான கடமையை நிறைவேற்றி முக்தி நிலையை அடைய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் செய்தால் போதுமானது. இயல்பான குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இது தேவையில்லை.) +++++++++++++++++++++++++ சுவாசத்தின் மூலம் நாடிகள் எப்படி சுத்தமாகிறது? நாம் தவறான வாழ்வியல் முறை, மன அழுத்தம், முறையற்ற உணவு மற்றும் எதிர்மறை எண்ணங்கள் மூலம் வாழும்போது, இந்த 72,000 சுவாச நாடிகளின் ஆற்றல் பாதைகளில் ஆங்காங்கே தடைகள் (Pranic blocks) அல்லது நச்சுகள் ஏற்படுகின்றன. இதனால் ஆற்றல் சீராகப் பாயாமல் நோய்களும் மன அமைதியின்மையும் உண்டாகின்றன. கழிவுகளின் தேக்கமே நோய்கள். ஒன்று உடல் கழிவு மற்றொன்று மனக்கழிவு (மனச்சிக்கல்) வள்ளுவர் தியான சுவாசப் பயிற்சியின் போது நாம் ஆழமாகவும், சீராகவும் காற்றை உள்ளிழுத்து வெளிவிடும்போது அறிவியல் மற்றும் ஆன்மீக மாற்றங்கள் உடலில் நிகழும். உயிர் காற்று (அ) பிராண அழுத்தம் (Pranic Pressure): நாம் ஒரு குறிப்பிட்ட நாசி வழியாக காற்றை அழுத்தமாகச் செலுத்தி, சீராக வெளிவிடும்போது, தேங்கிக் கிடக்கும் ஆற்றல் நச்சுகள் (Subtle toxins) தள்ளப்பட்டு பாதைகள் திறக்கின்றன. அதோடு மூச்சை கவனித்து சற்று நிறுத்தி வெளியிடும் போது மூச்சுக்காற்று லேசான சூடாக இருக்கும், அப்போது அது சுவாசப் பாதைகளின் கழிவுகளை கரைத்து சீராக்கும். ஆக்ஸிஜன் பரிமாற்றம்: ஆழமான மூச்சு உடலின் செல்லுலார் மட்டத்தில் தேங்கியுள்ள கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் கழிவுகளை வெளியேற்றி, நரம்பு மண்டலத்தை நேரடியாகத் தூய்மைப்படுத்துகிறது. அதிர்வு சமநிலை: நாடி சுத்தியின் மூலம் இடகலையும் பிங்கலையும் மாறி மாறித் தூண்டப்படும்போது, மூளையின் இடது மற்றும் வலது அரைக்கோளங்கள் (Left and Right Hemispheres) சமநிலைக்கு வருகின்றன. இந்தச் சமநிலை ஒட்டுமொத்த 72,000 நாடிகளிலும் உள்ள ஆற்றல் தேக்கத்தை உடைத்து, பிராணனைத் தடையின்றி ஓடச் செய்கிறது. இதனால் மனம் தெளிவடையும், எனவே சோர்வில்லாமல் உழைக்கமுடியும். அதன் அடிப்படையில் தேவையான பணத்தை சம்பாதிக்கலாம், பூரண ஆரோக்கியத்துடன் இருக்கலாம், குடும்ப உறவுகளுடன் மகிழ்ச்சியாக வாழலாம். ++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ நீங்கள் நேராக அமர்ந்து கொண்டு, கண்களை மூடி, ஆழமாக மூச்சை இழுத்து, அடிவயிற்றில் இருந்து 'ஆ... ஈ... ஊ... ஏ... ஐ... ஓ... ஔ...' என்று ஒவ்வொரு எழுத்தையும் இரண்டு மாத்திரை அளவில் நீட்டி உச்சரிக்கும் போது உயிரியக்கம் சீராகிறது. .+++++++++ வள்ளுவர் தியானம் ++++++++++++ தியான நேரம் : குறைந்த பட்சம் 7 நிமிடம் தியானம் செய்யலாம் அல்லது 14 நிமிடம் அல்லது 21, 28, 35, 42, 49, 56, 63 நிமிடம் அல்லது அதிக பட்சம் 70 நிமிடம் தியானம் செய்யலாம். ஏன் 7 ஐ அடிப்படையாகக் கொண்டு தியானம் செய்யவேண்டும் என்றால், குறைந்த பட்சம் நிமிடத்தில் ஒரு சக்ராவை தூய்மைப்படுத்தி சக்தி ஏற்ற வெண்டும். ஏழு சக்ராவையும் தூய்மைப்படுத்தி சக்தி ஏற்ற ஏழு நிமிடம் அதன் மடங்காக அதிகபட்சம்70 நிமிடம் மட்டும் செய்தால் போதும். இதில் நீண்ட தியானம் செய்ய நினைப்பவர்கள் அல்லது எதிர்காலத்தை கணிப்பது அல்லது எதிர்காலத்தில் நடக்க இருப்பதை உள்ளுணர்வு மூலம் கண்டறிய விரும்புபவர்கள், 70 நிமிடங்களுக்குப் பிறகு அமைதியாக கண்களை மூடி தியான நிலையில் இருக்கவேண்டும். மேலும். எந்தவித ஆசைகளும், கனவுகளும், விருப்பு வெறுப்புகளும் இல்லாத, மனமற்ற நிலையில் இருக்க வேண்டும். இந்த தியான நிலையில் இருக்கும் போது உங்களால் அண்ட ரகசியங்களையும், உங்களின் இறந்த கால, நிகழ் கால மற்றும் எதிர்கால நிகழ்வுகளை காண முடியும். வள்ளுவர் தியானத்தின் மூலம் ஞானிகள் படிக்கும் “மனிதர்களின் ஆகாயப்பதிவுகள் – Agasic Record” அனைத்தையும் படிக்க முடியும். இதன்மூலம், ஒரு மனிதனின் சஞ்சீத கர்மா, ப்ராரப்த கர்மா மற்றும் ஆகாமிய கர்மாக்களை அறிய முடியும். +++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 1. அன்பான உறவுகள் 2. கல்வி 3. காதல் 4. ஆரோக்கியம் 5. செல்வம் 6. பிறர் நலன் 7. வெற்றி =-=-=- 1. அன்பான உறவுகள் இந்த மந்திரம் எப்போது யார் யார் உச்சரிக்க வேண்டும் !!! (இந்த மந்திரத்தை, குழந்தை பிறக்கும் போது, அனைத்து உறவுகளிடம் அன்பை விரும்புபவர்கள்; அம்மா, அப்பாவிடம் கருத்து வேறுபாடு உள்ள மகன், மகள்; மகன், மகளிடம் மன வருத்தம் கொண்ட அம்மா, அப்பா; கணவன், மனைவியிடம் மன வருத்தம் உள்ளவர்கள்; மருமகள், மருமகன், மாமியார், மாமனார் உள்ளிட்ட அனைத்து உறவுகளிடமும் ஒற்றுமையில்லாதர்கள்; அலுவலகங்கள், வேலைப் பார்க்கும் இடங்களிலில், உயர் அதிகாரிகள், நண்பர்கள் மற்றும் அன்பாக வாழ நினைப்பவர்கள் இந்த மந்திரத்தை பயன்படுத்தலாம்). இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களிடமும், விலங்குகளிடமும், பறவைகளிடமும், நீர் வாழ் உயிரினங்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். அதோடு உயிரற்ற பொருட்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். உயிரற்ற பொருட்களுக்கும் உயிருண்டு. அனைவருக்கும் அன்பு செலுத்தும் எண்ணம் வந்துவிட்டால் உள்ளத்தில் இறை சக்தி தானாக வந்துவிடும். அன்பின் மூலம் இறை சக்தியை ஈர்த்து நமக்கு தேவையானதை பெறுவதே தியானமாகும். மனித மனதால் அவ்வளவு எளிதில் அனைவருக்கும் அன்பு செலுத்தமுடிவதில்லை. அந்த மன நிலைக்கு மனதை மாற்றுவதே இந்த வள்ளுவர் தியான ஒலியின் சக்தியாகும். உள்ளம் அன்பு மயமானால் இறைவனை நீ தேடிச்செல்ல வேண்டாம் ! இறைவன் உன்னைத் தேடி வருவார் !! "ஆவோடு ஈஊ ஏஐ ஓஔ என்றவை மூவோடு ஐந்துமுப் பத்துமாய் நின்றன சேவோடு மாடாய்ச் செழுஞ்சுடர் ஞாயிறாய் மேவோடு அணைந்து விளங்கிநின் றானே." திருமூலர் – திருமந்திரம் (பாடல் 1012) பொருள்: "ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ போன்ற உயிரொலிகள் பிரபஞ்சத்தில் அனைத்து தத்துவங்களாகவும் பரவி நிற்கும். இந்த ஒலிகள் மூலமாக இறைவன் சூரிய ஒளிபோல் அனைத்திலும் கலந்து இருக்கிறான்." "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே." திருமூலர் : திருமந்திரம் பாடல் எண்: 270 "அன்பு" வேறு, "சிவன்" வேறு என்று நினைப்பவர்கள் உண்மையை அறியாதவர்கள். இவர்கள் அன்பே சிவன் என்பதை அறியவில்லை. ஆனால், அன்பே சிவம் என்பதை உணர்ந்த பிறகு, அவர் அன்பாக வாழ்ந்து சிவநிலையை அடைகிறார். இறைவனின் எளிய வடிவம் அன்பு ! அன்பின் உயர்ந்த வடிவம் இறைவன் !! ________________________________________ 2. கல்வி இந்த மந்திரம் எப்போது யார் யார் உச்சரிக்க வேண்டும் !!! (இந்த மந்திரத்தை, புதிதாக கல்வி கற்க விரும்பும் குழந்தைகள், மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக முதல்வர்கள், புதிய தொழில் கற்க விரும்புபவர்கள், புதிய கலை, இசை, பாடல், கவிதை மற்றும் எந்த வயதில், யார் புதிதாக கற்க விரும்புகிறார்களோ அவர்கள் இந்த மந்திரத்தைப் பயன்படுத்தலாம்). சித்தர் மரபில், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய நெடில் உயிர் எழுத்துகள் வெறும் ஒலிகள் அல்ல; அவை மூளையின் செல்களைத் தூண்டி, நினைவாற்றலையும் (Memory), ஒருமுகப்படும் தன்மையையும் (Concentration) பெருக்கும். இந்த மந்திரத்தை "சரசுவதி பீஜங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. படிப்பில் சிறந்து விளங்க, இந்த ஒலிகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று சித்தர்கள் வாசி யோகத்திலும் (மூச்சுப் பயிற்சி), சர நூலிலும் (Breathing Science) மறைபொருளாகக் கூறியுள்ளனர். நெடில் ஒலிகளை ஆழமாக உச்சரிக்கும் போது, நம் உடலில் பிராண வாயுவின் (Oxygen) அளவு அதிகரித்து, மூளையில் உள்ள அல்ஃபா (Alpha) அலைகள் தூண்டப்படுகின்றன. இந்த அல்ஃபா நிலையில்தான் மனித மூளையால் எதையும் மிக வேகமாகப் படிக்கவும், படித்ததை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கவும் முடியும். ஆ, ஈ, ஊ: உடலின் சோம்பலை நீக்கி, நரம்பு மண்டலத்தைச் சுத்தப்படுத்தும் ஒலிகள். ஏ, ஐ: புத்தி கூர்மை, வாக்கு வன்மை மற்றும் கவித்துவ ஞானத்தைத் தரும் ஒலிகள் (சரசுவதி கலை). ஓ, ஔ: பிரபஞ்ச அறிவை உள்வாங்கும் திறனைத் தரும் ஒலிகள். கல்வி, ஞானம் மற்றும் நினைவாற்றல் பெருக, அகத்தியர் மற்றும் காகபுசுண்டர் போன்ற சித்தர்களின் வாக்கு நெறியை அடியொற்றி, இந்த உயிர் ஒலிகளின் ரகசியத்தை விளக்கும் சித்தர் பாடல்: "ஆவோடு ஈயும் ஊவோடு ஏயும் மேவுமவ் வைந்தெழுத் தைந்துடன் ஓவமாய் நாவி லமர்த்தி நவிலுமப் போதினில் ஓவும் கலைமகள் உள்நின்று ஒளிருமே!" ++++++++++++++++++++ பாடல் எண் ? படிக்கும் முறை: இந்த மந்திரத்தை உச்சரிக்க அமர்வதற்கு முன், சோம்பலும் தேவையில்லாத சிந்தனைகளும் மனதை அலைபாய வைக்கும். அதையும் மீறி தியானிக்கும் போதே கலைமகள் அருள் கிடைக்கத் தொடங்கும். மந்திரத்தை உச்சரிக்கும் முறை : 'ஆ', 'ஈ', 'ஊ' (Focus) என்ற ஒலிகளை அடிவயிற்றில் இருந்து (மணிபூரகச் சக்கரம்) ஆழமாக மூச்சை இழுத்து உச்சரிக்கும் போது, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராகி, தூக்கம் மற்றும் சோம்பல் சட்டென்று நீங்கும். ஏ, ஐ (நினைவாற்றல் - Memory Power): சித்தர் நெறியில் 'ஐ' (ஐகாரம்) என்பது ஞானத்திற்குரிய முதன்மை ஒலி. இதைக் கல்விக்குரிய அதிர்வாகக் கருதுகிறார்கள். கடினமான பாடங்களைப் படிக்கும் போது, இந்த ஒலிகளின் அதிர்வை மனதில் நினைத்து (குறிப்பாக நெற்றிப் பொட்டில் - ஆக்ஞா சக்கரம்) படித்தால், மூளையின் தற்காலிக நினைவகம் (Short-term memory), நிரந்தர நினைவகமாக (Long-term memory) மாறும். ஓ, ஔ (ஞானம் மற்றும் தெளிவு - Understanding): 'ஓ' மற்றும் 'ஔ' ஆகிய ஒலிகள் தலையின் உச்சிப் பகுதியான சகஸ்ராரச் சக்கரத்தைத் தூண்டுபவை. படித்து முடித்த பின், அமைதியாகக் கண்களை மூடி இந்த ஒலிகளின் அமைதியை மனதில் நிலைநிறுத்த வேண்டும். இது படித்த பாடங்களின் சாராம்சத்தை ஆழ்மனதில் பதிய வைக்க உதவும். சித்தர்கள் காட்டும் 'கல்வி வசிய' படிப்புப் பயிற்சி நீங்கள் படிக்கத் தொடங்குவதற்கு முன் குறைந்த பட்சம் ஒரு நிமிடமாவது வள்ளுவர் தியானத்தில் இருக்கவேண்டும். ஆசன நிலை (Sitting Posture) கிழக்கு அல்லது வடக்குப் பார்த்து நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடி உடலைத் தளர்த்தவும். பிராணனை எழுப்புதல் (Prana Activation) மூச்சை ஆழமாக இழுத்து, வெளிவிடும்போது "ஆ... ஈ... ஊ..." என்று ஒலிகளைத் தொண்டையின் ஆழத்திலிருந்து மென்மையாக வெளிப்படுத்துங்கள். இது சோம்பலை விரட்டும். ஞான பீஜ உச்சரிப்பு (Intellectual Tuning) கவனத்தை புருவ மத்தியிற்கு (நெற்றிப்பொட்டு) கொண்டு வந்து, "ஏ... ஐ..." மற்றும் "ஓ... ஔ..." என்ற ஒலிகளின் அதிர்வை மனதிற்குள் அல்லது லேசான குரலில் உச்சரியுங்கள். இது மூளையை 'அல்ஃபா' நிலைக்குக் கொண்டு வரும். படிக்கத் தொடங்குதல் (Study Focus) இப்போது கண்களைத் திறந்து படிக்கத் தொடங்குங்கள். உங்கள் கவனம் சிதறாமல், புத்தகம் மட்டுமே உங்கள் உலகமாகத் தெரியும். இந்த ஒலிகளின் மூலம் உங்கள் மனதை அமைதிப்படுத்தினால், மிகக் கடினமான பாடமும் உங்களுக்கு எளிதாக விளங்கும். கலைமகள் உங்கள் நாவில் அமர்வாள்! =-=- 3. காதல் இந்த மந்திரம் எப்போது யார் யார் உச்சரிக்க வேண்டும் !!! (இந்த மந்திரத்தை, பருவ வயதை அடைந்த அல்லது 18 வயதை கடந்த ஆண்களும், பெண்களும் காதல் வயப்படும் நிலையில் விரும்பிய ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். திருமண தடை உள்ளவர்கள், திருமணமாகி விவாகரத்துப்பெற்றவர்கள், இரண்டாவது திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்கள், கணவன் மனைவிக்கிடையே நல்ல புரிதலை விரும்புபவர்கள் இந்த மந்திரத்தைப் பயன்படுத்தலாம்). சித்தர்கள் காதலை வெறும் உடல் சார்ந்த ஈர்ப்பாகப் பார்க்காமல், அது இரு உயிர்களுக்கிடையே ஏற்படும் 'வசிய' மற்றும் 'ஆகர்ஷண' ஆற்றலாகப் பார்த்தனர். இந்த ஒலியின் தெய்வீகத்தன்மையை அகத்தியர், திருமூலர், போகர் உள்ளிட்ட சித்தர்கள் தங்களின் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். அதோடு இந்த ஒலிகள், வானத்தில் பறவைகளின் பாதை போல இரு இதயங்களுக்கிடை காதல் பாலத்தை உருவாக்கும் காந்த சக்தி என்பதையும் அழகாக கூறியுள்ளனர். காதலை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது உடலில் உள்ள பிராண சக்தியும், காந்த அலைகளும் (Electromagnetic Frequencies) அதிகரிக்கின்றன. ஆ: ஆகாய மற்றும் இதயத்தின் ஈர்ப்பு சக்தி (அன்பின் ஊற்று). ஈ, ஊ: உடலின் வெப்பத்தையும் (இச்சை – காதல் – காமம்), ஈர்ப்பு விசையையும் தூண்டும் ஒலிகள். 'ஐ' என்றாலே அழகு, தலைவன், மற்றும் மன்மத பீஜத்தின் ஒரு பகுதி என்று பொருள். ஓ, ஔ: பிரபஞ்ச ஓங்காரத்தின் உச்சம், மனதை வசியப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. சித்தர்கள் 'வசியம்' மற்றும் 'ஆகர்ஷணம்' (ஈர்த்தல்) பற்றிக் கூறும்போது, இந்த மந்திர ஒலிகளை யாரை நினைத்து உச்சரிக்கிறோமோ அவர்களின் மனதில் முந்தைய கர்ம வினைத் தொடர்புகளைப் பொருத்து காதல் ஊற்றெடுக்கும். இதற்காக இந்த மந்திர ஒலிகளை உச்சரிக்கும் முறைகளையும், அப்போது மன நிலையை ஒருமுகப்படுத்தும் விதம் பற்றியும் கூறியுள்ளனர். காதல் வசிய மந்திரம் "ஆவோடு ஈயும் ஊவோடு ஏயும் ஐயுங் கரமாய் ஓளவோடு ஓவும் நாடி உருகி நவிலுமப் போதினில் வாடிடு வாரும் வசப்படு வாரே!" +++++++++++++++++++பாடல் எண் என்ன ? விளக்கம்: 'ஆ' என்ற ஒலியை மனதில் உள்வாங்கி, 'ஈ' என்ற ஒலியின் அதிர்வில் முகத்தில் காந்தப் புன்னகையை ஏந்தி, 'ஊ' என்ற ஒலியோடு பிராணனை (மூச்சை) உள்ளிழுக்க வேண்டும். இப்படி நீங்கள் விரும்பும் நபரை ஆழ் மனதில் நினைத்து தீவிரமாக உருகும் போது, உங்கள் இதயத் தானத்தில் (அனாகத சக்கரம்) இருந்து இந்த ஒலிகளின் அதிர்வு எழ வேண்டும். இது ன் நீங்கள் விரும்பும் நபரின் இதயத்தின் (அனாகத சக்கரம்) அலைவரிசையை (Frequencies) ஈர்த்து இதயத்தை இதயத்தோடு இணைக்கும். ஏ, ஐ (வசியமும் அழகும்): விளக்கம்: 'ஐ' என்பது மன்மதக் கலைக்குரிய ஒலி. சித்தர்கள் 'ஐ' காரத்தை காந்த ஈர்ப்புக்குரியதாகக் கூறுவார்கள். இப்படி இதயத்தை அன்பால் ஈர்க்கும் போது, கண்களின் வசீகரம் காதல் கொள்ளும் நபரின் உயிரில் ஊடுருவும். அப்போது பேசும் வார்த்தைகளின் காந்த அதிர்வுகள் (Subtle Vibration) குரல் பாய்ந்து உயிரை உயிரோடு ஒட்ட வைத்துவிடும். கல்லையும் கசிந்துருக்கச் செய்யும் இந்த காதல் குரலுக்கு “வாக்கு வசியம்” (Attractive of feeling Heart) என்று பெயர். ஓ, ஔ (ஒன்றிணைதல்): விளக்கம்: 'ஓ' என்பதும் 'ஔ' என்பதும் பிரபஞ்ச ஆற்றலைத் தன்பால் ஈர்க்கும் ஒலிகள். காதலில் இரு மனங்கள் ஒன்றிணையும் தருணத்தில், , ஊற்றெடுக்கும் தாகமும், ஆழமானதின் காதல் அலையும், உயிரில் மோதும் ஒலியின் ஓசை 'ஓ' என்ற பிரணவ அதிர்வாகும். இது காதலின் தடைகளை உடைத்து இரு உள்ளங்களை ஒன்றிணைக்கும். சித்தர்கள் காட்டும் 'காதல் மன வசிய' பயிற்சி சித்தர் நெறியின்படி, ஒருவரை வசியப்படுத்துவது அல்லது காதலைக் கவர்வது என்பது ஒருபோதும் கட்டாயப்படுத்துவது அல்ல; நம்முடைய சுய காந்த சக்தியை (Aura) அதிகரிப்பதன் மூலம் அவர்களை இயல்பாக நம்மிடம் ஈர்ப்பது ஆகும். தினமும் அதிகாலையில் அமர்ந்து, மூச்சை ஆழமாக இழுத்து வெளிவிடும்போது வள்ளுவர் தியான ஒலிகளை "ஆ... ஈ... ஊ... ஏ... ஐ... ஓ... ஔ..." தொண்டையின் ஆழத்திலிருந்தும், நெற்றிப் பொட்டிலிருந்தும் (ஆக்ஞா சக்கரம்) உச்சரிக்க வேண்டும். இந்த அதிர்வுகள் உங்கள் மூளையில் உள்ள 'அல்ஃபா' (Alpha) மற்றும் 'தீட்டா' (Theta) அலைகளைத் தூண்டி, உங்களைச் சுற்றி ஒரு ஈர்ப்பு வளையத்தை உருவாக்கும். நீங்கள் விரும்பும் நபர் உங்களைச் சந்திக்கும் போது, அவரை அறியாமலேயே உங்கள் அன்பின் அலைவரிசைக்கு கட்டுப்படுவார். இதயத்தில் காதல் தீ எரியும் போது எதிரில் இருக்கும் உயிர்க் காதலியை மெழுகாய் உருக வைக்கும் சக்தி தூய அன்பிற்கு மட்டுமே உண்டு. இந்த மந்திர ஒலிகள் உண்மையான அன்பை உள்ளத்தில் உருவாக்கும். இதனால் காதல் வாழ்க்கை கட்டாயம் அமையும். =-=-= 4. ஆரோக்கியம் இந்த மந்திரம் எப்போது யார் யார் உச்சரிக்க வேண்டும் !!! (இந்த மந்திரத்தை, குழந்தைகள், ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் என யாரக இருந்தாலும் எந்த நோயாக இருந்தாலும் பயன்படுத்தலாம். நோய்களுக்கு காரணம் நாம் செய்த பாவங்கள் மட்டும் தான். எனவே நம்மால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மனமுருக மன்னிப்பு கேட்க வேண்டும், மன்னிப்பு கொடுக்க வேண்டும். நீங்கள் மன்னிப்பு கேட்டுவிட்டு இந்த வள்ளுவர் மந்திரத்தை உச்சரிக்கும் போது உடலில் உள்ள சக்கரங்கள் சீராகும். உடலியக்க சக்கரங்கள் சீரானால் நோய்கள் குணமாகும். அதோடு, ஏற்கனவே எந்த முறைகளில் யார் மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தாலும், மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தாலும் உடனடியாக அதை நிறுத்தத் தேவையில்லை. உங்களின் தியான வலிமைக்கு ஏற்பவும், மன்னிப்பு கேட்டு, மன்னிப்பு கொடுக்கும் மன நிலைக்கு ஏற்பவும் நோய்கள் படிப்படியாக குணமாகும். "ஐயும் ஓவும் ஒளவும் உயிரெழுத்தாய் மெய்யில் அமர்ந்து விளங்கியே நின்றவிடம் ஆதி ஈயும் ஊவோடு ஏயும் கூடிக் காயம் வளர்க்கும் கரணமது ஆமே." போகர் சப்த காண்டம் – பாடல் 412 ஆ : மந்திர ஒலியை அன்போடும், கருணையோடும் உச்சரித்தால் மனம் விரிவடையும் இதனால் மார்பு மற்றும் இதய நோய்கள் குணமாகும். ஈ : மந்திர ஒலியை ஆனந்தமாக வாய்விட்டு உச்சரித்தால் அழகாக வார்த்தைகள் வெளிப்படும். இதனால் தொண்டை தொடர்பான வலிகள் குணமாகும். ஊ : மந்திர ஒலியை உச்சரித்தால் செரிமானம் நன்றாக நடக்கும், உயிர் சக்தி பெருகும். இதனால் வயிறு தொடர்பான வலிகள் நீங்கும். ஏ : மந்திர ஒலியை உச்சரித்தால் கவனம் ஒருமுகப்படுத்தப்படும். இதனால், நெற்றி மற்றும் கோபத்தால் வரும் தலைவலிகள் நீங்கும். ஐ : மந்திர ஒலியை உச்சரிக்கும் போது உள்ளுணர்வு தூண்டப்படும். இதனால், பண பிரச்சனைகளால் வரும் தலை வலி நீங்கும். ஓ : மந்திர ஒலியை உச்சரிக்கும் போது, மன அமைதியும், நரம்பு மண்டலங்கள் முழுவதும் ஒத்ததிர்வுகள் மூலம் சீராக இயக்கப்படுவதால் நீண்ட நாள் தலை வலி, உடல் நோய்கள் அனைத்தும் படிப்படையாக குணமடையும் ஔ : மந்திர ஒலியை உச்சரிக்கும் போது, பிரபஞ்ச ஆற்றல் உள்ளிழுக்கப்பட்டு உடல் மற்றும் மன நோய்களை குணப்படுத்தும். ஒருவருக்கு உடலில் நோயும், மனதில் கவலையும் வருவதற்கு முழு முதற்காரணம், அவரால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரும், வேதனையும், கவலையும் தான் என்பதை உணரவேண்டும். எனவே, தன்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், தன்னை பாதித்தவர்களுக்கு மன்னிப்பு கொடுக்க வேண்டும். இந்த எண்ணத்தோடு இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது நோய்களும், வேதனைகளும், கவலைகளும் விலகி உடலும் மனமும் ஆரோக்கியமாகும். 5. செல்வ செழிப்பு இந்த மந்திரம் எப்போது யார் யார் உச்சரிக்க வேண்டும் !!! (இந்த மந்திரத்தை, புதிதாக வேலைக்கு செல்ல நினைப்பவர்கள், பதவி உயர்வை எதிர்பார்ப்பவர்கள், பொருளாதார ரீதியாக மென்மேலும் உயர நினைப்பவர்கள், வியாபாரம், சுய தொழில், புதிய தொழில் தொடங்குபவர்கள், புதிதாக வீடு, வாகனங்கள் அல்லது விரும்பியதை வாங்க நினைப்பவர்கள், திருமணத்திற்கு பணம் தேவைப்படுவோர், கடனை அடைக்க நினைப்பவர்கள், வருமானத்தை அதிகப்படுத்த நினைப்பவர்கள், பணத்தை சேமிக்க நினைப்பவர்கல் அனைவரும் இந்த மந்திரத்தைப் பயன்படுத்தலாம்). சித்தர் நெறியில், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே அதிர்வுகள் தான் (Vibrations). பணம் மற்றும் செல்வம் என்பதும் ஒரு வகையான ஆற்றல் (Wealth Energy). அதைத் தன்பால் ஈர்க்கும் கலைக்குச் சித்தர்கள் "தன ஆகர்ஷணம்" என்று பெயரிட்டனர். வள்ளுவர் தியான ஒலிகளான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய நெடில் உயிர் ஒலிகளை செல்வத்தை ஈர்க்கும் அதிர்வுகளோடு உச்சரிக்கவேண்டும். இதனால், உடலின் மிக முக்கிய நிதி ஆதாரச் சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம் மற்றும் மணிபூரகம் ஆகியவை தூண்டப்படும். இதன் மூலம் பிரபஞ்சதில் உள்ள செல்வ சக்திகளை ஈர்க்கப்படுவதால் உங்களுக்கு செல்வ வளம் படிப்படியாக சேரும். செல்வத்தை ஈர்க்க உறுதியான உழைப்பும், ஆழ் மனத்தெளிவும், உயர்ந்த சிந்தனையும், உதவும் உள்ளமும், நன்றி உணர்வும் இருக்க வேண்டும். இந்த நிலையில் தோன்றும் எண்ண அலைகளோடு (Abundance Mindset) மந்திர ஒலிகளும் இணைந்து உடலின் ஆற்றல் வளையத்தை (Aura) விரிவடையச் செய்கிறது. இது தான் உலகிலுள்ள அனைவருக்கும் பணத்தை ஈர்க்கும் “லட்சுமி கடாட்சம்” எனப்படுகிறது. ஆ, ஈ : செல்வத் தடைகளை நீக்கி, புதிய வாய்ப்புகளை (Opportunities) ஈர்க்கும் மந்திர ஒலிகள். ஊ, ஏ: விரும்பிய வேலைகளில் ஈடுபட்டு, தொழில் நுட்ப நுணுக்களுடன் லாபத்தை ஈர்த்துக்கொடுக்கும் மந்திர ஒலி அலைகள். ஐ: சித்தர்கள் 'ஐ' ங்காரத்தை மகாட்சுமி மற்றும் குபேர அம்சமான போற்றுகின்றனர். ஒருவருக்கு செல்வம், வளம், செழிப்பு, அதிகாரம், பெருமை, புகழ், சுகவாழ்வு, அனைத்து நலன்களும் நிறைந்த நிலை “ஐ” என்ற மந்திர ஒலியின் 'ஐஸ்வர்ய' செல்வ நிலையாகும். ஓ, ஔ: வந்த செல்வம் தங்கிப் பெருகவும், தர்ம சிந்தனை வளரவும் உதவும் ஒலி அலைகளாகும். செல்வ வளம் பெருகும் “குபேர வசியம்” மற்றும் “தன ஆகர்ஷண மந்திரம்”. "ஆவென நின்றே அகிலத்தை ஈர்த்திடும் ஈயெனக் குபேரன் நிதியினை அளித்திடும் ஐயெனு மட்சர மாலக்ஷ்மி தங்கிட வையக மெல்லாம் வளம்பெரு குமே!" ++++++++++++++பாடல் எண் ? விளக்கம் : "ஆ" ஒலி பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும்; "ஈ" ஒலி செல்வ வளத்தை வழங்கும்; "ஐ" ஒலி மகாலட்சுமியின் அருளை நிலைநிறுத்தும்; இவற்றை உணர்ந்து தியானிப்பவர்களின் வாழ்க்கையில் செல்வ வளமும் பெருகும். சித்தர்கள் காட்டும் 'தன ஆகர்ஷண' குபேர மந்திர பயிற்சி பண வரவை அதிகரிக்கவும், பொருளாதாரத் தடைகள் நீங்கவும் தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் (காலை 4.300 - 6.00 மணிக்குள்) வள்ளுவர் தியான பயிற்சி செய்ய வேண்டும். வள்ளுவர் தியானப்பயிற்சியில் கிழக்கு நோக்கிய நிலையில் 7 நிமிடம் தினமும் தியானம் செய்யவேண்டும். இதில் மஞ்சள் விரிப்பில் நிமிர்ந்து அமர்ந்து 'குபேர முத்திரை' (பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் நுனிகளை இணைப்பது) வைத்து தியானம் செய்யவேண்டும். =-=-= 6. பிறர் நலன் இந்த மந்திரம் எப்போது யார் யார் உச்சரிக்க வேண்டும் !!! (இந்த மந்திரத்தை, தன் குடும்பத்தாருக்கும், தன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், முக்கியமாக தனது எதிரிகளுக்கும், தனது துரோகிகளுக்கும், கண் முன்னே கண்ணீர் சிந்தும் மக்களுக்கும், துயரப்படும் உயிர்களுக்கும் நன்மை கிடைக்க பிரார்த்தனை செய்ய இந்த மந்திரத்தை பயன்படுத்தலாம்). எதிரிகளுக்கு புன்னகையை பரிசளியுங்கள் துரோகிகளையும் நேசியுங்கள் நோயாளிக்கு நேரத்தை ஒதுக்குங்கள் ஆபத்தில் கை கொடுங்கள் அனைவருக்கும் மன்னிப்பு கொடுங்கள் காலில் விழுந்தேனும் மன்னிப்பு கேளுங்கள் யாருடைய திறமையையும் பாராட்டுங்கள் கண்ணீரை துடைப்பதில் முதல் ஆளாக இருங்கள் கொண்டாட்டங்களில் கடைசி ஆளாக இருங்கள் அன்பு கொடுப்பவர்களுக்கு பேரன்பை கொடுங்கள் தனிமையில் சிந்தும் வலியின் கண்ணீர் பூமியை விட கனமானது ! பிறருக்காக சிந்தும் கண்ணீரின் துளிகள் எப்போதும் சுகமானது ! எனவே பிறருக்காக வாழவும் கற்றுக்கொள்ளுங்கள் ! உள் மனதில் உண்மையான அன்பு உருகி வந்தால் உன்னுள் இறைவனை நீயும் உணரலாம் ! உன் கண்களில் கடவுளின் அருள் பிறக்கும் நீ பார்க்கும் இடமெல்லாம் மகிழ்ச்சியின் ஒளி பறக்கும் ! இதைத்தான் திருமூலர் பாடியுள்ளார். "ஆ ஈ ஊ ஏ ஓ எனுமவ் வெழுத்தின்மேல் லாயீ உஊஏ ஓஎனும் அஞ்செழுத்து ஆயுங்கா லத்துள தாகும் பரானந்தம் பாயுஞ் சிவானந்தம் பாசம்விட் டோர்க்கே." (திருமந்திரம், பாடல் 923 / சில பதிப்புகளில் 890) விளக்கம் : ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ஆகிய உயிர்நாதங்களின் அடிப்படையில் ஈ, உ, ஊ, ஏ, ஓ ஆகிய ஐந்து மந்திர எழுத்துகளின் மறைபொருள் விளங்குகிறது. இந்த ஒலியின் சக்தியை உணர்ந்து தியானிப்பவர்களுக்கு உயர்ந்த பேரின்பம் உண்டாகும். உலகப் பற்றுகளான என் பணம், என் உறவு, எனக்கு சொந்தம் என தனக்கென எதையும் மனதில் வைக்கக்கூடாது. ஆனால் மனதில் “என்னையும் இறைவன் படைத்து, எல்லாம் கொடுத்திருக்கிறான், இதற்கான காரணம், என்னை இறைவனுக்கும், என்னிடமிருப்பது மற்றவர்களுக்கு கொடுப்பதற்கே” என்று உணர்ந்து செயல்பட்டால் உன்னுள் இறைவன் ஒளியாய் இருப்பான். ==============-============================= 7. வெற்றி இந்த மந்திரம் எப்போது யார் யார் உச்சரிக்க வேண்டும் !!! (இந்த மந்திரத்தை, தான் எடுத்த முயற்சிகளில் வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள், எந்த துறையாக இருந்தாலும், மாணவர்கள், விளையாட்டுப் போட்டிகள், அரசியல். வியாபாரம், தொழில், தேர்வு, குறிக்கோள், நீண்ட நாள் ஆசை, எதிர்பார்ப்பு, அதைவிட, தீராத சோகம், பிரிவு, கவலை, வருத்தும், ஏமாற்றம் உள்ளிட்ட எந்த மனம் வருத்தம் உள்ளதாக இருந்தாலும் இந்த மந்திரத்தைப் பயன்படுத்தலாம்). மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் எதையாது சாதிக்க வேண்டும் அல்லது எல்லோரும் புகழும் படி வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் எல்லோராலும் எப்போதும் வெற்றி பெற முடியவில்லை. ஒருவர் எதிலும் வெற்றி பெற தூய அன்பும், தன்னலமற்ற தர்மமும் தான் முக்கிய காரணம். இந்த தூய அன்பும், தன்னலமற்ற தர்மமும் தெளிவான இலக்கையும், கடினமான உழைப்பையும், தன்னம்பிக்கையும், துணிவையும், சரியான பாதையையும், சரியான நேரத்தையும், உறுதியான வெற்றியையும் கொடுத்தே தீரும். இது தான் ஒருவர் அடையக்கூடிய மிகச்சிறந்த மகிழ்ச்சியான வெற்றியாகும். ஒருவருக்கு வாழ்க்கையில் வெற்றியை விட மகிழ்ச்சியே முக்கியம். பலர் தன் வாழ்க்கையில் பள்ளியில், கல்லூரியில், விளையாட்டில், பல போட்டிகளில், வேலை தேடுவதில், காதலில், பணம் சம்பாதிப்பதில் மற்றும் பல்வேறு துறைகளில் வெற்றி பெறுகின்றனர். ஆனால், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கமுடியவில்லை. உண்மையில் மகிழ்ச்சி இல்லாத வெற்றி வெற்றியல்ல. ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதே மாபெரும் வெற்றியாகும். தூய அன்பை உணர்ந்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்க எதுவும் தேவையில்லை. அவரின் புன்னகையே பிறருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். பிறருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் எதுவும் தர்மமே. பிறரின் புன்னகை அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதில் வள்ளுவர் தியானத்தில் தனக்கு தேவையான வெற்றியை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்தால், வெற்றி பெற தேவையான அறிவையும் ஆற்றலையும் பிரபஞ்சத்திலிருந்து ஈர்த்துக்கொடுக்கும். "ஆதியும் ஈயும் ஊவும் ஏகமாய் சோதி மண்டல நடுவினில் நின்றதோர் நாத விந்து நடுப்பொருள் கண்டபின் வாதமும் சித்தியும் வசமாய் நிற்குமே." பதஞ்சலி யோக சூத்திரத் தமிழ் (பாடல் 19) விளக்கம்: ஆதியில் தோன்றிய உயிர் நெடிலெழுத்துக்களை புருவ மத்தியில் நிலை நிறுத்தி தியானிக்க வேண்டும். அப்படி தியானித்தால் நாதம் (உடல்) என்னும் ஆற்றல், விந்து (உயிர்) என்னும் அறிவு இணைந்து நடு பொருளான சுழும நிலை அல்லது இறை ஆற்றல் நிலையை காண முடியும். இதனால் 'வாதம்' என்னும் உடலாற்றலும்; 'சித்தி' என்னும் பேரறிவும் கிடைக்கப்பெற்று வெற்றி மேல் வெற்றியை குவிக்கமுடியும். =-=-= எதிர்காலத்தில் நாம் நினைப்பதை நம்மால் வீடியோவாக கம்யூட்டரிலோ, அல்லது மொபைலிலோ பார்க்க முடியும். அதே போன்று எதிர்காலத்தில் ஆண்களும் பெண்களும் இயந்திர பெண்களையும், இயந்திர ஆண்களையும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்வார்கள். எதிர்கால கணிப்பில் “வள்ளுவர் தியானத்தின்” மூலம் கண்ட சாட்சி நான். +++++++++++++++++++++++ ஆதி தமிழர்களுக்கு மதம் இல்லை ! சாதி இல்லை ! இனம் இல்லை ! உலகத்து மனிதர்கள் எல்லாம் என்னுடைய உறவுகள், உலகமெல்லாம் ன நான் வசிக்கும் இடம் என்று பெருமையோடு சொன்னவன் தமிழன் மட்டுமே. ஆன்மீகத்தின் முதல் பாடமாக ஞானத்தமிழர்கள் வாழ்ந்து காட்டிய முறை என்பது, தமிழர்களுக்கு சாதிகள் இல்லை தமிழர்களுக்கு மதங்கள் இல்லை தமிழர்களுக்கு மனிதர்களையோ, பிற உயிர்களையோ தரம் தாழ்த்தி உயர்த்தி பாகுபடுத்தும் எண்ணம் இருப்பதில்லை. எந்த மொழிகளையும் சிறுமைப்படுத்துவதில்லை, காரணம் எல்லா மொழிகளும் இறைவனின் மொழிகள் தான். எல்லா மொழிகளுக்கும் இறைவனின் சக்தி சமமாகவே உள்ளது. இதில் ஒரு மொழியை தீண்டத்தகாத மொழி என்று சொல்வது இறைவனைப் பற்றிய புரிதல் இல்லாத மனிதர்களின் புலம்பல்களாகும். இறைவனின் படைப்பில் வேறுபாடு இருப்பதில்லை -ஆனால் மனிதனின் பார்வையில் வேறுபாடு உண்டு. இந்த வேற்பாட்டை நீக்கவே தமிழர்களின் சங்க காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானத்தமிழர் “கணியன் பூங்குன்றனார்” புறநானூறு பாடல் எண்: 192 ல் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று எழுதியுள்ளார். அதாவது. உலகிலுள்ள எல்லா ஊர்களும் நம்முடைய ஊரே, உலகிலுள்ள எல்லா மனிதர்களும் நம்முடைய உறவினர்களே என்று எழுதி உலகத்தில் வாழும் நாம் அனைவரும் உறவினர்களே என்று அன்போடு அரவனைக்கிறார். இந்த சிந்தனையில் வாழ்பவர்கள் தான் இறைவனைக் காண முடியும் என்றும் இதை பின்பற்றுபவர்கள் தான் மனித தன்மையுடன் இருக்கமுடியும் என்று கூறியுள்ளார். இதன் மறை பொருள் பிறப்பால் வேறுபாடு பார்க்கும் சிந்தனை உடையவர்கள் மனித தன்மையுடையவர்களாக இருக்கமுடியாது என்று தெரிவிக்கிறார் ++++++++++++++++++++++++ மறை பொருள் : ஒளி (Light – Energy) தான் உயிர். ஓசை (Sound – Frequency) தான் உடல். இந்த இரண்டு சக்திகளும் இணையும் போது தான், அது உயிர் இயக்க சக்தியாகிறது. அது தான் உண்மையான உலகின் முழு முதலான ஒரே இறை சக்திகளாகும். =-=-=-= "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி" முழு பாடல், அதன் எண் அதன் விளக்கம் பைபிள் உலகம் கடலில் மூழ்கும் போது நோவா கப்பலில் சென்று குடியேறிய மலைப்பகுதி விளக்கம் தரவும் ? தமிழ் இலக்கியத்தின் தொன்மையும், விவிலியத்தின் வரலாற்றுப் பின்னணியும் கொண்ட உங்களுடைய இரண்டு கேள்விகளுக்கான விரிவான விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 1. "கல் தோன்றி மண் தோன்றா..." முழு பாடல் மற்றும் விளக்கம் பலரும் இந்த வரிகளைத் தனித்தனி வாக்கியமாக அறிந்திருந்தாலும், இது ஐயனாரிதனார் என்பவரால் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "புறப்பொருள் வெண்பாமாலை" என்ற இலக்கண நூலில் இடம்பெற்றுள்ள ஒரு வெண்பா ஆகும். பாடல் மற்றும் எண்: நூல்: புறப்பொருள் வெண்பாமாலை பகுதி: கரந்தைப் படலம் (குடிநிலை) பாடல் எண்: 35 முழுப் பாடல் வரிகள்: "பொய்அகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம் வையகம் போர்த்த வயங்குஒலிநீர் - கையகலக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி" பாடலின் பொருள் மற்றும் விளக்கம்: இப்பாடலுக்கு இரண்டு விதமான ஆழமான விளக்கங்கள் அறிஞர்களால் வழங்கப்படுகின்றன: அ) வரலாற்று மற்றும் புவியியல் ரீதியான விளக்கம் (வழக்கமான பொருள்): உலகம் முழுவதும் கடல் நீரால் (வயங்கு ஒலிநீர்) சூழப்பட்டிருந்த காலத்தில், மெல்ல மெல்ல நீர் உள்வாங்கி முதலில் நிலப்பகுதிகள் வெளியில் தெரிந்தன. அப்படி நீர் விலகிய போது முதலில் தோன்றியது மலையும் பாறையும் (கல்) ஆகும். அந்தப் பாறைகள் சிதைந்து, மட்கி மண்ணாக (வயல்வெளியாக) மாறுவதற்கு இடைப்பட்ட மிகப்பழமையான காலத்திலேயே, கையில் வாளேந்தி வீரத்தோடு தோன்றிய தொன்மையான குடி தமிழ்க்குடி (ஆதிகுடி) ஆகும். ஆ) திணைசார்ந்த நுட்பமான இலக்கண விளக்கம்: தமிழர்களின் ஐந்திணைப் பகுப்பில் முதலாவது மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி திணை (கல்). நான்காவது வயலும் வயல் சார்ந்த இடமுமான மருத திணை (மண்). அதாவது, மனிதன் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த வேட்டைச் சமூகக் காலத்திலேயே (குறிஞ்சி தோன்றி), அவன் ஆற்றங்கரைகளில் நிலைபெற்று விவசாயம் செய்யத் தொடங்குவதற்கு (மருத நில நாகரிகம் தோன்றுவதற்கு) முன்பே, கையில் ஆயுதமேந்தி வீரத்துடன் வாழ்ந்த மூத்த குடி தமிழ்க்குடி என்பதாகும். 2. நோவா பேழை குடியேறிய மலைப்பகுதி விளக்கம் விவிலியத்தின் (பைபிள்) ஆதியாகமம் புத்தகத்தின்படி, உலகம் பெருவெள்ளத்தால் (ஊழிவெள்ளம்) மூழ்கடிக்கப்பட்டபோது, கடவுளின் கட்டளைப்படி நோவா ஒரு பெரிய பேழையைக் (கப்பல்) கட்டிக் குடும்பத்தோடும் விலங்குகளோடும் தப்பினார். தரைதட்டிய மலை: பெருவெள்ளத்தின் நீர் வற்றத் தொடங்கியபோது, நோவாவின் பேழை தரைதட்டிய மலைத் தொடர் "அரராத் மலை" (Mount Ararat) ஆகும். "ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் மலைகளின்மேல் தங்கிற்று." (விவிலியம்: ஆதியாகமம் 8:4) மலையின் புவியியல் பின்னணி: • அமைவிடம்: இந்த அரராத் மலைத்தொடர் தற்காலத்தில் துருக்கி நாட்டின் வடகிழக்கு பகுதியில், ஆர்மீனியா மற்றும் ஈரான் நாட்டின் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. • அமைப்பு: இது ஒரு பனிமூடிய எரிமலைக் கூம்பாகும். இதில் பெரிய அரராத், சிறிய அரராத் என இரண்டு சிகரங்கள் உள்ளன. • வரலாற்று முக்கியத்துவம்: விவிலியத்தின்படி, இந்த மலையில் பேழை தரைதட்டிய பிறகே நோவா முதலில் ஒரு காகத்தையும், பின்பு ஒரு புறாவையும் வெளியில் அனுப்பினார். புறா ஒரு ஒலிவ மரத்தின் இலையைக் கவ்விக்கொண்டு திரும்பி வந்ததன் மூலம் பூமியில் நீர் வற்றி, தாவரங்கள் முளைக்கத் தொடங்கியதை நோவா அறிந்துகொண்டார். அதன் பிறகே பேழையில் இருந்த உயிரினங்கள் அனைத்தும் இம்மலைப்பகுதியில் இறங்கி மீண்டும் பூமியில் பெருகத் தொடங்கின. நோவாவும் பேழையும் குறித்த வரலாற்றுப் பின்னணி என்ற இந்தத் காணொளி, உலகத் தொன்மங்கள் மற்றும் வரலாற்றுப் பதிவுகளின் மீதான உங்களின் புரிதலை மேலும் ஆழமாக்க உதவும். நோவா பேழையில் குடியேறிய மக்கள் தமிழர்களா ? விவிலியத்தின் (பைபிள்) பதிவுகளின்படியும், வரலாற்று மற்றும் மானுடவியல் (Anthropology) ஆய்வுகளின்படியும் நோவா பேழையில் தப்பிய மக்கள் தமிழர்கள் அல்ல. நோவா மற்றும் அவரது குடும்பத்தினர் மத்திய கிழக்கு ஆசியப் பகுதியைச் சேர்ந்தவர்கள். எனினும், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பண்டைய நாகரிகங்களில் இந்த "பெருவெள்ளக் கதை" (Great Flood Myth) பொதுவான ஒன்றாகக் காணப்படுகிறது. நம்முடைய தமிழ் மரபிலும் இதற்கு இணையான ஒரு வரலாற்றுப் பதிவு உள்ளது. இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பையும் யதார்த்தத்தையும் சுருக்கமாகக் கீழே பார்க்கலாம்: 1. விவிலியத்தின்படி நோவாவின் வம்சாவளி விவிலியத்தின்படி பெருவெள்ளத்தில் நோவா, அவருடைய மனைவி, மூன்று மகன்கள் (சேம், காம், யாப்பேத்) மற்றும் மருமகள்கள் என மொத்தம் 8 பேர் மட்டுமே தப்பினர். • இவர்களிலிருந்துதான் உலக மக்கள் தொகையே மீண்டும் தோன்றியதாக விவிலியம் கூறுகிறது. • இவர்களின் மொழியும் கலாச்சாரமும் மத்திய கிழக்கு (ஹீப்ரு/செமிட்டிக்) பண்பாட்டைச் சார்ந்தது. எனவே, அவர்கள் நேரடியாகத் தமிழர்கள் என்று கூறுவதற்கு வரலாற்று ரீதியாகவோ, விவிலிய ரீதியாகவோ எந்த ஆதாரமும் இல்லை. 2. தமிழ் மரபில் "ஊழி வெள்ளம்" (கடல்கோள்) ஆச்சரியமாக, தமிழர்களின் மிகப்பழமையான வரலாற்றுப் பதிவுகளிலும் உலகம் வெள்ளத்தில் மூழ்கிய நிகழ்வுகள் "கடல்கோள்" என்ற பெயரில் விரிவாகப் பேசப்படுகின்றன. • முத்தமிழ் சங்கங்கள்: பண்டைய தமிழகத்தில் முற்காலத்தில் இருந்த 'தென்மதுரை' மற்றும் 'கபாடபுரம்' ஆகிய நகரங்கள் கடல்கோளால் (சுனாமி அல்லது பெருவெள்ளம்) கடலுக்குள் மூழ்கின என்று இறையனார் அகப்பொருள் உரை போன்ற தமிழ் நூல்கள் கூறுகின்றன. • மனு நீதிச் சோழன் / சத்தியவிரதன்: இந்துப் புராணங்களிலும் தமிழ் மரபிலும் 'மனு' (சத்தியவிரதன்) என்னும் அரசன் ஒரு பெரிய படகைக் கட்டி, பெருவெள்ளத்தில் இருந்து உயிரினங்களைக் காப்பாற்றியதாகக் கூறப்படும் 'மச்ச அவதார'க் கதை உண்டு. இந்த மனு என்ற பெயரே மருவி 'நோவா' (Noah) என்று மாறியிருக்கலாம் என்று சில மொழியியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால்: உலகையே மூழ்கடித்த ஒரு பெருவெள்ளம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்பதற்கான சான்றுகள் உலகம் முழுவதிலும் உள்ள தொன்மங்களில் (நோவா கதை, சுமேரிய கில்காமேஷ் காவியம், தமிழர்களின் கடல்கோள்) பொதுவாகக் காணப்படுகின்றன. ஆனால், அரராத் மலையில் தரைதட்டிய நோவாவின் குடும்பத்தினர் நேரடியாகத் தமிழர்கள் அல்லர். அவர்கள் மத்திய கிழக்கு நிலப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதே உலகளாவிய வரலாற்று அறிஞர்களின் ஒருமித்த கருத்து =-=-

Comments · Kural 1

RobertVot ★★☆☆☆ Aug 10, 2026

Hola, volia saber el seu preu.

VijiKannan ★★★★★ Aug 3, 2026

💥Wisdom 🪔to World💫wide

💯 Vow🫰

Fantabulous 👌 Fascinating 🪷

velraj ★★★★★ Jun 26, 2026

vanakkam

user1 ★★★★★ Jun 26, 2026

great

Leave a comment

Praise for the Kural

Thirukkural Reviews

“திருக்குறள் மனிதகுலத்திற்கு ஒரு உலகளாவிய வழிகாட்டி. அதன் ஞானம் காலத்தை வென்று மக்களை நல்வழிப்படுத்துகிறது.”
— டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
“Thirukkural is a universal guide for humanity. Its wisdom transcends time and inspires individuals to lead a life of righteousness and purpose.”
— Dr. A.P.J. Abdul Kalam